பக்கங்கள்

இனிய கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள்

கடந்த 1569 வருடங்களாய் உலகெங்கும் கிறிஸ்துமஸ் கோலாகலமாய் கொண்டாடப் படுகிறது.

அதெல்லாம் இல்ல, மேசப டொமியா காலத்தில இருந்தே என 4000 வருட பாரம்பரியம் காட்டினாலும் ஒகே. கொண்டாட்டம் தான முக்கியம், சந்தோசம் தான முக்கியம்.

இந்த கொண்டாட்டங்களின் சிறப்பு அம்சம் கிறிஸ்துமஸ் அடையாளங்களே. மெனக்கெட்டு செய்யப்படும் கிறிஸ்துமஸ் டெக்கரேஷன் சில பேருக்கும் ஒரு மாத உற்சாகம். கிறிஸ்மஸ் டிரி, குடில், ஸ்டார், வண்ண விளக்கு, சாண்டா கிளாஸ், நள்ளிரவு செபம், அன்பளிப்பு, இப்படி ஏகப்பட்ட சமாச்சாரங்கள். ஏன் கண்ணைப் பறிக்கும் சிவப்பு வண்ணம் கூட ஒரு முக்கிய அடையாளம்.

மாட்டுக் குடிலில் வைக்கோல் படுக்கையில் அன்பான டாடி ம்ம்மிக்கு கிடைத்த பரிசுதான் யேசு எனும் இறைமகன். வானம் வால் நட்சத்திரம் இட்டு மகிழ்ச்சி காட்ட, ஏஞ்சல் பண் இசைத்து வாழ்த்த, நடுங்கும் குளிர் இன்பம் பொழிய என காட்சிப் பிம்பம் செதுக்கிய அற்புத திருவிழா கிறிஸ்துமஸ். உலகின் மிகப் பரவலான கொண்டாட்டம் எனவும் சொல்ல்லாம்.

இது நம்பிக்கையின் நாள்.
நம்மை வழி நட்த்த, நெறி படுத்த மனு உரு எடுத்த இறையின் உதயம் இன்று. இருள் விலகட்டும்,
இனிமை பிறக்கட்டும்,
நம் நெஞ்சங்களில் மகிழ்ச்சி குடியேறட்டும்.

இனிய கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள்.

கிறிஸ்துமஸ் கொண்டாட்டம் புரிகிறது. அது என்ன பாக்ஸிங் டே. இத சொல்லி லண்டன்ல லீவெல்லாம் விடுறாங்களே, நாமளும் கிளவுஸ் போட்டு போய் குத்தணுமா. யாரன்னு சொல்லுங்க செஞ்சுருவோம் என கேட்கும் சில வாசகருக்காக இந்த பத்தி.

கப்பல் செய்து, திரை கடல் ஓடி திரவியம் தேடும் படகு தொழிலாளர்கள் வாழ்வு என்பது கேள்விக்குறி. அதுவும் தகவல் தொடர்பில் முன்னேறாத கால கட்ட்த்தில், தொடர்ந்தால் தொடரும், முடிந்தால் முடியும் இதுதான் எங்கள் வாழ்க்கை என சோர்வாய் இருக்கும் மனித்னை தட்டி எழுப்பி,

இங்க பாரு இது களிமண்ணால் செய்த பாக்ஸ், இதில் காசு போட்டு வைத்து இருக்கிறேன், இந்த பெட்டியும் நீயும் பத்திரமாய் திரும்பி வருவீர்கள். வந்த பின் இதை திறந்து ஏழை எளியவருக்கு கொடுப்போம், என பாதிரி கொடுப்பார்.

இவன் கடல் பயணத்தில் நம்பிக்கை இந்த களிமண் பெட்டிதான். நல்ல படியாய் கரை திரும்ப வேண்டும் என இவனும் இதில் காசு போடுவான். வெற்றிகரமாய் திரும்பி வந்த பின் சந்தோசமாய் அந்த பெட்டியை உடைத்து பங்களிப்பதே இந்த பாக்ஸிங் டே.

கிறிஸ்துமஸின் அடுத்த தினம் நம்ம பாக்ஸிங் டே..... அதுக்கும் வாழ்த்துக்கள்.

கடைத் தெரு..... மிக்க நன்றி

கடைத் தெரு.....

தரமான பொருட்களை நேர்த்தியாக பொட்டணம் இடும் வலையுலக தளம். சமூக பொறுப்புடன் விசாலமான பார்வையில் தரம் மிகுந்த தமிழ் படைப்புக்களை நாம் படிக்கலாம். நண்பர் இன்பாவுக்கு மென்மேலும் வெற்றி பெற வாழ்த்துக்கள்.
’டாடி ஐ லவ் யூ’ எனும் பதிவு, மரணத்தை பற்றி ஆழமாய் உணர்த்துகிறது என பாராட்டிச் சொல்லி அவர் சில மாற்றங்கள் செய்து பதிவிட்டு இருக்கிறார்.
கீதையில் தொடங்கி வேதாகமத்தில் முடித்த, பாங்கில் மதம் கடந்து மனதை நெகிழ்கிக்கிறது. வாசகருக்கு உடன் ஏதாவது செய்யுங்கள் எனும் கோரிக்கையுமாய் புது பரிமாணத்தில் மின்னுகிறது.
http://kadaitheru.blogspot.com/
மிக்க நன்றி.

மரியாதை

நம்ம இடக்கு மடக்கு காரர் அடிக்கடி சொல்லுவாரே .... மரியாதையா ’மரியாதய’ ஆஸ்கருக்கு !!! அனுப்புங்கப்பா, அம்புட்டு ஆஸ்கரயும் அள்ளிக்கிட்டு வந்துரும்னு... அது கிடையாது. இது வேற மேட்டர்.

டேய் அவசரமா தேங்கா சில்லு வேணும்.

போய் மேட்டுக்கடையில் வாங்கிட்டு வா. பஸ்ஸ்டாப்பு அண்ணாச்சிகிட்ட போறேன்னு நேரத்த சுணக்காத, என அம்மா உச்சஸ்தாயியில் சொல்ல, நம்ம பொடியன் யோசிக்கிறான்.

அது ஏன் நமக்கு பஸ் ஸ்டாப்பு பக்கத்தில இருக்கிற அண்ணாச்சிய பிடிச்சுது. தூரம் அதிகந்தானே. மேட்டுக்கடை இங்கனக்குள்ள இருக்கு, அத விட்டுபுட்டு நடையா நடந்து அங்க ஏன் போகணும்.

ம்... அங்க போனா மரியாதயா வாங்க என்ன வேணும் என்பார். பார்வையிலும், நட்த்தையிலும், பேச்சிலும், வார்த்தையிலும் மரியாதை இருக்கும். இதுவே மேட்டுக் கடையில் என்னல வேணும் என ஒருமையில் பேச்சு, அசிரத்தையாய் பொதியும் பேப்பர் பொட்டணம், என வாங்கும் அனுபவம் சங்கடமே.

என்ன இது மரியாதை வேண்டி தான், என் மனம் அலைகிறதோ....

எப்படி தொடங்கியது. நினைவுகள் கிண்டி இந்த நிகழ்வை சொன்னது.

ஒரு நாள் குளிக்கிற சோப்பு வாங்க சென்ற போது, எள் போட்டா எண்ணையாகும் கூட்டம். அண்ணாச்சியும் பாவம் வேர்த்து விறுவிறுத்து தளர்ந்து இருந்தார். என்னவோ தோணுச்சு. அங்கன இருந்த பானைத் தண்ணீருல ஒரு டம்ளர் மோந்து அண்ணாச்சி குடிங்க என்றேன்.

எதிர் பார்க்க வில்லை போலும். சிரித்த முகமாய் வாங்கி மொடக் மொடக் என குடித்தார். என்ன வேணும் ரகசிய குரலில் கேட்டார். பரவாயில்ல அண்ணாச்சி, கூட்ட்த்த பாருங்க. மீண்டும் அதே ரகசிய குரலில் பதில்.

பரவாயில்ல என்பதாய் சொல்லு என்றார். நான் வாங்க வேண்டிய சோப்பை கை காட்ட டக்கென எடுத்து கொடுத்தார். நானும் கையில் இருந்த காசை கொடுத்து விட்டு, சில்லறை அப்புறமா வாங்கிக்கறேன், என விறு விறுவென நடந்து விட்டேன். அன்று தொடங்கியது இந்த மரியாதை.

நம்பிக்கை,
உயர்வான அபிப்பிராயம்,
இந்த உறவு வேண்டும்
எனும் நினைப்புக்கள் நம்மை மரியாதையாக்கும்.

காந்தி தாத்தா சொன்னது போல், நம் மரியாதை நம்மிடம் உள்ளது, அது அடுத்தவர் இட்த்தில் இருப்பதாய் நினைப்பதே நம் பிரச்சனையின் ஆணி வேர்.

புத்தியை சிறையில் அடை !!!

என்னடா படுக்காளி, ஆன்மிகம் பத்தி எழுதவே மாட்டேன்னு இருந்தியே.... தலைப்ப பாத்தா கொள்கையில கொப்பரை போல இருக்கே என அவசர தீர்மானம் வேண்டாம்.

இந்த அமெரிக்கா நகரத்திலே, அதிபருக்கு எதிராய் எழுதப்பட்ட ப்ளாக்ஸ்பாட்டின் தலைமை வலைஞர் அண்ணன் விக்ரம் புத்தியை சிறைப்படுத்தி விட்டார்கள்.

கர்நாடக மைந்தன், ஆந்திராவில் பயின்று, ஐஐடி யில் ஜல்லியடித்து விட்டு, இன்று அமெரிக்காவில் கம்பி எண்ணுகிறார். புஷ் அரசுக்கு எதிரான கொள்கைகளை தன் வலைப்பதிவில் சொன்னதால் என்றதும், லேசாய் கதிகலங்கித்தான் விட்ட்து. ப்ளாக்ல எழுதுனா கம்பி எண்ணனுமான்னு...

அப்புறம் பாத்தாத்தான் தெரியுது, வண்டவாளம் தண்டவாளம் ஏறின கதை. கருத்து சுதந்திரம் என்பது வளர்ந்த நாடுகளில் சாஸ்வதம். நம் சுதந்திரம் நாட்டுக்கு குந்தகம் விளைவித்தால் குற்றமே.

சமூக சிந்தனைக்கு ஒரு சல்யூட், சறுக்கிய சிந்தனையில் வன்முறைக்கு வித்திட்ட விவகாரத்துக்கு ஒரு எச்சரிக்கை.

முன் காலத்தில் சட்டம் ஒழுங்கு மீறியவர்கள், மனிதர்களே அல்ல, அவர்கள் மிருகமே என்றார். சில்வா மைண்ட் கண்ட்ரோலில் கூட சராசரி மனிதனால், 18 ஹெர்ட்ஸ்க்கு மேல் மூளை சிந்திக்கவே முடியாது. அதனால் தான் நம்மால் கொல்ல முடியாது என்பார். மனிதம் இல்லாதவரை விலங்கை போல் கூண்டில் அடைத்து வைத்த பழக்கமே சிறைச்சாலை.

மனம் ஒரு தங்கத்தட்டு. எல்லாம் நல்லது வைத்துவிட்டு ஒரு துணுக்கு மலமும் இருந்தால் நமக்கும் நாட்டுக்கும் எந்த பிரயோசனமும் இல்லை.

பேரையும் வைச்சுட்டு அது இல்லைன்னா எப்படி சார்.....

உங்க பொழைப்புக்கு ஊர உபத்திரவிக்கலாமா.

கோமாளாக்கா !!! கேட்டீகளா சேதிய....

வாங்க கோமதியக்கா, தண்ணி பிடிக்கும் போது ஊர் வம்பு இல்லயேன்னு தவிச்சுக்கிட்டு இருந்தேன். தவிச்ச
வாய்க்கு தண்ணி கிடைச்சுது.

நம்ம கோடிவீட்டு குப்பம்மா வீட்டுல குடித்தனத்துல குத்து வெட்டு.

ரோடே மறிச்சு பந்தல் போட்டு கல்யாணம் பண்ணாளே... பகுசு பரங்கிக்காய், பத்தலேன்னா பப்பரக்காய்!

ஆமாக்கா, மூணாம் மாசத்திலயே தலையண மந்திரம் ஒதி, வீட்ட பிரிச்சுட்டா அந்த மாராசி. !!!!
யாரு ?? ...
வேறாரு.... அவ மருமவதேன்.... ஒண்ட வந்த பிடாரி ஊர் பிடாரிய துரத்திருச்சாம்.

யேக்கா.... சின்ன புள்ளயா, வெக்கப் படக் கூட தெரியாம இருந்த பிள்ளையா இந்த போடு போடுது.

ஆள பாத்து கணக்கு போடாதக்கா, இந்த ஊரிலேயே வெள்ளந்தியா இருக்கது நீயும் நானும்தேன்....

நாலு பிள்ளைகள வைச்சு கூட்டு குடித்தனம் செஞ்சவளாச்சேடி குப்பம்மா, இத பாத்துக்கிட்டு ஒவ்வொண்ணும் பிச்சிக்குமே....

வீடு கலைந்த கவலை குப்பம்மாக்காவுக்கு, மாநிலம் பிரிந்த கவலை படுக்காளிக்கு.

அறவழியில் உண்ணாவிரதம் என தலைவன் முடிவெடுக்க, அடிச்சு உதைச்சு ஊரேயே ஸ்தம்பிக்க வைக்கணும்னு தொண்டர்கள் தடியெடுக்க, ஆந்திரா கொஞ்சம் ஆடித்தான் போனது.

ஆட்டம் இன்னும் நின்ற பாடில்லை,

அதற்குள் எங்களையும் பிரிச்சு விட்டுருங்க என வெட்டி வீரர்கள் கிளம்பிவிட்டார்கள். தமிழகத்தையும் சேர்த்து ஒன்பது மருமக்கள் தனி குடித்தனம் வேண்டி மாமியிடம் முறையிடுகின்றனர்.

நல்ல வேளை கலகத்தில் குதித்த கழகங்களில் திராவிடர் இல்லாமல் உழைக்கும்களிடம் இந்த கோரிக்கை இருப்பதால் பரவாயில்லை.

வேலை இல்லாத மாமியார் பூனைய பிடிச்சு விளையாண்டாங்கிற கதையா, இந்த பிரிவினை போராட்டம் எல்லாம் அலார்ட்டா வெளாடுறது அவசியம்.

எல்லை கோட்டின் வரைவே இன்னும் பஞ்சாயத்துல இருக்கும் போது, வீட்டுக்குள்ள சண்டை நம்மைத்தான் பலவீனப் படுத்தும்.

மக்களே!!
மக்களின் மக்களே!!! குடி மக்களே,
அரசியல் பெருங்குடி மக்களே
உங்க பொழைப்புக்கு ஊர உபத்திரவிக்கலாமா.

தந்தை தவறிய போது

நண்பா!!!!
சொன்னதை செய்து விட்டேன்.

நான் உணர்ந்த்தை உரை நடையில் சொல்ல, கவி நடையில் சொல்லேன் என னிய நண்பர் சொன்னார்.

தந்தை தவறிய போது ....

சொல்லத் தவறினேனே,
சொல்லாய் சொல்லியிருக்க வேண்டுமே,
நடு வீட்டில் உடல் கிடத்தியபோது,
உணராத உடலிடம்,
எறும்பு உலாவிய கைகளில்,
ரோஜா மலருக்கிடையில் மரணமடைந்தவரிடம்
டாடி ஐ லவ் யூ என திரும்ப திரும்ப சொன்னேன்....

இன்னும் நான் பார்த்திருக்கணுமோ.... தவறி விட்டேனோ,
காலனிடம் நீங்கள் கால அவகாசம் வாங்கியிருக்கணுமோ.
கேள்வி க(ள்)ல் சிந்தையில் எறிகிறது.
வேள்வித்தீயில் உணர்வு எரிகிறது.

என் எல்லாமே தங்கள் பிச்சைதானே, உடல், படிப்பு, எண்ணம்
நான் உங்கள் மறுபிம்பம் தானே....
நன்றி அவசியமில்லையோ.
வார்த்தை வன்முறையோ.

ஏன் இந்த அழுகை, புலம்பல்.
யோசித்த்தில் புரிகிறது.
எனக்கு பிடித்த கவித்துவத்தை சிந்தையில் கலந்த்தும்,
தத்துவ தர்க்கத்தை தனதாக்கிக் கொண்ட்தும்.
கண்ணீரை பிரசவிக்கின்றன.
ஏக்கத்தை மூச்சில் கலப்படம் செய்கின்றன.
இல்லையேல் எண்பது வயசு தகப்பன் சாவு சமனம் தானே.

போன விடுப்பில் உங்களை பார்த்தேன்.
ஆள் பாதியாய்.
ஆடையில் பாதியாய்,
இடுப்புப் பட்டி இல்லாவிடில் கால் சட்டை தரை தவளும்.
கன்னத்து சதை காற்றில் கரைந்திருக்க,
கண்களிடத்தில் கருங்குழி கவிதை வாசித்திருந்ததே....
கோர்வை இல்லா பேச்சு,
நிச்சயமில்லா நினைவு
என காலம் தங்களை கலைத்திருந்தனவே

சொன்னா கேக்குறதில்ல, சுகரெல்லாம் இருக்கு,
பிஸ்கட் சாப்பிடலாமா என அக்கம்
அக்கரையாய் சொன்ன போது
பொக்கை வாய் காட்டி பதிலேதும் சொல்லாமல்,
அலங்க மலங்க பார்த்த்துமே புரிந்த்து.
நான் அறிந்த தந்தை காணாமல் போயாச்சு..

மலர்ந்த சிரிப்பு, நிமிர்த்திய தோள்,
வீசிய கை என நீங்கள் நடந்தால்
நாங்கள் பெறுமையுருவோமே,
இதெல்லாம் ஒண்ணுமில்ல, போனாப் போகுது
என பிரச்சனை சுனாமி குடும்பத்தை
பதம் பார்க்க வந்தபோது உரமாய் உரைத்தீரே
நான் இருக்கிறேன் குடும்பத்துக்கு என நம்பிக்கை விதைத்தீரே.
எங்கே அந்த தந்தை....

இப்போது பார்த்தேன், அடுத்த முறை பார்ப்பேனா,
தெரியாது என பதில் சொல்லி,
விதைத்த நினைவினால் அருகமர்ந்தேனே...
வெற்றுப் பார்வையில் அலறும் மெளனத்தில்
பூங்காவில் இருந்தோமே... பூப்போல
- பூவுக்கு மத்தியில்
கடமையெல்லாம் முடிஞ்சுச்சு, கடவுள் கூப்பிட்டா போ வேண்டியதுதான்,
என மரணத்துக்கு புது விளக்கம்.

விநோதமாய் பார்த்தேன்,
கடமை முடிக்கும் தளமாய்த்தான் வாழ்வை கொண்டீர்களா,
அவசரக்குடுக்கையாய் அறிவுரை சொல்லாது,
வேறு என்ன ஆசை,
உடுக்கணுமா, உண்ணனுமா, சினிமா போகணுமா,
அரைகுறையாய் ஜோக் சொல்லி சிரிக்க வைக்க நான்,
கிடந்தால் தேவல, பையன் பேசிக்கிட்டே போறானே
என உள்ளுக்குள் என உள்ளுக்குள் நினைத்திருப்பீர்களோ....

புரியாத மரணத்தில் பயமே பிரதானம்,
வெல்ல முடியா இயற்கையில் இயலாமையே பல் இளிக்கும்.
அன்பாய் அலட்டாமல்... தெரியுமப்பா என சாவ முடியுமா.
இல்லை, உறக்கத்தில் மறைந்த்தும்,
மடிப்பு கலையாத போர்வையிலும்
மரணத்தை நீங்கள் வென்று விட்டீர்கள்.

ஆன்மாவெல்லாம் கிடையாது,
அடம் பிடிக்கும் அறிவியல்.
உடம்பு தான் மனிதன் அதை தாண்டி ஒன்றும் இல்லை,
செத்துப் போன காரணம்... இதயம் நின்று போனது
என மூர்க்கமாய் முழங்கும்.
ஏன் நின்றது...
அது அப்படித்தான் என
அறிந்த்தை மட்டும் அறிவியல் சொல்லும்

தெரிந்ததில் தொடங்கி தெரியாது என முடிப்பது ஆன்மீகம்
தெரியாததில் தொடங்கி தெரியும் என முடிப்பது அறிவியல்

ஆவியை இறைவனிடம் ஒப்புக் கொடுக்கிறேன்
எனும் எண்ணத்துக்கு,
என்னத்துக்கு !!!
என கேட்டு அறியாமை என அட்ரஸ் தரும்.
ஒதுக்கி வைக்கப்பட்ட மனஇயல் கூட
பிற்பாடு ஒட்டிக் கொண்ட்து.
இன்று ஆன்மீகம் ஆசிரமம் தாண்டி
ஆஸ்பத்திரியில் நுழைகிறது.
ரெய்க்கி, பிரானிக் ஹீலீங் எனும்
அப்பல்லோவின் புதிய முயற்சி
ஆச்சர்யதின் அஸ்திவாரம்.

அன்னைக்கு இலக்கிய புலமை,
ஏறக்குறைய எல்லாம் தெரியும் சங்கமோ சமகாலமோ....
தமிழும் கிடைக்காத போன கிரந்தமும் விரல்நுனியில்,
கல்வெட்டின் முனைவர் எனும் முயற்சியும் முற்றுப் பெறாமல்
காலன் வந்து உயிரைப் பறித்த போது,
கோபம் தீயாய் கழன்றது.
எங்கே புலமை, எங்கே உயிர்.
இதுதான் வாழ்க்கைன்னா எதுக்கு வாழணும்.

உங்கள் இன்றும் அதே மரணம் உங்கள் மரணம்,
வேறு திசையில் இழுத்து செல்கிறது.

கவலைப் படவோ அலட்டிக் கொள்ளவோ ஒன்றும் இல்லை,
என சமனமாக்குகிறது.

மறைமுகமாய் என் மரணத்திற்கு பறை அறைகிறது
அதன் ஒலியில் என் செவிப்பறை கிழிகிறது
என் பதவிசு, பொக்கிஷம், கவலைகள்
சுவடு தெரியாமல் காணாமல் போகிறது.
என் மரணம் பற்றிய தீர்மானத்தில்
வாழ்வு வேறு ஒரு திசையை காட்டுகிறது.

நித்திய வாழ்வு எல்லாம் பொறகு பார்க்கலாம்.
என் இன்றைய தெளிவு நித்தியமாகட்டும்.

டாடி ... !!! ஐ லவ் யூ...

கை பற்றி, மெல்லமாய் அழுத்தி, கண்கள் நேருக்கு நேர் சந்தித்து டாடி ஐ லவ் யூ.... என சொல்லி இருக்க வேண்டும். அப்போது சொல்லாமல், என் தந்தை இறந்து அவர் உடல் நடு வீட்டில் கிட்த்தியபோது அழுது கொண்டே ... டாடி ஐ லவ் யூ
திரும்ப திரும்ப மனம் சொன்னது. கண்கள் என் கட்டுப்பாடின்றி கண்ணீர் சிந்தியது.

அந்த வெப்ப நீர் பார்வையை மறைத்தது.. வெளி உலக பிரஞ்கை இன்றி எனக்குள் பேசிக் கொண்டு இருந்தேன்.

சாரி டாடி... இன்னும் உங்களை பார்த்திருக்கணுமோ. தவறி விட்டேனோ. ஒரு மனுசனாய் இருக்க வைத்ததே நீங்கள் தானே. இந்த உடல், உள்ளம், படிப்பு, சோறு, வாழ்க்கை தரம் என எல்லாம் நீங்கள் தந்தது தானே. பிறந்த நிலையில் நான் இருந்திருந்தால் அன்றே இறந்திருப்பேனே... தங்கள் கருணைக்கு.... நன்றி என வாய் வார்த்தையாய் சொல்லவில்லையோ.

நன்றி என எப்படி சொல்வேன், நான் உங்களின் மறு பிம்பம் தானே.

ஏன் இந்த அழுகை. ஏன் இந்த புலம்பல். ஏன் துயரம். மரணம் தெரியும் தானே. ஓ புரிகிறது... மெல்லிய உணர்வான கவிதையை என்னுள் கலந்து விட்டதாலும், தத்துவ சிந்தனையை என்னுள் தக்க வைத்து கொண்டதனாலேயும் தான் இந்த துயரம். இரண்டும் இல்லை எண்பது வயசு தகப்பன் சாகும் போது சமனம் தானே .

ஆறு மாதம் முன்பு விடுப்பு எடுத்து வந்த போது நானாய் நினைத்து கொண்டேன். அடுத்த முறை உங்களை உயிருடன் பார்ப்பேனா...... மனதினுள் கேள்வி கேட்டு. தெரியாது, சரியாய் சொல்லவும் தெரியாது என பதிலும் யோசித்தேனே. அந்த நினைப்பு வந்த்தால், உங்கள் அருகில் அமர்ந்து நிறைய நேரம் பேசினேனே. மெல்ல தோள் அணைத்து உங்கள் மறுப்பையும் மீறி, அருகில் இருந்த பூங்கா சென்று அமர்ந்தோமே. நீண்ட நேரம் உங்களை பேச விட்டு கண்கள் மூடி கேட்டேனே.
சுகர் இருக்குது, பிஸ்கட் சாப்பிடலாமா, என அக்கம் அக்கரையாய் சொன்னபோது, மலங்க மலங்க விழித்து, பொக்கை வாய் காட்டி சிரித்தீர்களே.... அப்போது புரிந்தது. நான் அறிந்த தந்தை காணாமப் போயாச்சு. ஆள் பாதியாய், ஆடையில் பாதியாய், கன்னத்து சதைகளை காற்றுக்கு கொடுத்து விட்டு, கண்களில் கருங்குழி கவிதை வாசித்திருக்க..... காலம் தங்களை சிதைத்து தான் இருந்தது.

அவசரக் குடுக்கையாய் அறிவுரை எல்லாம் சொல்லாது, எல்லாம் தெரிந்ததாய் நான் நடிக்காது, மழலையின் மன நிலையில் உங்களிடம் நான் கேட்டேன்... வேறு என்ன ஆசை. எதுவும் சாப்பிடணுமா, எதுவும் வேணுமா, சினிமா போகணுமா, உடுப்பு எதுவும் வேணுமா.... இதமான புன்னகையில் மறுத்து சிரித்த போது.............. உலகில் அழகு நீங்கள் தான் என தோன்றியது.

மெல்லிய வார்த்தையில் உங்கள் வாழ்வு வெற்றிகரமானது. உழைப்பால் முன்னேறி, நல்ல ஒரு குடும்பம் சமைத்த்தை நினைவு கூர்ந்து எல்லாம் நல்லதே என நாம் இருவரும் கருத்தில் இணைந்தோமே. மெல்லிய அந்த உணர்வு நம்மை இணைத்ததே... புனிதம் இறையியம் என்பது எனக்கு புரிந்தது.

எல்லா கடமையும் நல்ல படியா முடிஞ்சுச்சு, மேல இருக்கிற ஐயா எப்போ கூப்பிட்டாலும் ரைட்டு என குண்டி மண்ண தட்டி விட்டு போக வேண்டியது தான் என நயம்பட சொன்னீர்களே. தூத்துக்குடி காரர் நீங்கள், கடல்கரை மண்ணில் உட்காருவதும், எழுந்து உடைகள் சரி செய்வதும் என் நினைவுக்கு வந்த்தே. வாழ்க்கை என்பது நம் கடமைகள் நிறைவேற்றும் .... அல்லது பொறுப்புக்கள் முடிக்கும் தளமாய்த்தான்.... யோசித்தீர்களா.

நீங்கள் வாழ்வை ரசித்தீர்களா, இன்பம் துய்த்தீர்களா. ஐயா கூப்பிட்டா போக வேண்டியது தான் எனும் வார்த்தை பிரயோகத்தில் இறை நம்பிக்கையும், அன்பு கலந்த வாஞ்சையும் தெரிகிறது. இறைவனை காதலனாகவும், வேலைக்காரனாகவும் பார்க்கும் பாரதியின் பக்குவம் இதை சொல்லிக் கொடுத்ததோ...

மரணம் மனிதனுக்கு முழுதும் புரியாதது.

ஓங்கி நிற்கும் குழப்பத்தில் பயமே பிரதானம். வெல்ல முடியாத மரணத்தில் இயலாமையே பல் இளிக்கும். சே !!!! என்னடா இது நாமளும் செத்துப் போவோமே என கோபம். ஏனோ தெரியவில்லை, அமைதியாய் அன்பாய்... ஆங்.... தெரியுமப்பா பிறந்தால் இறப்போம் என அலட்டிக் கொள்ளாமல் அமைதியாய் மரணிக்க கடினம் உள்ளதே. எங்களுக்கெல்லாம்............ !!!!

உங்களுக்கு எப்படி....... ????

இல்லை. தூக்கத்தில் பிரிந்த தங்கள் உயிர், மூடிய போர்வை விலகாத விந்தை, எனக்கு தாங்கள் மனித இயலாமையை மீறியதாய் தோன்றுகிறது. முரண்டு பிடிக்காது, அன்புடன் மரணத்தை
முத்தமிட்டதாய் தோன்றுகிறது.

அறிவியல்,............. மனிதன் என்பவன் உடல் தான் அதைத்தாண்டி ஒன்றும் இல்லை... என அடம் பிடிக்கும். ஆரம்பத்தில் ஒத்துக் கொள்ளாத மன இயல் கூட பிற்பாடுதான் ஒட்டிக் கொண்டது. இன்றோ......... ஆன்மீகம் சில ஆஸ்ரமங்களை கடந்து ஆஸ்பத்திரியில் நுழைந்து இருக்கிறது.

புற்று நோயால் பாதிக்கப் பட்ட நோயாளிகளுக்கு பிராணிக் ஹீலீங், ரெய்க்கி என தனி பிரிவு அமைத்து அப்பல்லோ எனை ஆச்சர்யப்படுத்தியது.

மதங்கள் மனித குலத்துக்கு செய்தது என்ன........ நித்திய வாழ்வு, சொர்க்கத்தில் சுகம்........ என மதங்கள் எத்தனை மத்தளம் வாசித்தாலும் சராசரி மனிதன் சஞ்சலம் தீரவில்லை.

ஆமா... யில்ல!!! என சொல்லிவிட்டு ; இல்ல..... ஆமாம்!!! என சிந்திக்கிறான்.

என் அன்னை இறந்த போது, எனக்கு வாழ்க்கை மேல் ரெளத்திரம். கோபம் பொங்கிக் கொண்டு வந்தது.

எனை பெற்றவளுக்கு தமிழ் இலக்கியத்தில் நல்ல புலமை. சங்க, சமகால இலக்கியத்தில் ஏறக்குறைய எல்லாம் தெரியும். எந்த கடின வார்த்தையாயினும் அர்த்தம் தெரியும்.
தமிழ் மொழி மட்டுமின்றி, நான் அறியாத........... அழிந்து போன கிரந்தம் எல்லாம் தெரியும். கல்வெட்டில் முனைவர் ஆக முயற்சி வேறு.

அரைகுறை தமிழ் தெரிந்த நான் வெட்கத்தில் தலை குனிந்து ... சே! எப்போ இதெல்லாம் தெரிஞ்சுக்குவேன் என ஏக்கப் பார்வை இட வைத்த அன்னை மறைந்த போது.

இவ்வளவுதானா. எங்கே அந்த ஞானம், எங்கே அந்த புலமை. என திரும்ப திரும்ப கேள்வி பிறந்து, போச்சா.... மூச்சோடு அதுவும் போச்சா... இது தான் வாழ்க்கைன்னா எதுக்கு வாழணும். எதுக்கு கஷ்டப்படணும் என சிறு குழந்தை போல் திகைத்து நின்றது என் பகுத்தறிவு.

எதுவுமே எதற்குமே அர்த்தம் இல்லை என்பதாய் அவசர தீர்மானம் செய்தது.
....குழப்பத்தில், முடிவு எடுக்காமல் முற்றிப் போயிற்று அந்த எண்ணம்.

ஆனால் தங்கள் மறைவு எனை சமனமாக்கியது. இவ்வளவு தாண்டா வாழ்க்கை, பெரிசா அலட்டிக்கிறதோ, கவலைப்படறதோ அவசியமில்லை. என எதிலும் சாராமல் உணர்வுகள் அனாதையாய் இருக்கின்றன.

தங்கள் மறைவு எனக்கு மறைமுகமாய் என் சாவு பற்றி பறை அறைகிறது. அதன் ஒலியில் என் செவிப்பறை கிழிகிறது. என் பதவிசு, பொக்கிஷம், கவலைகள் சுவடு தெரியாமல் காணாமல் போயிற்று. என் மரணம் பற்றிய தீர்மானத்தில் வாழ்வு வேறு ஒரு திசையை காட்டுகிறது.

நித்திய வாழ்வு எல்லாம் பொறகு பார்க்கலாம். என் இன்றைய தெளிவு நித்தியமாகட்டும்.

ஐ லவ் யூ டாடி.....

ஆச்சி படுக்காளி அஞ்சரைப்பெட்டி 17/11/09

கல கல வென சிரித்தபடி படுக்காளி உள்ளே வர, புகைப்பட்த்தில் இருந்து ஆச்சி எட்டிப் பார்த்தார்.

ஆச்சி : என்னடா, கடுகு வெடிச்ச மாதிரி ஒரு சிரிப்பு, சொல்லிட்டு சிரிச்சா, நாங்களும் சிரிப்போம்ல.

படுக்காளி : ரோட்டுல ஒரு சுவாரசியம், ரெண்டு லவ்வர்ஸ் வாயால பேசாம கண்ணால பேசிக்கிட்டு இருந்தாங்க,
ஆச்சி : எது, நம்ம கமல்ஹாசன் பேசும் படம் மாதிரி.... ரோட்டில பராக்கு பார்த்தியா, மேல சொல்லு
படுக்காளி : அந்த பஸ் ஸ்டாப்புல, நான், அந்த லவ்வர்ஸ் பஸ்ஸுக்காக காத்துக்கிட்டு இருக்கோம். எங்கள கடந்து போன ஒரு ஆசாமி சத்தம் போட்டு தனியா சிரிச்சுக்கிட்டே போனாரு.

ஆச்சி : ஐயோ... பாவம்,

படுக்காளி : நானும் அப்படித்தான் நினைச்சேன், ஆனா அந்த பொண்ணு கண்ண சுழற்றி, இட்து பக்கம் காட்டி அந்த லவ்வர பார்த்துச்சு. லவ்வர் பையன் திரும்பி பார்த்தான். நானும் அங்க என்ன இருக்குன்னு பார்த்தேன். அது ஒரு பேங்க் ஏடிஎம். ஒண்ணும் புரியல. திரும்பி அந்த பையன பார்த்தேன். அவன் வாய் விட்டு சிரிச்சான்.
ஆச்சி : என்னடா இது, எனக்கும் தட்டல, உனக்கும் முட்டல , லவ்ஸ் மூடுல இருந்தாத்தான் விளங்குமோ

படுக்காளி : மறுக்கா பார்த்தா புரிஞ்சுது, OUT OF ORDER என ஏடிஎம் ல ஒட்டி இருந்துச்சு. ஓஹோ... குறுக்கால நடந்து போனவன் புத்தி OUT OF ORDER ன்னு நினைச்சு சிரிச்சாங்களோ, இது தானான்னா நான் நினைக்க, இல்லயாம், தரி...கின... தோம்...இனிம தான் இருக்கு
ஆச்சி : ரைட்டு விடுறா வண்டிய
படுக்காளி : இப்ப அந்த பொண்ணு சிரிச்சா
ஆச்சி : பொம்பள சிரிச்சா போச்சு புகையில விரிச்சா போச்சு
படுக்காளி : எவ சிரிச்சா
ஆச்சி : ஏல, பழமொழி கேட்டா ரசிக்கணும், துளாவாத,
படுக்காளி : வாய் விட்டு சிரிச்சுக்கிட்டே அந்த பொண்ணு கண்ண தூழாவி, இன்னும் கீழ காட்டுச்சு, அங்கன ஒரு நோக்கியா ப்ளூ டூத் விளம்பரம்.
ஆச்சி : இப்ப புரியதுடா. போனவன் தானா சிரிக்கல, நீலப் பல் தான் பல் காட்டுச்சுங்கிறா.
படுக்காளி : காதல் ரொம்ப இனிமையானது ஆச்சி
ஆச்சி : இல்லயா பின்ன, பேசாத மொழிகளும், தூது இலக்கியமும் தனி ரகம்
படுக்காளி : என்னது ஆச்சி தூதுவளையா.... செடிதான
ஆச்சி : மரம், இடுப்பு வேட்டிய இட்லி தூணியாக்குவடா நீ. எம்.ஜீ.யார் பாடுவாரே

பறக்கும் பந்து பறக்கும் அது பறந்தோடி வரும் தூது

படுக்காளி : ஆ...அதுவா. நம்ம தெக்கச்சி தமிழச்சி பாடுவாளே.

மேகத்த தூது விட்டா, திசை மாறிப் போகும்னு,
தாகமுள்ள மச்சானே தண்ணிய நான் தூது விட்டேன்னு

ஆச்சி : அதேதாண்டா, தமிழ் இலக்கியத்துல தூதுக்குன்னு ஒரு பிரிவு வைச்சு ரசிச்ச காலம் உண்டு. இப்போ தூத தூக்கிட்டாங்களேடா....

படுக்காளி : வெக்கப்படுற ஆணும் பெண்ணும் நேரடியா பேசாம, ஏதாவது ஒண்ணுகிட்ட தொங்கிகிட்டு இருந்த காலம் அது. இப்போ எல்லாம் வெக்கம் விட்டுப் போச்சு

ஆச்சி : இருக்கலாம்டா, இன்னிக்கு உள்ள நவ நாகரிக யுவதிகிட்ட அச்சம், மடம், நாணம், பயிற்பு எல்லாம் சொல்லி எப்படி புரிய வைக்கிறது. அதுவும் இல்லாம, தொடர்பியல்ல எங்கேயோ போயிட்டோம். நிலவ தூது விடுற நேரத்தில எஸ். டி. டி. யோ ஐ.எஸ்.டி. யோ போட்டா போறாது.

வீட்டுக்குள்ளே பெண்ணை பூட்டி வைப்போம் என்ற விந்தை மனிதர் தலை குனிஞ்சாச்சோ.... நல்லது தானே, வெக்கம் இல்லாம, துணிச்சலா, பெண் இருந்து புட்டா, ஆரோக்கியந்தானடா......

படுக்காளி : ஆச்சி, நம்ம அஞ்சரைப்பெட்டி, ஏடிஎம் ல தொடங்கி, தூத தொட்டுட்டு பெண்ணடிமைல வந்து நிக்குது எக்ஸ்பிரஸ் மாதிரி. தூது இலக்கியத்த தூக்கிட்டாங்க, அதுக்கு காரணம் இரண்டு, ஒண்ணு வெக்கம் விட்டு போனது, இன்னொன்னு தொடர்பியல் வளர்ச்சி.

ஆச்சி : இருந்துட்டு போட்டுமே.... ஆடு மேச்சா மாதிரி அண்ணனுக்கு பொண்ணு பாத்த மாதிரி.... நகைச்சுவையோட சில நல்லதையும் யோசிச்சா நல்லதுதானேடா....

இறைவன் இருக்கின்றாரா !!!!

ஒரு ஒரு இளம் பெண் உயிருக்கு போராடிக் கொண்டு இருக்கிறாள். உடனே காப்பாத்து.

கட்டளை போல் மனதில் தோன்றியது. கண் முழித்து திரும்பி பார்க்க, ஆலயத்தில் அத்தனை பேரும் பிரார்த்தனையில் மூழ்கியிருந்த்னர். எப்படி இது. மறுபடி கண் மூட, அதே குரல். திடுக்கிட்டு விழித்தேன். என்ன இது. தலை உலுக்கி ஆலயம் விட்டு என் மருத்துவமனை வந்தேன்.

பார்க்க வேண்டிய நோயாளிகள் என பெரிய கியூ ஒரு புறம், எனது ஆலோசனை கேட்க என உதவியாளர் சில மறு புறம். எனக்கு மட்டும் வேலை ஓடவில்லை. அந்த குரல் திரும்ப திரும்ப கேட்கிறது. மேசையில் உள்ள ஸ்டெதஸ்கோப்பை தோளில் மாட்டிக் கொண்டு அறையை விட்டு வெளியே வந்தேன். பார்வை பட்ட இடத்தில், மார்சுவரி. பிணவறையின் முன் கூட்டம் கூட்டமாய் ஆட்கள். ஏதோ செலுத்தப்பட்டவன் போல் நான் நடக்கத் தொடங்கினேன். ஏழை பணக்கார பாகுபாடின்றி உடல்கள் சேமிக்கும் இடம். கலைந்த தலையுமாய் கண்ணில் நீருமாய் உறவுகளின் கூட்டம்.

கூட்டம் கடந்து மார்சுவரியின் முன்னறைக்கு வந்தேன். பதட்டமாய் அட்டெண்டர் ஓடி வந்தான். என்னை எதிர் பார்த்திருக்க மாட்டான். என்ன சார் நீங்க வந்திருக்கீங்க. அவனுக்கு சொல்ல என்னிடம் பதில் இல்லை. மெளவுனமாய் நகர்ந்து உள் சென்றேன். எனை தொடர்ந்து அவனும் வந்தான். நீண்ட அறையில் வரிசையாய் மேசைகள், அடுக்கி வைக்கப்பட்ட உடல்கள். ஆசிரியர் காவலர் எனும் அடையாளம் இல்லை. பொதிந்த துணி மூட்டையில் லேபள் ஒட்டி பெயர். அமைதியாய் நடந்து ஒவ்வொரு மேசையாய் கடந்தேன். சட்டென நின்றேன். ஏன் நின்றேன் என எனக்கே தெரியவில்லை. கண் மூட அந்த குரல் கேட்ட்து. ஒரு இளம் பெண் உயிருக்கு போராடிக் கொண்டு இருக்கிறாள். உடனே காப்பாத்து.

நான் நின்றதை பார்த்த்தும் அவன் சொன்னான் ‘இது பூட்ட கேஸ் சார். வீட்டுல தீ பட்டு ஆக்ஸிடெண்ட். நேத்து கொணாந்தாங்க’. கை அனிச்சையாய் ஸ்டெத் எடுத்து உடலின் மார்பில் கொடுத்தேன். அமைதி. தலைக்கு மேல் சுழலும் பேன் சத்தம் கரக்... கரக்.... என கேட்ட்து. கை, கால் என தீ படாத இடங்களை தேடி தேடி பொருத்தினேன். நகர முடியாமல், சுற்றி சுற்றி வந்தேன். எனது தவிப்பு எனக்கே புரியவில்லை. அட்டெண்டெண்ட் கலவரமானான். ‘ரிலேஷனா.... சார்...’ என்னவென்று சொல்வது, மண்டைக்குள் கேட்கும் குரல் இவனுக்கு புரியுமா.... திரும்ப திர்மானித்து நடந்தேன். கால் பகுதி போர்வையின் முடிச்சுக்குள் அடங்காது வெளியில் இருந்த்து. வெண் நிற பாதம். சட்டென ஸ்டெத் காலில் வைத்தேன். லப்... டப்.... பதறிப் போனேன். எதிர்பார்க்கவில்லை. நம்பிக்கை இல்லாதவனாய் மறுபடி கேட்டேன். துல்லியமாய் தாள் லயத்தோடு இதயத் துடிப்பு. பரபரப்பானேன். அடுத்த சில நிமிடங்களில் மளமள வென நிறைய காரியம் நடந்த்து.

அவசர சிகிச்சை பிரிவுக்கு மாறுதல். சிகிச்சை. அவசரப்பட்டு இறந்த்தாய் சொன்ன மருத்துவர் மேல் புகார். எப்படி ரீயாக்ட் பண்ண வேணும் என தெரியாத உறவுகளின் நன்றி. நெஞ்சு நிமிர்த்தி எனது அடுத்த பணி செய்ய விரைவாய் நடந்தேன்.

பின் குறிப்பு :
இது கதை அல்ல. நிஜம்.
மண்ணெண்ணை ஸ்டவ் பத்த வைத்த போது விபத்தில் சிக்கி, மரணத்தை முத்தமிட்டு பின் மீண்டு வந்தவர்.

மார்சுவரியில் உடல் என மேற்குறிப்பிட்டு நான் சொன்னது என் நண்பர்.

வெற்றிகரமான சாப்ட்வேர் நிறுவனத்தின் ஸ்தாகபர்.
வலைப் பதிவர்.
அவர் வாழ்வு எனக்கு சொல்லிய பாடம் தாக்கம் பகிர்ந்து கொள்ள பெறுமை கொள்கிறேன்.

கம்யூனிச கடுகு – விவாத விருட்சம் – மேலும் விரிகிறது

கம்யூனிசத்தில் தொடங்கி, யூதத்தில் பயணிக்கிறது நம் பதிவின் பின்னூட்டங்கள்.
தகவல் பட்டரையாக பட்டையை கிளப்புகிறது.

நன்றி திரு ஜோ பாஸ்கர்,

பெயரில்லா வினாவிற்கு விரிவாக விளக்கமாக விடையளிக்க ஆழமாமாகச்சிந்திக்க அலசி ஆராய வாய்ப்பளித்த உங்களுக்கும் படுக்காளிக்கும் ஆச்சிக்கும் எனது நன்றிகள்.

வினாவிற்கு குறும் பதில் :

இயேசு கிறிஸ்து தான் கிறிஸ்துவத்தை துவக்கினார். அவர் பிறப்பால் யூதர். ஆனால் முழுக்க முழுக்க யூத மத பழக்க வழக்கங்களையும் கொள்கைகளையும் எதிர்த்து, போதித்து, செயலாற்றி அதன் காரணமாக யூதர்களால் கொலை செய்யப்ப்பட்டவர்.

1. அவரது போதனைகள் / செயல் பாடுகள் யூத மதத்திற்கு முற்றிலும் எதிரானது.
2. யூதர்கள் அன்றும் இன்றும் என்றும் கிறிஸ்துவை கிறிஸ்துவத்தை எதிர்ப்பவர்கள்.
3. இயேசு தானே கிறிஸ்துவத்தை நிறுவி, அதன் கொள்கைகளை வகுத்து, செயல் பாடுகளை விளக்கி தனக்குப்பின் ஒரு தலைவரையும் நியமித்து அவருக்கு சாவியை வழங்கி அந்தப்பாறையின் மீது திருச்சபையை கட்டி வளர்ப்பவரும் அவரே.

விரிவான பதில் :

1. அவரது போதனைகள் / செயல் பாடுகள் யூத மதத்திற்கு முற்றிலும் எதிரானது :பன்னிரண்டு வயதிலேயே தாய் தந்தையை தவித்து தேட விட்டு விட்டு யூத மத அறிஞர்களோடு எதிர் வாதம் புரிந்தவர் இயேசு.

"கண்ணுக்குக்கண் பல்லுக்குப்பல்" - இது யூத மத நெறி. "எதிரிக்கும் அன்பு செய் - ஓர் கன்னத்தில் அடித்தால் மறு கன்னத்தைக் காட்டு" - இது இயேசுவின் நெறி.
ஒய்வு நாளில் எந்த வேலையும் செய்யக்கூடாது என்ற சட்டத்தை எதிர்த்தவர். "விபச்சாரம் செய்பவளை கல்லால் அடித்துக் கொல்ல வேண்டும்" - யூத சட்டம். "உங்களில் பாவம் இல்லாதவன் அவள் மீது முதல் கல் எறியட்டும்" என்று மன்னிப்பது இயேசு. மதலேன் மரியாளை மனமார மன்னித்த மனிதாபிமானி இயேசு.
"யூத இனம் தவிர மற்ற இனங்களெல்லாம் தாழ்த்தபபட்டவை; அவர்கள் தீண்டத்தகாதவர்கள்" - இது யூதம். ஆனால் சமாரியப் பெண்ணிடம் தண்ணீர் வாங்கி குடித்த சீர் திருத்தவாதி இயேசு.
ஒருவன் எத்தனை பெண்களை வேண்டுமானாலும் மணம் முடிக்கலாம். அதே போல் ஒரு பெண்ணும் குழந்தை இல்லாமல் ஒரு கணவன் இறந்தால் அவன் சகோதரர்களே அவளை மணக்கலாம். இது போன்றவற்றை எதிர்த்துக்குரல் எழுப்பியவர் இயேசு.
மீட்பர் ஒருவர் வருவார் விடிவு தருவார் என்று இன்னும் எதிர் பார்த்த்துக்கொண்டிருக்கிறது யூதம். தானே அந்த மீட்பர் மெசியா என்கிறார் இயேசு.
குருக்கள் மன்னர்களுக்கு சமமானவர்கள் - வரை முறை களுக்கு அப்பாற்ப்பட்டவர்கள் - எல்லோரையும் விட உயர்ந்தவர்கள் - இது யூதம். ஆனால் சீடர்களின் கால்களை கழுவி முத்தமிட்டு உங்களில் தலைவனாக விரும்புபவன் எல்லோருக்கும் வேலையாளாக இருக்கட்டும் என்றவர் இயேசு.

தொழு நோயாளிகளை ஊருக்குள்ளேயே அனுமதிக்காமல் நீக்கி வைத்தது யூதம் - அவர்களை தேடி சென்று பாவங்களை மன்னித்து ஊர்க்குளத்தில் குளிக்க்கச்சொல்லி குணமாக்கி சமுதாயத்தில் சேர்த்துக்கொண்டவர் இயேசு. ஒவ்வொருவன் அனுபவிக்கும் கஷ்டங்களுக்கும் நோய்களுக்கும் அவனது பாவமே காரணம். அதை மன்னிக்கும் உரிமை கடவுளுக்கு மட்டுமே உண்டு - இது யூதம். தானே பாவங்களை மன்னித்து குணமளித்து யுத்தத்தை குட்டியது இயேசு.

ரோமைப் பேரரசு யூதர்களின் எதிரி எனவே வரி கட்டக்கூடாது என்றனர் சில யூதர். ஆனால் "சீசருக்குரியதை சீசருக்கும் இறைவனுக்குரியத்தை இறைவனுக்கும் கொடு" என்றவர் இயேசு.
யூத மதத்தின் மையமும் மிகவும் புனிதமனதுமான எருசலேம் ஆலயத்தை இடித்து விடுங்கள் - அதை மூன்றே நாளில் மீண்டும் கட்டி எழுப்புவேன் - என்றவர் இயேசு.யூதர்களின் எருசலேம் ஆலயம் முழவதும் இடிந்து விடும் - ஒரு கல்லின் மேல் இன்னொரு கல் கூட நிற்காது என்று கணித்துச்சொன்னவர் இயேசு.

கம்யூனிச கடுகு – விவாத விருட்சம்

தகவல் பரிமாற, தர்கிக்க, என தரமாக நம் வலைப்பதிவு வளர்ந்ததில் மிக்க மகிழ்ச்சி.

ஆச்சி படுக்காளி, அஞ்சரைப்பெட்டியில் கம்யூனிசத்தை தாளித்ததை, பின்னூட்டம் இட்ட திரு. ஜோ பாஸ்கர் அவர்களது எண்ணத்த்தை ஒரு பதிவாக்கி நேயர்களுக்கு அளிக்க, அதில் பின்னூட்டமாய் இன்னொரு கருத்து முத்து வந்தது. அதையும் இங்கு பதித்து இருக்கிறேன். தனிப் பதிவாய்.

தெரிய வேண்டும் என தேடலும், சக மனித மரியாதையும், மனித நேயமும் தமிழ் தொண்டுமாய் கைகள் பற்றி நாம் நடக்க வேண்டிய தூரம் இன்னும் உண்டு.


திரு. ஜோ பாஸ்கர் சொன்னது

// தனக்கென எந்த சொத்தும் சேர்க்காதவர். தனது சீடர்களையும் எந்த சொத்தும் வைத்துக்கொள்ள அனுமதிக்காதவர் உலகத்திலேயே மிகப்பெரிய மதத்தை நிறுவி இன்று உலகம் முழுமையும் எந்த வித மத மொழி இன நிற பாகுபாடுமின்றி ஆயிரக்கணக்கான பள்ளிகள் மருத்துவமனைகள் முதியோர் இல்லங்கள் மூலம் பொதுவுடைபணி செய்யும் இலட்சக்கணக்கான துறவறம் பூண்ட குருக்கள் கன்னியர்கள் கொண்ட கிறிஸ்துவத்தின் வழிகாட்டி .//

பெயரில்லா சொன்னது...
உண்மையில் தெரியாமல்தான் கேட்கிறேன், கிறிஸ்து தான் கிறிஸ்துவத்தை பரப்ப சொன்னாரா? அவர்தான் இந்த மதத்தை தொடங்க சொன்னாரா? உங்கள் கருத்து எந்த அளவுக்கு சரி? நான் படித்த வரையில் அவர் கடைசி வரை யூதர் என்று தான் சொல்லபட்டிருந்தது எது உண்மை? அவரை தூற்றியவர்கள் தான் பின்னர் கட்சி மாறி அவற்றின் பெயரால் கிறிஸ்துவத்தை பரப்பினார்கள் என்பது எந்த அளவுக்கு சரி? தயவு செய்து விளக்கம் தரவும். ( இது விவாதத்திற்கு அல்ல உண்மையில் ஒரு கருத்து பரிமாற்றதிர்க்காகத்தான் கேட்கிறேன்)

மர தமிழன்:

அடங்கியிருக்கும் சுவாரஸ்யமான சில கேள்விகளை நாம் மதத்தையும், கடவுளையும் தள்ளி வைத்து ஆராய்ந்தால் ஒருவேளை கடவுள் எங்கே இருக்கிறார் என்பது புலப்பட்டாலும் ஆச்சர்யமில்லை!!

இனிப்பு கண்ணா இனிப்பு !!!


இட்லி வடை ; வலை உலகில் அபிமானமும் வாசகரின் அன்பும் பெற்று, அரசியல், சினிமா, இலக்கியம் என ரவுண்டு கட்டி அடிக்கும் கலகல பதிவு மனை. ஒரு செய்தியும் அதன் தொடர்புடைய சிந்தையும் நான் எழுதி தர பிரசுரித்து உள்ளார்கள். படித்து நல்ல சில பின்னூட்டங்களும் வந்துள்ளன. இட்லி வடைக்கும் பின்னூட்டம் இட்ட அனைத்து நண்பர்களுக்கும் நன்றியும் அன்பும் சமர்பித்து கொள்கிறேன்.

இதை சாதிக்க உதவிய நண்பர் கோபி அவர்களுக்கு ஸ்பெஷல் தேங்க்ஸ்.

சமீபத்தில் நடந்த மருத்துவ ஆய்வில், இந்தியாவிலேயே இனிமை ஜாஸ்தி உள்ளவர்கள் .... கேரளாதான் என சொல்கிறது அறிக்கை. இது ரொம்ப பழைய மேட்டராச்சே, நம்ம பாட்டுக்கு ஒரு தலைவன் பாரதி சொன்னதுதானே,சேர நாட்டிள‌ம் பெண்களுடனே, சுந்தரத் தெலுங்கினில் பாட்டிசைத்து’ என்பது தானே என நினைப்பவருக்கு, இல்லைங்க இது வேற‌ ரூட். மேட்டர் வேற.

இது புதுசு கண்ணா புதுசு.

நாடெங்கும் ஆய்வு செய்ததில், சர்க்கரை வியாதியால் பாதிக்கப்பட்டுள்ள‌ நோயாளிகளில் அதிக எண்ணிக்கையில் உள்ளவர்களில் முதல் இடம்
கேரளாவுக்கு.

எனக்கு சுகர் இருக்குங்க, என பெருமையாய் போன தலைமுறையில் சொன்னது, அல்லது அதை ஒரு ஸ்டேட்டஸ் சிம்பலாய் பார்த்தது எல்லாம் பரணில் தேடி தூசி தட்டாமல் இன்றைக்கு பார்த்தால். அதெல்லாம் நாப்பது வயசுல சகஜமய்யா என பழகிக் கொண்டது இந்த தலைமுறை. (ஒரு விழா மேடையில் கவிஞர் வாலி அவர்கள் தலைமை ஏற்க வருகை தந்த கலைஞர் அவர்களை பார்த்து இப்படி சொன்னது நினைவுக்கு வருகிறது...தலைவா நீ பாப்புலர் ஃபிகர் உன்னை கண்டவுடன் ஏறுது என் ஷுகர்)

நீரழிவு எனும் சுத்த தமிழ் வார்த்தை கேட்டவுடன் பக் என பயமாய் இருக்கிறது. ஏதோ ஒரு பேரழிவு போல பூச்சாண்டி காட்டுகிறது. அதையே ஆங்கில மொழி மாற்றம் சாதாரணமாக்கி விடுகிறது. சக்கரை நோய், ஹும்... ரத்தத்திலா, யூரினிலா என சகஜமாக்கி விடும். கிராமத்தில் இப்படி சொல்வதை வெறுமே ஆங்கிலத்தில் சுகர்ங்க என ஸ்டைலாய் ஸ்வீட்டாய் சொல்லும் போது இன்னும் சூப்பர்.

அவருக்கு கன்னாபின்னான்னு சுகர். அசந்து படுத்தார்னா எறும்பு வந்து மொய்க்குது’ இனிப்பை கண்ணால கூட பாக்கக்கூடாது. என கண்டிப்புடன் கண்ணாடி தூக்கி விட்டு மாமி சொல்லி விட்டு நகர. சுகர் தான்... ஆனா கண்ட்ரோல்ல இருக்கு. அடிக்கடி சாப்பிடக் கூடாது, அப்பப்ப சாப்பிடலாம் தப்பில்ல என அசடு வழிந்து பச்சப் பிள்ள மாதிரி கேக்கிறார் நம்ம அப்புராணி மாமா, ஒரே ஒரு ஜாங்கிரியை... இந்த புரட்டு புரட்டுதே இது என்ன வியாதி.

வியாதி இல்ல. ஒரு சின்ன குறைபாடு. இன்சுலீன் எனும் த‌க்கூனுண்டு சமாச்சாரம் ரத்தத்தில குளுக்கோஸ் அளவை சமமாக்கி, தேவையானதை எடுத்துக்கிட்டு, போலாம் ரைட் என கழிவுக்கு அனுப்பி விட்டுவிட்டு, உடம்புக்கு வைச்சுக்கோ நீ என கொடுப்பது. சில சமயங்களில் கோவிச்சுக்குட்டு, மாட்டேன் போ தரமாட்டேன்னு தகராறு பண்ணுறதால உடம்புலயே இருக்க வேண்டிய ஸ்வீட் மெலடிஸ் கழிவாய் போறது தான் பிரச்சனை. இது அன்றி, சர்க்கரையை ரத்தத்திலேயே வைத்து கொள்வது (உடன்பிறப்புகளை இதய‌த்துல மட்டும் இடம் கொடுத்து), ப்ளட் ஷுகர்...

உணவு பழக்கம் முக்கிய வில்லன்னாலும், வேலை பளு, ஸ்ட்ரெஸ், போதிய ஓய்வின்மை இதெல்லாம் சைடு வில்லன். சில சமயம், இந்த சைட் வில்லன் பண்ற சேட்டை, மெயின் வில்லனின் சேட்டையை விட ஜாஸ்தினு நாம ஆராய்ச்சி செஞ்சு கண்டுபிடிச்சுட்டோம்.

நிற்க.... தொடங்கின மேட்டர் கேரளாவுக்கு வந்தால். ஏன் கேரளாவில ஷூகர் கம்ப்ளைண்ட் ஜாஸ்தியாச்சுன்னு கேட்டா, அளவுக்கதிகமான தேங்காய் மற்றும் தேங்காய் எண்ணெய் உபயோகம் என காரணம் காட்டுகிறது ரிப்போர்ட். இதப் பத்தி நம்ம "பாலக்காட்டு சேட்டன் திரு மாரார்" கிட்ட கேட்டதுக்கு அவர் பரைஞ்சது என்னன்னா ‘தானா வளர்ர தென்னைமெரம். அதுல புடுங்கி எண்ண எடுத்தா என்ன ஏன் புடுங்கிங்கீறீங்கங்கறார்.

அங்கன பரைஞ்சாலே இந்தியாவிலே 95 சதவிகிதத்துக்கு மேலா எழுத்தறிவு, படிப்பறிவு உள்ளது கேரளாவில தான். தினசரி நியூஸ் பேப்பர் படிச்சுட்டே P.hd வாங்குற அளவுக்கு அறிவு ரோடெல்லாம் கொட்டிக் கிடக்குது. அந்த கேந்தியில லேசா தல சுத்துன உடன, ஒண்ணுக்கு மேலா ஒண்ணுக்கு போனவுடன ஓடிப் போய் டாக்டர பாக்கிற வினை எல்லாம் தான், இது மாதிரி பர்ஸ்டா வருது.

கலகலப்பா ஒரு பதிவு இருக்கும்யா, பாடிகார்டு முனிக்கு ஒரு கடிதம் இருக்கும்யா, என நகைச்சுவை தேடி வரும் இட்லி வடை வாசகர்களுக்கு வாங்கய்யா, உடம்ப நல்லா பாத்துக்கோங்க, நல்லவங்க கெடச்சா வந்து பழகுங்கய்யா...முடிஞ்சா சீனிய குறைங்க, டென்ஷன குறைங்க, உடற்பயிற்சி செஞ்சு, நல்லா கெதியா இருங்க என சொல்ல ஆசையும் அக்கரையும் உண்டுங்கோ.......ஷூகர்னு கேட்டாலே சும்மா கிர்ர்ர்ர்ர்ர்ருங்குது இல்ல..

(லாரன்ஸ் / படுக்காளி.ப்ளாக்ஸ்பாட்.காம்) + அனுப்பிய நண்பர் R.Gopiக்கு நன்றி

http://idlyvadai.blogspot.com/2009/11/blog-post_5056.html

கம்யூனிச கடுகு !!!! நேர் வினை.

நுனிப்புல் மேய்ந்து நான் செல்ல, ஆழமாக உழுது அக்கினிக் குஞ்சாய் சில வைரப் பூக்கள், நிமிர்ந்த நன்னடையில்/ எழுத்தில் மின்னுகிறது. தங்கள் பார்வைக்கு இதோ.

நன்றி: திரு. ஜோ பாஸ்கர்.

அருமையான பதிவு.

சோஷியலிசம், கம்யூனிசம் இரண்டுமே மனித நேயத்தை அடிப்படையாகக் கொண்டவை தான்.இந்தியா ஒரு சோஷியலிசக் குடியரசு. திருவள்ளுவரின் திருக்குறள் சோஷியலிசத்தை அடிப்படையாகக் கொண்டவை. புத்தன் ஒரு பொதுவுடமைப் பிரியர்.

பெரியார் ஒரு கருப்புச்சட்டைக் கம்யுனிஸ்ட். அண்ணா ஒரு சோஷியலிசவாதி.புரட்சித்தலைவர் பாடல்களும் கொள்கைகளும் வசனங்களும் ஆட்சி நெறிமுறைகளும் சிந்தனைகளும் சோஷியலிச வெளிப்பாடுகள். பராசக்தி காலத்து கருணாநிதி பிச்சைக்காரர்களை மாளிகைக்கு கொண்டு வந்த பொதுவுடைமைவாதி. (இப்போது பழுத்த முதளாளித்துவவாதி).

இயேசு கிறிஸ்து முழுக்க முழுக்க ஒரு பொதுவுடைமைவாதி. பணக்காரனை சொத்து அனைத்தையும் விற்று ஏழைகளுக்குக் கொடுக்கச்சொன்ன புரட்சிக்காரர். ஊசியின் காதிலே ஒட்டகம் நுழைவதை விட பணக்காரன் விண்ணரசில் நுழைவது கடினம் என்ற போராளி.

கோவிலிலே வியாபாரம் செய்தவர்களை சாட்டையால் பின்னியெடுத்த தீவிரவாதி.

தனக்கென எந்த சொத்தும் சேர்க்காதவர். தனது சீடர்களையும் எந்த சொத்தும் வைத்துக்கொள்ள அனுமதிக்காதவர் உலகத்திலேயே மிகப்பெரிய மதத்தை நிறுவி இன்று உலகம் முழுமையும் எந்த வித மத மொழி இன நிற பாகுபாடுமின்றி ஆயிரக்கணக்கான பள்ளிகள் மருத்துவமனைகள் முதியோர் இல்லங்கள் மூலம் பொதுவுடைபணி செய்யும் இலட்சக்கணக்கான துறவறம் பூண்ட குருக்கள் கன்னியர்கள் கொண்ட கிறிஸ்துவத்தின் வழிகாட்டி .

சந்தேகமே இன்றி இயேசு கிறிஸ்து ஒரு பொதுவுடைமைவாதி.

படுக்காளிக்கும் ஆச்சிக்கும் ஒரு வேண்டுகோள். இயேசு கிறிஸ்துவின் போதனைகளில் பொதுவுடைமை கொள்கைக்குள் அடங்காத, எனக்கு புரியாத இரண்டு விடயங்களை தயவு செய்து விளக்குங்களேன்.

ஓன்று. "இருப்பவனுக்கு மேலும் கொடுக்கப்படும். இல்லாதவனிடம் இருந்து உள்ளதும் எடுக்கப்படும்" .

இரண்டாவது. ஊதியம் பற்றிய உவமை: முதலாளி காலையில் சில வேலையாட்களை வேலைக்கு அமர்த்துகிறார். மதியம் மேலும் சில வேலையாட்களை வேலைக்கு அமர்த்துகிறார். மாலையில் மேலும் சில வேலையாட்களை வேலைக்கு அமர்த்துகிறார். நாளின் முடிவில் சம்பளம் வழங்கும் பொது எல்லோருக்கும் ஒரே சம்பளம் வழங்குகிறார்.

காலையிலிருந்தே வேலை செய்தவர்கள், மாலையில் வேலைக்கு வந்து சில மணி நேரங்களே வேலை செய்தவர்களும் தங்களைப் போன்றே சம்பளம் வாங்குவதை எதிர்த்து போர்குரல் எழுப்பும்போது சம்பளம் கொடுப்பது தனது விருப்பம் என்றும் காலையில் வேலைக்கு சேர்ந்தவர் ஒத்துக்கொண்ட சம்பளம் அவருக்கு கிடைக்கும் பொது அடுத்தவர் சம்பளத்தைப் பற்றி கேள்வி எழுப்ப அவருக்கு உரிமை இல்லை என்கிறார்.

இது காலையில் சேர்ந்தவருக்கு இழைக்கப்படும் அநீதியா ?
மாலையில் சேர்ந்தவருக்கு வழங்கப்படும் தாராளமா ?

செய்தித்தாள் சொல்லாத கதை

சுவாரசியம் இல்லாம, மேம்போக்காய் தினசரியில் நாம் வாசிக்கும் செய்தியின் உள் சென்று பார்த்தால் இப்படி இருக்குமோ எனும் கற்பனையே இந்த கதை.
உண்மைச் சம்பவம் என சொல்ல எல்லா வசதிகள் இருந்தாலும், கற்பனை கதை என குறிப்பிடுவது குற்றமில்லை.

செய்தித்தாள் சொல்லாத கதை

கதை : ஜனனி
குளிர் காற்று மென்மையாய் அந்த இடத்தில் படர்ந்தது.
இரண்டு நாட்களாய் பெய்த மழையில் முற்றம் நனைந்து ஈரமாய் இருந்தது. நண்பகல் நேர சூரியன், தன் முழு வெப்பம் காட்டாது சீதோசனத்தோடு தோற்றுப் போயிருந்தான்.
தென்னை மர நிழல் தாண்டி, தாழ்வாரத்தில் கட்டில். பெரிசுகள் சிலர் நெருக்கி அமர்ந்திருக்க, மாதவன் வீட்டின் முன் மனிதர்கள் கூட்டம் சிறு சிறு குழுக்களாய். மாமா வந்தாச்சு, பெரியப்பா இன்னும் வரல. என்பதாய் சில குரல்கள். தெளிவில்லாத பேச்சுக் குரல்களின் நடுவே கனத்த அமைதி இருந்தது.

தரையில் சிந்திக் கிடந்த ரோஜா இதழ்களை புறம் தள்ளி சன்னல் ஊடே பார்த்தாள் கமலம். உறங்காத கண்கள் பார்வையை சற்று மங்கல் ஆக்கியது. பார்வை பட்ட இடம் ஒட்டாமல் மனசு, சுழன்று சுழன்று ஒரே சிந்தனையை சங்கிலியாய் சிந்தித்த்து. சட்டென வாழ்வு திசை திரும்பி விட்டதே. ஏதேதோ கனவுகள், என்னென்னவோ திட்டங்கள். எல்லாம் ஒரு நொடியில் மாறி விட்டதே. ஏன் இப்படி. எனக்கு மட்டும் ஏன் இப்படி. செத்து தொலைக்கலாம், அது பரவாயில்லை.
தொண்டை வரண்டு, வாய் புளித்த்து. சே...என்ன நினைப்பு இது. கேசவன் எனும் அந்த பிஞ்சு மகன் என்னை விட்டால் என்ன செய்வான். அவன் எப்படி தாங்குவான்.

எப்படியும் எதிர்கொண்டுதான் ஆக வேண்டும்.

விளக்கு கம்பத்தை பிடித்து கொண்டு சிறுவர்கள் சுற்றி வந்து விளையாடுவ‌து தெரிந்தது. யாரோ தன் தோள் தொட்டதை உணர்ந்து நிமிர்ந்து பார்த்தாள் கமலம். உறவினர் பெண். ஆதரவாய் தோள் தொட்டவள், குடி என்பதாய் சைகை காட்டி விலகினாள். கடுங்காப்பி, கருப்பட்டி இனிப்பில். எடுத்து கவிழ்த்து கொண்டாள். காய்ந்து இருந்த தொண்டையில் உஷ்ணமாய் பரவியது. நல்ல இதம். கொஞ்சம் ஆறுதல்.

புடவைத் தலைப்பால் வாய் துடைத்தாள். பழைய புடவை, லேசான அழுக்கு நாத்தம். கண்ணையும் வாயையும் அழுத்தி துடைத்தாள். விளக்காத பல்லை, அதே புடவைத் தலைப்பால் துடைத்தாள். மீண்டும் திரும்பி சன்னல் பார்க்க, தூரத்தில் ரங்கண்ணா. மூன்று மாதம் முன்பு அவர் வீட்டுக்கு சென்றது நினைவுக்கு வந்த்து.

‘தொழில்ல தீடீர்னு கெடுபிடி, என்ன செய்யுறதுன்னே தெரியல. இரண்டு நாள்ல மூணு லட்சம் கட்டலேன்னா, குடும்பத்தோட சாவ வேண்டியதுதான்’ அழுகையும் புலம்பலுமாய் மாதவன் வெடித்த போது. ‘வெள்ளிக்கிழமையும் அதுவுமா, என்னலே வெறுவாய்க்கலம் கெட்ட வார்த்த சொல்ற. வாய கழுவுலே. வாழ்க்கைன்னா அப்படித்தான்.
பணம் தானேலே, மூணு லட்சந்தானே. நாளைக்கு வீட்டுக்கு வா, அத்தாச்சிக்கிட்ட கொடுத்துட்டு போறேன்’ ஆதரவாய் சொன்ன வார்த்தையில் உருகினான் மாதவன்.

வார்த்தை வராமல் கண்ணில் நீர் மல்கி நிற்க, கமலம் அருகில் வந்து அவன் கை பிடித்து கண் அசைத்தாள். ரங்கண்ணா நல்லவன். சொன்ன மாதிரியே செய்தான். மூணு லட்சம். அய்யோ! இன்னைக்கு திருப்பி கேப்பானே. மாட்டான். ஆனா எப்போ கேப்பான். யேயப்பா... மூணு லட்சம் எப்படி செய்வேன்.

’மதினி மாதவன் பாஸ் புக் எங்க இருக்கு’ குரல் கேட்டு எழுந்தாள். இடுப்பு தடவி அல்மாரி சாவி எடுத்து திறந்தாள். கேசவன் சாப்பிட்டு இருப்பானா, தெரியலயே! உள் நோக்கி குரல் உய்ர்த்தி ‘யக்கா! கேசவனுக்கு ஏதாவது கொஞ்சம் ஊட்டி விடுங்க’ கம்மிய குரல் இருமல் வேறு தொல்லை செய்ய, பாதியில் இருமலாய் அந்த வாக்கியத்தை முடித்தாள்.

மனம் மட்டும் குமுறியது. ‘ராஸ்கல்!!! குடிச்சுட்டா லாரி ஓட்டுரது. ஒரு குடும்பத்தை சீரழிச்சுட்டானே. அவன் மட்டும் கையில் கிடைச்சான். அப்படியே!!!....’

சற்று முன் உட்கார்ந்து இருந்த அதே இட்த்தில் மறுபடி அமர்ந்தாள். என்ன செய்யுறது. தெரியல. வெறுமை. விரக்தி. இது கனவா. ஒரு வேளை கனவாய் இருக்க கூடாதா. எவ்வளவு நல்லா இருக்கும். சே! இரண்டு நாளா ஒண்ணும் ஓட மாட்டேங்குது, எப்போ கண்ணன் ஓடி வந்து சொன்னானோ, அப்ப ஆஸ்பத்திரிக்கு ஓடினது. அப்பல இருந்து.

‘அம்மா!’ கேசவன் கை சுரண்டி கூப்பிட்டான். தலை திருப்பி என்ன என்பதாய் மவுனமாய் கேட்டாள். அப்பா எப்ப எந்திரிப்பாரு. இரண்டு நாளா தூங்கிறாரே, எதுவுமே சாப்பிடலியேமா. அழுகை பொங்கியது. நெஞ்சு அடைத்த்து. யாரோ உறவின் முறை அவள் தோள் அணைத்து கதறினாள் ‘சாவுற‌ வயசா மாதவா. குத்துக் கல்லா நான் இருக்கேன், குத்து விளக்கு நீ போயிட்டியே. அப்பன் சாவு தெரியாத வயசுல பிள்ள’

கமலம் மாதவன் உடல் பார்த்தாள். ரோஜா மாலை பெட்டியை நிரப்பி இருந்த்து. மாலையில் இருந்து ஒரு எறும்பு அவன் உயிரற்ற உடலில் ஊர்ந்து கொண்டு இருந்தது. பின்னே அதனை தொடர்ந்து சில...வரிசையாய்...எந்த அசைவும் இல்லாது உடல். துக்கம் தொண்டையை அடைக்க, சட்டென கை நீட்டி அதை தட்டி விட்டாள்..

மாதவன் உடலில் விழுந்தாள். சில்லிட்ட உடல். சற்றே சுருங்கிய தோல். இல்லை. இது மாதவன் இல்லை. முந்தா நாள் பார்த்த என் மாதவன் இல்லை இது. அவனை இனி பார்க்க மாட்டேன். மூன்று வருடங்களில் எத்தனை நிகழ்வுகள். சந்தோசம், உரிமை. நிறைவான குடித்தனம்.

பெத்த அப்பனிடம் கூட இருபது வயதில் தயங்கி கேட்ட காசை, அவன் பையில் கையை விட்டு கல்யாணமான மூன்றே நாளில் எடுத்தேனே. அவன் பிரச்சனைக்காக உருகினேனே. என் இத்தனை சீக்கிரம் போனாய் மாதவா. கோர்வை இல்லாத உணர்வுகள். யம்மா!! யம்மா!! என வெற்று வார்த்தையாய் புலம்பல். அழுது வீங்கிய கண்கள் என கமலம் கதறினாள்.

செய்தி: (நேற்றைய தேதி)

திருச்சி :
நேற்று நிகழ்ந்த இரு வேறு சாலை விபத்தில் இருவர் மரணம் அடைந்தனர். இறந்தவர்கள் விவரம் மாதவன் (வயசு 29) மீரான் சாகிப் (வயசு 53)


கதை முடியும் முன் இவரையும் சந்தித்து விடுங்களேன் :

கண் திறந்து அவன் பார்த்தான். தொடர்ந்து குடித்ததில் நாக்கு தடித்து சுவை விட்டு இருந்தது. மெதுவாய் எழுந்து உட்கார தலை சுற்றியது. ஓவ் என அடி வயிற்றில் இருந்து வெற்று காற்று வாந்தி போல் வந்த்து. மூச்சு இரைத்தது. கண்கள் மூடி தலை உலுப்பினான்.

பக்கவாட்டு சாலையில் இருந்து சட்டென அந்த டிவிஎஸ் வந்த்தும் டொம் எனும் ஓசையும் கேட்க, பிரேக்கை மிதித்து குதித்து இறங்கினான். நல்ல மழை. அலங்கோலமாய் கிடந்த அந்த டிவிஎஸ் குறிவைத்து ஓடினான். செத்துருப்பானோ. வேகம் அதிகமோ. இல்லயே ஒரு 50 – 60 தான இருக்கும். ஸ்கிட் ஆயிருக்கும். குடித்திருக்க கூடாது, உடல் வலின்னு சொல்லி.... தப்பு.

வண்டியை நெருங்கி பார்த்தான். மார்புப் பகுதியில் வண்டி ஏறிய தடம் தெரிய, அந்த பகுதி கூழாகி இருந்த்து. ஐயையோ!! மனம் பதறியது. இரண்டு கையும் அனிச்சையாய் தலை பின்னால் சென்றது. வாய் சே! என்றது. அசைவு இருக்குதா என பார்க்க, குனிந்த போது பெரிய மீசை தெரிந்த்து. இல்லை செத்து விட்டான்.

சுற்று முற்றும் பார்த்து, ஆளில்லா அந்த தெருவில் மீண்டும் லாரி வந்து ஏறி விரைவாய் செலுத்தினான். படபடப்பு அடங்கி முதலில் பார்த்த சாராயக் கடையில் குடிக்க ஆரம்பித்தவன். இரண்டு நாளாய் குடிக்கிறான்.

சே! அந்த மீசை, அந்த சத்தம் தாங்கவே முடியல. எவ்வளவு உதறினாலும் போறதில்ல. குடிச்சா தேவல. வாய் கொப்பளித்து விட்டு சாராயம் மீண்டும் குடித்தான். அமிலம் போல் இறங்கி குமட்டிக் கொண்டு வந்த்து. வயிற்று சாராயம் தன் முகம் காட்ட, சற்று நேரத்தில் உடல் தளர்ந்து அந்த சுவரில் சரிந்தான். மெல்லமாய் முகம் இருக்கம் தளர்த்தியது.

ஆச்சி படுக்காளி அஞ்சரைப்பெட்டி 28/10/09

வழக்கமாக செய்யும் அஞ்சாறு தானியங்களை எடுத்து தாளிக்காமல், வெறும் க்டுகை மட்டும் எடுத்து..... சாரி கம்யூனிஸம் மட்டும் எடுத்து தாளித்து உள்ளோம்.

படுக்காளி : எரிமலை எப்படி பொறுக்கும்
நம் நெருப்புக்கு இன்னுமா உறக்கம்
ரத்த சாட்டை எடுத்தால்
நம் உலகின் கதவு திறக்கும்
நாம் கண்ணீர் விற்கும் ஜாதி
இனி அழுதால் வராது நீதி

ஆச்சி : என்னடா பாட்டெல்லாம் பலமாயிருக்கு
படுக்காளி : ஆச்சி நான் கம்யூனிஸ்ட் ஆயிட்டேன்
ஆச்சி : 16 வயதினிலேல மயிலு ஆத்தா நான் பாஸ் ஆயிட்டேங்கிற மாதிரி இருக்குடா. ஏண்டா மீன் திங்க ஆசை வந்தா தூத்துக்குடி போ வேண்டியதுதான ஏன் வங்காளம் அல்ல கேரளா போன.
படுக்காளி : வங்காள நொங்கா ஒண்ணும் புரியல
ஆச்சி : பேன விட்டுபுட்டு ஈர பிடிக்குர பாரு. கம்யூனிச சிவப்புக் கொடி அங்க மட்டுந்தானடா படபடக்குது.
படுக்காளி : இல்ல ஆச்சி, நேத்து ஒரு சினிமா பாத்தேன், அதுல இருந்து தான் கம்யூனிஸ்ட் ஆயிட்டேன்.
ஆச்சி : உன்ன சொல்லி குத்தம் இல்ல. புஸ்தகம் படிச்சுட்டு தானே பூரா பயலும் கம்யூனிஸம் பேசுறான்.
ஆமா இது பழங் கஞ்சியாச்சேடா, இப்போ எதுக்கு அதே வேக வைக்கிற.
படுக்காளி : ஆச்சி! இந்த மேசையில, அந்த சாக்பீஸ்ல உழைப்பு இருக்கு. மேசையில் இருந்து உழைப்ப எடுத்துட்டா மரத் தூள், சாக் பீஸ்ல இருந்து உழைப்பு எடுத்துட்டா வெறும் தூள்.
ஆச்சி : தூள் டக்கர்டா..... கிளாப்ஸ் அள்ளியிருக்குமே....

வெட்கத்தில் படுக்காளி நெளிய, ஆச்சி இடைமறித்து

ஆச்சி : அட அரை வேக்காடு, ஒரு காலத்தில சமூகம் பணம், ஜாதி, மதம்னு சொல்லி அடக்கி வைச்சாங்க. இப்போ எங்கடா இருக்கு. முதல் தலை முறை தொழில் அதிபர் ஓராயிரம் பேர் இப்ப இருக்கானேடா. இன்போசீஸ் மூர்த்தி, மைக்ரோசாப்ட் கேட்ஸ்னு அப்பன் பணத்தில் இல்லாம் தன் உழைப்புல முதலாளி ஆனானேடா.
படுக்காளி : அப்போ கம்யூனிசம் இன்னைக்கு இல்லையா
ஆச்சி : வெறுமன கொட்டாவி விட்டுட்டு முதலாளி போற கார், அவன் பங்களா எல்லாம் பாக்காம, கிட்ட போயி அவன் பொறுப்புணர்ச்சி, தில், திட்டமிடல் உழைப்பு இதெல்லாம் பார்த்தா நீயும் தொழில் அதிபர் தான்.
படுக்காளி : அப்போ கம்யூனிசம் வேஸ்டா.
ஆச்சி : அத யாருடா சொன்னா, நல்ல விசயம், நம்ம யேசு கிறிஸ்து சொன்ன அடிப்படை.
படுக்காளி : யேசு கிறிஸ்துன்னா!!! இந்த கிறிஸ்துவ மதம் உண்டாக்கினாரே அவரா
ஆச்சி : ஆமடா,

படுக்காளி : ஆச்சி, அவர் கடவுள். கடவுள் எப்படி கம்யூனிஸ்ட் ஆவார்.
ஆச்சி : நல்லா கேட்டுக்க. ‘வானத்து பறவைகளை பாருங்கள். அது விதைப்பதும் இல்லை, அறுப்பதும் இல்லை. ஆயினும் உங்கள் வானகத் தந்தை அவற்றை போஷிப்பதில்லையா. எதை உண்போம், எதை குடிப்போம் எதை உடுத்துவோம் என அது குறித்து நீங்கள் கவலை பட வேண்டாம்.
படுக்காளி : ஆங்... ஆச்சி, இத நம்ம சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தும் சொல்லி இருக்காரு
ஆச்சி : என்ன்ன்னு
படுக்காளி : ‘மரத்த வைச்சவன் தண்ணி ஊத்துவான்’
ஆச்சி : அதே தாண்டா. சமமான சமுதாயம் ஆன்மீகமா கம்யூனிசான்னு நீயே டிசைட் பண்ணு
படுக்காளி : ஆச்சி கம்யூனிசம் காத்து மாதிரி
ஆச்சி : ஏண்டா காணாம போச்சுக்கிறியா
படுக்காளி : இல்ல ஆச்சி, எங்கும் நிறைந்து இருக்கு. பில் கேட்ஸ்லயும் இருக்கு, பைபிள்லயும் இருக்கு, சினிமாவிலயும் இருக்கு. கம்யூனிசம் பேசினா, எல்லாரும் என்ன பிஸ்துன்னுவாங்க. கை தட்டெல்லாம் சல்லிசா கிடைக்கும்.

அதனால..... ஆச்சி நான் கம்யூனிஸ்ட் ஆயிட்டேன்.

ஆச்சி : விடிய விடிய ராமாயணம் கேட்டுட்டு சீதை ராமனுக்கு சித்தப்பனான்னு ! கிளம்பிட்டியாடா....

சமர்ப்பணம்:

என் பதினைந்து வயதில் தொடங்கி மேடை நாடகம், ரேடியோ நாடகம் என என் கைபிடித்து இது தான் நடிப்பு, இது தான் கதை, வசனம் என பாடம் சொல்லிக் கொடுத்த என ஆசான் முல்லை எம். பெர்க்மான்ஸ் அவர்களை இந்த தருணத்தில் வணங்கி நன்றி தெரிவிக்கிறேன்.

‘வாடுவதற்கா இந்த மலர்கள்’ எனும் மேடை நாடகத்தில் நான் கிறிஸ்துவ பாதிரியார். குண்டடிபட்டு அடைக்கலமாய் வரும் நக்ஸலைட் திவிரவாதியுடன் நடக்கும் விவாதம் விதைத்த்தே இந்த பதிவின் வித்து அல்லது மூலம்.

போட்டி இன்னும் முடியல.... பரிசு எனக்கே!!!

சர்வேசன் கதைப் போட்டியின் முதல் பரிசு 90$.
ஆனால் இருவது டாலர் தான் நமக்கு கிடைக்கும். மீதி 70 நம் பெயரில் உதவும் கரங்களுக்கு கொடுக்கப் படும்.

பிரமாதம். எனக்கு இந்த அப்ரோச் ரொம்ப பிடிச்சுது.

உதவும் கரங்களையும் வித்யாவையும் அறிவேன். சிக்கனமாய் செலவழிக்கும் ஒவ்வொரு பைசாவுக்கும் அவரிட்த்தில் கரிசனம் தெரியும். என் சார்பாய் 90$ அவருக்கு தனியாய் அனுப்பி விடுவேன்.

அப்போ, பரிசு கிடைச்சா மாதிரிதானே.
நன்றி சர்வேசன். இனி கதை.


பறப்பது போல் மிதப்பது போல் – கதை.

பரபரப்பான, பளபளப்பான, பப்பரப்பான்னு துபாயின் முக்கிய வீதி. நண்பகல்.

டொமார்..... கீரிச்
சொத் என்று ரோட்டில் விழுந்தேன். சத்தம் கேட்டு சர சர வென மக்கள் கூட்டம். ஒரு நிமிடம் நினைவு போய் திரும்ப வந்த்து. மல்லாந்து கிடந்த வாக்கில் கண் திறந்து பார்த்தேன். குழுப்பமான காட்சி. எனக்கு மேல் வெள்ளை கலர் வண்டி. மேக் சரியாக தெரியவில்லை. லாரி போல சைசில் ஒரு எஸ்யூவி. தெளிவில்லாத பேச்சுக் குரல்.

எப்படி விழுந்தேன். எல்லாம் ஒரு நொடியின் கீழ். கை தாங்கலாக ரோட்டோர இரும்பு கம்பி பிடித்தேன். ஞாபகம் இருக்கிறது. அதுதான் உடைந்து இருக்க வேண்டும். கையோடு வந்து விட்டது. அதன் ஒலி தான் அந்த டொமார் ஓசையாய் இருக்க வேண்டும்.

துள்ளி எழுந்தேன் பந்து போல். நல்ல வேளை உயிர் இருக்கிறது. நான் சாகவில்லை. கை கால்களை சுற்றும் முற்றும் பார்த்து, அடி ஒன்றும் இல்லை.
அந்த வண்டியின் சக்கரம் ஏறியிருந்தால் அவ்வளவுதான். எவ்வளவு பெரிய டயர். கருப்பாய் கோர பற்களோடு. ஏன் இத்தனை பெரிய டயர் எல்லாம் வைத்து வண்டி செய்கிறார்கள். அங்குமிங்கும் சவுகரியமாய் போய் வர வேண்டும் அவ்வளவு தானே. இந்த வீண் ஆடம்பரங்கள் படோபகாரங்கள் தான் மனிதனை இத்தனை துன்பத்தில் தள்ளுகிறது. நடக்கத் துவங்கினேன்.
எல்லாம் வைத்து வண்டி செய்கிறார்கள். அங்குமிங்கும் சவுகரியமாய் போய் வர வேண்டும் அவ்வளவு தானே. இந்த
நடக்கும் போது பறப்பது போல் இருக்கிறது. கால் இருக்கிறதா, இல்லையா. குனிந்து கீழே பார்த்தேன். இருக்கு. ஆஹா உடல் காற்று போல் அல்லவா உள்ளது. என்ன சுகம் சூப்பர். பறப்பது போல், மிதப்பது போல்.

சே! அந்த அமெரிக்கன் கம்பெனி மெயில் அனுப்புவதாய் சொன்னேனே. முதலில் அதை முடிக்க வேண்டும். தொலை பேசியில் ராணியிடம் சொன்னால் கூட போதுமே. அலுவலக காரியதரிசி.

தெளிவில்லாத பார்வை படர்ந்த திசையில் அது யார். தூரத்தில் வருவது எனது பாஸ்தானே. ஆம். அவரேதான்.

முசுடன்!!! ஒரு நாள் இல்லை ஒரு நாள் நடு ஆபிஸில் வைத்து அவரது குரலுக்கு மேல் உரக்க சொல்ல வேண்டும். நீங்கள் டிலே செய்தால் யூ ஆர் வெரி பிஸி, அதுவே நான் செய்தால் சோம்பேறித்தனமா.

இன்றைக்கு வேணாம். இருக்கட்டும் உள்ளத்தை மூடு, உதட்டை திற, ஒரு புன்னகை மட்டும் போதும். தளர்ந்து இருந்த களுத்துப் பட்டையை சரி செய்து, இடுப்பு பெல்ட் நேராக்கி ஒரு கண்ணிய துரித நடையில் நெருங்கினேன்.

அவரை பார்த்தால் என்னை கவனித்த மாதிரியே தெரியவில்லை. தூரத்தில் பார்த்தாலே கை ஆட்டும் இவர் பத்தடி தூரம் வந்த பிறகும்.... ஏன்.... கவனிக்கவில்லையோ. நெருங்கி ஹலோ என்றேன். கவனிக்காத்து போல் விலகி சென்றார். கடந்து சென்றார். ஏன். ஏன்.... என்னாயிற்று...

சட்டென கடந்த அந்த பெண், அது ராணிதானே. ஆம் சேலை கட்டி இருக்கிறாள். ஒ ராணியும் அவரோடு இருந்தாளா. பாஸ் மட்டும் பார்த்த்தால் அவளை கவனிக்க வில்லை. அது சரி, அவள் ஏன் என்னை பார்க்கவில்லை. ஒரு புன்முறுவல் கூட இல்லையே. வலிய வந்து பேசும் அவளும் கண்டுக்கலையே. என்னாச்சு. ஒரு வேளை

அட போங்கடா. உங்கள் நினைப்பு எனக்கு நேரம் விரயம். எனக்கு நடக்க பிடிக்கிறது. சந்தோசமாய் நடப்போம். சற்று தொலைவில் கார், எனது கார் தனியே தேமேன்னு நின்று கொண்டு இருந்த்து.

உள் அமர்ந்தேன். இக்னிஷன் ஆன் செய்ய, முன் பேனல் பளிச்சிட்ட்து. நேரம் 14.00, 46 டிகிரி. முதலில் இந்த கிளாக்கின் ரயில் நேரத்த மாத்தணும், நமக்கு இந்த 12 கழிக்கிர வேலை எல்லாம் மெனக்கேடு. டைம் வேஸ்ட்.

ஏசி முழுமையாய் ஓட விட்டேன். ஹூம் சரியில்ல. சன்னல் தணித்து வெளிக் காத்து படர விட்டேன். இது பரவாயில்ல, சூடு தெரியவில்லை. மறுபடி பேனல் பார்த்தேன். 46 டிகிரி, தோலை பொசுக்குமே. சட்டை அயன் பண்ணினா வர்ற மாதிரி ஒரு வாடை வருமே. ஒண்ணையும் காணல. என்னாச்சு இன்னைக்கு. ஆனால் இது நல்லா இருக்கே.

அழுத்திய ஆக்ஸிலேட்டரில் கார் சீறிப் பாய்ந்த்து. ஒரு சில தப்படிகளில் சாலை ஓரத்தில் மோகனை பார்த்தேன். இவன் என்ன செய்கிறான் இங்கு. உற்சாகமாய் கை அசைக்க, பதில் கை அசைத்தான். நில் என்பதாய் கை அசைப்பது தெரிந்த்து. அப்பா இவனாவது என்னை தெரிந்தானே.

பிரேக் அழுத்தி அவனருகே நிறுத்தி வாவென கை அசைத்தேன். வண்டியில் ஏறாது சுற்றி என் திசையில் வந்தான். டிரைவர் பக்கம் நீ ஏண்டா வர்ரே. நான் தான் ஓட்டுரேன்ல நீ அந்த பக்கம் வா. எனது குரலையோ செய்தியையோ கண்டு கொள்ளாமல் டபக் என கதவு திறந்தான். கொத்தாக என் சட்டை பிடித்தான். காரில் இருந்து என்னை வெளியில் இழுத்தான்.

விடு விடு, டேய் என்ன செய்ற, விடு என்னை.. சத்தம் ஜாஸ்தியாச்சோ. வலதும் இட்தும் திரும்பி பார்த்தேன். யாரும் கவனிக்க வில்லை.

வெளியில் இழுத்த என்னை பின் கதவு திறந்து உள் திணித்தான். இருடா, பொறுமை. மொதுவாடா நானே போறேன். அவன் கேட்ட்தாய் தெரியவில்லை. அறைந்து சாத்திய கதவில் சத்த்த்தில் கோபம் தெரிந்த்து. டிரைவர் சீட்டில் அமர்ந்து சன்னல் எல்லாம் மூடி, சீரான வேகத்தில் வண்டி ஓடத் துவங்கியது. கால் நீட்டி என்னை வசதி செய்து கொண்டேன்.

மோகன் வெடித்தான். ‘அறிவு இருக்கா. உன் நல்ல நேரம் நான் தற்செயலா வந்தேன். வண்டியா ஓட்டுர நீ. புழைப்புக்காக இந்த ஊர் வந்திருக்கோம். இதென்ன இந்தியாவா. துபாய்!!!

இந்த ஊருக்கு இவ்வளவு போதை ஆகாதுரா...

தண்ணியடிச்சுட்டு வண்டி ஓட்டினா அவ்வளவுதான். ஜெயில்ல வச்சு நாடு கட்த்திருவாங்க. ஏண்டா இப்படி அளவு தெரியாம குடிக்கிற, அப்படியே குடிச்சாலும் வீட்டுல படுத்துற வேண்டியது தானே,

அத்தனை போதையிலும் அவன் சொல்வது சரி எனப் பட்ட்து.

மரணத்துக்கும் போதைக்கும் தூரம் அதிகமில்லை எனத் தெரிந்த்து. கொஞ்சம் விட்டிருந்தால் என்னைக் கொன்று இருக்கும். குடித்தவனை உளறிடுவான் என்று ஊர் விலக்குவது தெரிந்த்து. குடித்த மனிதனிடம் குசலம் யாரும் விசாரிப்பதில்லை.

மனித இயல்பை தொலைய வைக்கும் வலு இந்த மதுவுக்கு உண்டோ. நினைவை, உறவை, நடையை எல்லாம் மாற்றி அமைக்கும் இந்த குடி இனிமே இல்லப்பா, என அப்போது தோணுச்சு.

முற்றும்


இந்த கதைக்கு நல்ல ஒரு தலைப்பு வைக்க சொல்லி சில பேரிடம் ஆலோசனை கேட்டேன்.

எடக்கு மடக்கு கார்ர் சொன்னது ‘டாஸ்மாக் டெரர்’ ‘கும்மியடிச்சு குட்டய குழப்பு’
சைலஜா ‘எண்ணிய குடிதல் வேண்டும், குடித்த பின் எண்ணவும் வேண்டும்’
அமரர் கல்கி ‘பொன்னியின் செல்வன் குடிக்காத சபதம்’
தெலுங்கு பட டப்பிங் பிரெண்ட் சொன்னார் ‘சட்டய பிடிச்சு மூஞ்சில குத்து’
சாரு சொன்னது ‘கழுகு ரத்தமும் கருவாட்டுக் குழம்பும் – ஒரு எதிர்வினை’
சுஜாதா ’46 டிகிரி குளுருது’
தண்டோரா ‘மானிட்டர் பக்கங்கள்’
பாலகுமாரன் ‘என்னை சுற்றி பல வாகனங்கள்’
வால் பையன் ‘குவார்ட்டரடி கும்மியடி’
பரிசல் காரன் ‘ ’ காரோட்டி காரன்
ஆசிப் மீரான் ‘மக்கா!!! மக்கர் பண்ணுது’
செல்லத்துரை ‘காதல் இல்லா வெறுமை’

சர்வேசன்500 - 'நச்'னு ஒரு கதை 2009 - போட்டி

கு.த.மு. ; கு.த.பி.

என்னடா படுக்காளி ஒண்ணும் புரியலயே.

குதமுகுதபி!!!! திட்டலயே.

கெட்ட வார்த்தைக்கு, அக்கா அல்லது தங்கச்சி மாதிரியும் இருக்கு, அசிங்கமான வார்த்தைக்கு அடுத்த வீடு மாதிரியும் இருக்கு என நினைப்பவருக்கு தன்னிலை விளக்கம்.

சப்ஜெக்ட் காலம் ரொம்ப சின்னதா இருக்கு.
குழந்தை தலை எடுக்கும் முன் ; குழந்தை தலை எடுத்த பின்’

என்று எழுத முடியல. ப்ளாக்கர் கிட்ட சொன்னா தேவல, இல்லன்னா மன்சூர் அலிகான் பிளாக் தொடங்கினா ‘ராஜாதி ராஜ, ராஜ மார்த்தாண்ட ........ ‘ எனும் கின்னஸ் சாதனையில் இடம் பிடித்த படத்த எப்படி எழுதுவாரு.

செய்யுள் பதிவுரைக்கு விளக்க உரை எழுதலாம், டைட்டிலுக்கே ஒரு கோனார் நோட்ஸ் போடுறதெல்லாம் ரொம்ப ஓவர். சரி பதிவுக்கு போவோம்.

சச்சின் டெண்டுல்கர்,
கிரிக்கெட் ரசிகர்கள் தாண்டி எல்லோராலும் விரும்பப்டும் ஒரு மனிதன். மட்டையை எடித்து களத்தில் நுழைந்தால், தானே செல்வது போல், ஒவ்வொருவரும் நினைப்பார். கொஞ்ச நேரம் அவரை விட்டு அப்பா டெண்டுல்கர் பற்றி யோசிப்போம். சராசரி அரசு ஊழியர், சிக்கன வாழ்க்கை, சின்ன சின்ன சாதனைகள்.

அவரது 40 – 45 வயதில் ஒரு பெரிய மாற்றம். 16 வயது மகன் பட்டையை கிளப்ப தொடங்கினான். சாதனைகள் அவன் பின் வந்தது. புகழ் பணம் எல்லாம் எதிர்பார்த்த்தற்கு மேல் வந்த்து. ச்ச்சினின் தகப்பன் என உலகம் அங்கிகரித்த்து. நல்ல பிள்ளையை பெத்துருக்கீயா என கொஞ்சியது. வாழ்க்கை தரம், சாதனை, அங்கீகாரம், பொருளாதாரம் எல்லாமே அவரது முனைப்பு இல்லாமல் கூரையை பிச்சிக் கொண்டு கொட்டியது.

நிற்க, இன்னொரு தகப்பனை பார்ப்போம். ஆட்டோ சங்கரின் அப்பா.

முகவரி இல்லாத, முகம் தொலைந்த அந்த மனிதனை நினைக்கிறேன். சராசரி வாழ்வாய் வாழ்ந்த அவரது வாழ்வின் மத்தியில் சூராவளி வீசியிருக்க வேண்டும். தவம் இருந்து பெத்த மகனை, ஒரு முழ கயிறில் அரசாங்கமே நீ வாழ தகுதி இல்லாதவன். நீ வேண்டாம், என பலவந்தமாய் உயிரை பறித்த போது பெத்த மனம் எப்படி இருந்திருக்கும். சமூகம், உறவுகள் அவரை எப்படி பார்த்திருக்கும். எஞ்சிய காலத்தை அவர் எவ்வளவு தர்மசங்கட்த்தில் வாழ வேண்டி இருந்திருக்கும்.

இந்த சிந்தனை எனை வேறு திசைக்கு இட்டு செல்கிறது.

மனித வாழ்வு இரு கூறாய் இருக்கிறது. நம் படிப்பு, உத்தியோகம் என தனது திறமையால் வரும் சமூக அங்கீகாரம் முதல் படி. இரண்டாம் படி நம் இளைய தலை முறை திறமையால் நமக்கு திணிக்க படும் அடுத்த வாழ்வு இரண்டாம் படி.

மத்திம வயதில் இது நடக்கும். 40 – 45 வயதுள்ளோர் அனைவரும் இதை உணர வேண்டும். உங்களை பரீசீலித்து ஒரு மார்க்கும் போட்டு உங்கள் தேர்வின் அரை இறுதி பரிட்சை ரிசல்ட் வந்து விட்ட்து.

இனி இருப்பது முழு பரிட்சை.

ஒரு கேள்வி நல்லது என தோணுது. முழு பரிட்சையின் முடிவுக்கு தங்களின் முயற்சி என்ன ????

வாழ்த்துக்கள்

எண்ணைக் குளியல்
சுடச் சுட வடை
அதிரும் வெடி
அலம்பலான திரைப்படம்
குடுப்பத்தோடு குதூகலம்

எத்தனை முடியுதோ அத்தனையும் வாய்க்க வாழ்த்துக்கள்.

படித்த்தில் பிடித்தது - சரித்திர சுவை

தூத்துக்குடி விட்டு ரயில் ஓடினால் அடுத்து நிற்பது மணியாச்சி.

அந்த காலத்தில் கரி வண்டியே இஞ்சின் என்பதால் வண்டி போகும் திசையோ, சன்னலோர இருக்கையோ சிலருக்கு பிடிக்காது. பறந்து வரும் கரித் துகளில் கண்ணும் எரியும், சட்டையும் நிறம் மாறும். எனவே அதை தவிர்ப்பவர் அதிகம். துவைப்பது நான் இல்லை என்பதால் எனக்கு ஒன்றும் கவலை இல்லை.

மணியாச்சியில் வண்டி மாறும், அதற்கு பிறகு டீசல் எஞ்சின். செங்கல்பட்டு வரை. அப்புறம் எலெக்டிரிக். 1970 ம் ஆண்டின் நிலவரம், தெரிந்தவருக்கு இது நினைவை உரசும், புதியவருக்கு நினைவு விதைக்கும் என நம்பி தொடருகிறேன்.

நடுவில் தட்டபாறை எனும் சிற்றூர். சிறுவர் சீர்திருத்த பள்ளி இங்கு உண்டு. எங்கள் ஊரில் மிகுந்த சேட்டை செய்யும் சிறுவரை பயமுறுத்த ‘ஒழுங்கா இரு, இல்ல தட்டாப்பாறை செயில்ல தள்ளிருவேன்’ என்று திட்டுவார். என் சோட்டு பையன்கள் எல்லோருக்கும் இந்த தட்டாப்பாறை என்றால் பயம் உண்டு.
சிகு புகு என வேகமாய் செல்லும் ரயிலின் கம்பி சன்னல்களூடே ஒரு வித பயம் கலந்து பார்ப்பது வழக்கம். ஒரே ஒரு முறை ரயிலில் எங்களோடு சீர்திருத்தப் பள்ளிக்கு கொண்டு செல்லும் இளைஞன் ஒருவன். கருத்த கைகளில் பள பள விலங்கு. சவரம் செய்யாத, காற்றின் தயவில் கலைந்த அழுக்கு தலை, காவியேறிய பற்கள், மெலிந்த தேகம். இவன் என்ன செய்திருப்பான் என அறியத் துடிக்கும் மனது பக்கத்தில் உள்ள விறைப்பான காக்கி உடை பார்த்ததும் சுருங்கிக் கொண்டது.
மணியாச்சி வந்த்தும் எங்கள் பெட்டியை விட்டுவிட்டு, ரயில் சென்று விடும். இனி நெல்லையில் இருந்து வரும் நெல்லை எக்ஸ்பிரஸ் வரும் வரை காத்திருப்போம்.

மணியாச்சி போளி, வடை, முருக்கு, வெள்ளரி பிஞ்சு ரொம்ப பிரபலம்.


காத்திருக்கும் அதே நேரத்தில் ஒரு கதை சொல்லுவார்.

சுதந்திர போராட்ட்த்தில் உயிர் பலி வாங்கிய கதை அது. தீவிரவாதம் தொடங்கிய அத்தியாயம். பலியானது ஆஷ் எனும் வெள்ளையர். கொன்று பின் கழிவரையில் தன்னையும் சுட்டு தற்கொலை செய்தவர் வாஞ்சி ஐயர்.


காலச்சுவடு தந்த அரிய தகவல்கள். ரொம்ப பிரமாதம்.




வாஞ்சியின் இறந்த உடலில் – எடுக்கப்பட்ட கடிதம்


ஆங்கில சத்துருக்கள் நமது தேசத்தைப் பிடுங்கிக்கொண்டு, அழியாத ஸனாதன தர்மத்தைக் காலால் மிதித்துத் துவம்சம் செய்துவருகிறார்கள். ஒவ்வொரு இந்தியனும் தற்காலத்தில் தேசச் சத்துருவாகிய ஆங்கிலேயனைத் துரத்தி, தர்மத்தையும் சுதந்திரத்தையும் நிலைநாட்ட முயற்சி செய்துவருகிறான். எங்கள் ராமன், சிவாஜி, கிருஷ்ணன், குரு கோவிந்தர், அர்ஜுனன் முதலியவர் இருந்து தர்மம் செழிக்க அரசாட்சி செய்துவந்த தேசத்தில், கேவலம் கோமாமிசம் தின்னக்கூடிய ஒரு மிலேச்சனாகிய ஜார்ஜ் பஞ்சமனை (George V) முடிசூட்ட உத்தேசம் செய்துகொண்டு, பெருமுயற்சி நடந்துவருகிறது. அவன் (George) எங்கள் தேசத்தில் காலை வைத்த உடனேயே அவனைக் கொல்லும்பொருட்டு 3000 மதராசிகள் பிரதிக்கினை செய்துகொண்டிருக்கிறோம். அதைத் தெரிவிக்கும்பொருட்டு அவர்களில் கடையேனாகிய நான் இன்று இச்செய்கை செய்தேன். இதுதான் இந்துஸ்தானத்தில் ஒவ்வொருவனும் செய்யவேண்டிய கடமை.
இப்படிக்கு,
R. வாஞ்சி அய்யர்
R. Vanchi Aiyar of Shencotta


தூத்துக்குடி சுதந்திரப் போராட்டமும்.


1906 இன் தொடக்கத்தில் தூத்துக்குடியில் சுதேசியம் முகிழ்த்தது. இந்தியாவின் பிற பகுதிகளில் சுதேசியம் என்றால் மெழுகுவத்தி செய்தல், வளையல் அறுத்தல் என்றிருக்க, தூத்துக்குடியிலோ சுதேசிக் கப்பல் கம்பெனி என்ற பிரம்மாண்ட முயற்சி மேற்கொள்ளப்பட்டது.
12 மார்ச் 1908இல் வ.உ.சி., சுப்பிரமணிய சிவா, பத்மநாப அய்யங்கார் ஆகியோர் கைதுசெய்யப்பட்டனர்.
இதற்கு எதிர்ப்புத் தெரிவிக்குமுகமாக அடுத்த நாள் திருநெல்வேலி நகர், தூத்துக்குடி, தச்சநல்லூர் ஆகிய ஊர்களில் பெரும் மக்கள் எழுச்சி ஏற்பட்டது. ‘திருநெல்வேலி கலகம்’ என்று அரசு ஆவணங்களில் அறியப்படும்
தூத்துக்குடியிலும் அனைத்துக் கடைகளும் அடைக்கப்பட்டன. கோரல் ஆலைத் தொழிலாளர் மட்டுமல்லாமல், பெஸ்ட் அன் கோ பணியாளர், நகர்மன்றத் துப்புரவு ஊழியர், கசாப்புக் கடைக்காரர், ஜட்கா ஓட்டுநர், சவரத் தொழிலாளர் என அனைவரும் வேலைநிறுத்தம் செய்தனர். 144 செயலில் இருந்த பொழுதும் அன்று பிற்பகல் வண்டிப்பேட்டையில் ஒரு மாபெரும் கண்டனப் பொதுக்கூட்டம் நிகழ்ந்தது.

சினிமா மாறுமா

திரைச் சலனப் படம் தொடங்கிய காலத்தில் கருப்பு வெள்ளை காமிராக்களே. மிக சக்தி வாய்ந்த விளக்குகளும், தூக்கிச் செல்ல வாகு இல்லாத காமிராக்களும் என ஸ்டுடியோக்குள்ளேயே திரைப்படம் எடுப்பது முடங்கிக் கிடந்த்து.

தொழில் நுட்பம் வளர வளர, ஒரளவுக்கு சிரமத்தில் சுமாரான ஒளியில் சினிமா செய்யலாம் என்றதும் ஹப்பா!!! என கடற்கரையையும் பூங்காவையுமாய் பார்த்து நகர்ந்த்து படக் குழு.

கள்ளிக்காட்டுக்கும், கிராமத்துக்கும் கூட்டி வந்தார் பாரதிராஜா.

இது திரைப்படம் உருவான சைடு. நம் பார்வையாளர் பக்கம் எப்படி.

காசு கொடுத்து, கால் கடுக்க கூயுவில் நின்று டிக்கட் வாங்கி பார்த்த சினிமா, கட்டை விரல் அழுத்த்த்தில் எம்.ஜி.ஆரையும் சிவாஜியையும் நடு வீட்டுக்கு கொண்டு வந்திருக்கிறது
(நன்றி: கலை ஞானி கமல் - தனது மய்யம் எனும் இதழ் வெளியீட்டு விழாவில் சொன்னது) நன்றி டி.வி, வி.சீ.ஆர்.


மழை விழும் மங்கல் பிரிண்டுகளும்,அறுந்து ஓடும் காட்சிகளும், சைடுல கடிச்சுருச்சு இனி ஒண்ணும் பண்ண முடியாது எனும் டேப் ஃபார்மேட்டுகளை ஓரம் போ என சொன்னது சி.டி.

வீசிடி யை விட நான் துல்லியமான படமும் ஸ்டுடியோ குவாலிட்டி சவுண்ட்டும் தருகிறேன் என்றது டீவீடி.
அதோடு நிற்காமல் பூளு ரே, எச்.டி.எம்.ஐ. என நாளோரு மேனியும் பொளுதொரு வண்ணமுமாய் வளருது.

சரி தொடங்கின இட்த்துக்கு வந்தால்.

மும்பை எக்ஸ்பிரஸில் தோல்வியான டிஜிட்டல் முயற்சி, ரெட் ஒன் புண்ணியத்தில் உன்னைப் போல் ஒருவனில் சக்சஸ்.

ரெட் டிஜிட்டல் எனும் கம்பேனி பிரத்யேகமாக இந்த காமிராக்கள் தயாரிக்கிறார்கள்.

சரி அடுத்து என்ன.

எல்லோரும் டிஜிட்டல் வழி வர சாத்தியம் உண்டு. இன்று எல்லோரும் நம்பியிருக்கும் பிலிம் விலை காரணமாய் மலை ஏறிவிடும்.

அப்படியா!!!! வரட்டும்.. வந்தால் என்ன நடக்கும்.

இன்றைய விலைப்படி இந்த ரெட் ஒன் காமிராவின் விலை சுமார் ரூபாய் 10 லட்சம். வாங்குவதோ அல்லது வாடகைக்கு எடுப்பதோ கூட சாத்தியமாகலாம். போஸ்ட் புரோடக்‌ஷன் வேலை சுலபமாயும் சுருக்கமாகவும் ஹை ஸ்பீடு பிசிய்லே முடிந்து விடும்.

எனும் போது திரையில் காட்டத் தகுந்த வடிவத்தில் ஒரு சினிமா எடுக்க நம்மால் முடியும்.

வலையுலகம் எனும் தொழில் நுட்பத்தால் இன்று நடக்கும் அக்கப் போரை பாருங்கள். படுக்காளியான நான் கவிதை கதை எழுதினால் முப்பது வருட்த்துக்கு முன் என்னவாகி இருக்கும். யாரோ ஒரு பதிப்பகத்தின் பின்னால் ஓட வேண்டி இருந்திருக்க வேண்டும்.

இன்று என் சவுகரியம் எனக்கே ஆச்சர்யம்.

தோணுவதை எல்லாம் எழுதுகிறேன். ஒரு பைசா செலவில்லை. கலை தாகம், தமிழ் தாகம் தீருகிறது. எழுதுவதற்கு ஒன்றுமே இல்லையே என சில நாள் டிரையாகவும் உள்ளது. எழுதுனா கேப்பாரும் இல்ல, எழுதலன்னா அடிப்பாரும் யாரும் இல்ல.

வலையுலகம் இப்படி ஆச்சுன்னா, அப்போ சினிமா நாளை என்னவாகும்....

செதுக்கும் சில சிந்தனைகள், வாழ்வை புரட்டிப் போடும் வல்லமையோடு – சிந்தனை 3

உன் லட்சியம் எதுவாயினும் அதை அடையலாம்.

எதுவாயினும்..... ????

அது எப்படிங்க...என நாம் டவுட் கேக்கும்போது பிரையன் ட்ரேசி கையை சுழற்றி, சொல்கிறார் ‘நீ டிசைட் பண்ணு. டிசைட் பண்ணி கமிட் ஆயிட்டேன்னா உன் பேச்ச நீயே கேக்க மாட்ட’ என்கிறார் அவரது அக்சிலேரட்ட்ட் லேர்னிங் எனும் அவரது அற்புதமான புத்தகத்தில்.

இதை கொஞ்சம் ஆழமாய் சிந்தித்தால், லட்சியம் ஒவ்வொருத்த்ருக்கும் உண்டு. பக்கத்து வீட்டு பொண்ண கட்டுறதுல இருந்து, கொடி நாட்டி கோட்டைய பிடிக்கிற வரை பரந்து விரிந்து பாய் போட்டு படுத்து இருக்கிறது.

காசு பணம் சம்பாதிப்பது, கடவுளை அடைவது ஏன் தொழிலதிபர் ஆகும் வரை என லிஸ்ட் நீளூது.

லட்சியத்த லட்சியம் செய்யாம அதை அடையும் வழி மட்டும் யோசிப்போம்.

என் லட்சியத்தை நிறைவேற்றும் சக்தி எனக்குள் இருக்கு அல்லது வெளியில் இருக்கு என்ற இரண்டே பிரிவுதான். இதெல்லாம் நடக்காதுங்க என்று பெறுமூச்சாய் சொல்பவரை ‘நெக்ஸ்ட் மீட் பண்ணுறேன்’ சிரித்த முகத்தோடு வழியனுப்பி விடுவோம்.

நமது இந்திய சிந்தனையில் இறை, விதி, ஜாதகம், என பல விசயங்கள் நம் தன்னம்பிக்கையே பதம் பார்க்கின்றன. வெள்ளைக்காரன் பரவாயில்ல இந்த சமாச்சாரங்கள் அவனுக்கு கொஞ்சம் குறைவு.

‘பையன் பிசினஸ் தொடங்கலாம்னு நினைக்கிறான். அவன் கட்டத்த பார்த்து கட் அண்ட் ரைட்டா சொல்லுங்க’ எனும் தகப்பனுக்கு ஜோசியன் என்ன சொல்லுவான்.

இந்த மேட்டர விலாவாரியா பார்த்து சொல்லும் வலு நம்ம ஜோதிட சாஸ்திரத்துக்கு இருக்கு என்றே நம்புவோம். இந்த அறிவியல பயன் படுத்திர வியாபாரி கையில் இருக்கு இப்போ.
பையன் பிசினஸ் சூப்பர் என்றால் பிரச்சனையே இல்ல. பிசினஸ் ஊத்திக்கும் என்றால் உடைச்சு சொல்லாம, பூசி மெழுகினான் என்றால் கேட்ட தகப்பன் என்ன செய்வான்.

எனக்கு லக்கினத்தில் வாத்து, நாலாம் கட்ட்த்தில நாய் இருக்கு, இரண்டு வருசத்துக்கு நேரமே சரி இல்ல, என்று குட்டிச் சுவரில் குத்த வைத்து இருக்கும் குமாரை பார்க்கும் போது உங்களுக்கு எப்படி தோன்றுகிறது.

சிவப்புக் கலர்ல மூணு மோதிரம் ஒரே விரல்ல போட்டா, அதிர்ஷ்ட லச்சுமி அள்ளிக் கொடுப்பா என்கிற மோச லால் சேட் எப்படி தோன்றுகிறார்.

உழைப்பும் தன்னம்பிக்கையும் இல்லாது நேரம் சரியாயிருந்தால் போதும் என்ற நினைப்பு எப்படி.

சரி பிரையன் டிரேசி சொல்வது என்ன

1. உன் லட்சியம் என்ன என்பதை ஒரு காகித்த்தில் எழுது
2. நேரம், அளவு, செயல் திட்டம் என முடிந்த வரை காகிதத்தை நிரப்பு

3. உன் லட்சியத்தை ஏற்கனவே அடைந்தவர் பட்டியலிடு முடிந்தவரை
4. அவர்கள் என்ன செய்ததால் இப்படி ஆனார்கள் என கண்டுபிடி
5. நீயும் அதையே செய்.... அவ்வளவுதான்....


சரி எனக்கு டெண்டுல்கர் போல் கிரிக்கெட்டில் ஜொலிக்க ஆசை. அவர் ஜொலிப்பதின் ஒரு பகுதி அவரது கடின பயிற்சி, ஒருங்கிய லட்சியம் என ஒத்துக் கொள்கிறேன். அதை என்னாலும் செய்ய முடியும் என்றும் நம்புகிறேன்.

ஆனால் அவரது இத்தகைய உயர்வுக்கு காரணம் அவரது கூரிய கண் பார்வை தானே. எத்தனை வேகத்தில் பந்து வந்தாலும் பார்க்க முடியும் அவரது இயல்பு தானே. இது போல் கூரிய கண் பார்வை உடைய கவாஸ்கரும் பெரிய பிஸ்து.
அது போல் மூளை இல்லாது, அனிச்சை எனும் தண்டு வடத்தின் செயல்பாடும் இவரது இன்னொரு கொடை. இந்த ரிப்லெக்ஸ் தானே அவரது பலம். அந்த தண்டு வட தடாலடி தானே பந்து வீசுபவருக்கு வயிற்றில் புளி கரைக்கிறது.

எனும் போது வரமாய் வாங்கி வரும் கொடைகளும் நமது முயற்ச்சியும் இணைந்தாலே தானே முடியும் என்ற எண்ணத்தில் தவறு இல்லை.

என்னால் முடியும் என்ற நம்பிக்கையோடு, முனைப்பும் சேர்ந்து, கடினம் எனச் சொல்லாது எனக்கு இந்த முயற்சியும் பயிற்ச்சியும் பிடிக்கிறது என்று நாம் சொல்ல தொடங்கினால் வானம் நம் கைக்கு எட்டும் தூரம் தான்.

தெய்வத்தால் ஆகாதெனினும் முயற்சி தன்
மெய்வருத்த கூலி தரும்

எனும் வள்ளுவ சிந்தனையும் இதுதானோ