பக்கங்கள்

கம்யூனிச கடுகு – விவாத விருட்சம் – மேலும் விரிகிறது

கம்யூனிசத்தில் தொடங்கி, யூதத்தில் பயணிக்கிறது நம் பதிவின் பின்னூட்டங்கள்.
தகவல் பட்டரையாக பட்டையை கிளப்புகிறது.

நன்றி திரு ஜோ பாஸ்கர்,

பெயரில்லா வினாவிற்கு விரிவாக விளக்கமாக விடையளிக்க ஆழமாமாகச்சிந்திக்க அலசி ஆராய வாய்ப்பளித்த உங்களுக்கும் படுக்காளிக்கும் ஆச்சிக்கும் எனது நன்றிகள்.

வினாவிற்கு குறும் பதில் :

இயேசு கிறிஸ்து தான் கிறிஸ்துவத்தை துவக்கினார். அவர் பிறப்பால் யூதர். ஆனால் முழுக்க முழுக்க யூத மத பழக்க வழக்கங்களையும் கொள்கைகளையும் எதிர்த்து, போதித்து, செயலாற்றி அதன் காரணமாக யூதர்களால் கொலை செய்யப்ப்பட்டவர்.

1. அவரது போதனைகள் / செயல் பாடுகள் யூத மதத்திற்கு முற்றிலும் எதிரானது.
2. யூதர்கள் அன்றும் இன்றும் என்றும் கிறிஸ்துவை கிறிஸ்துவத்தை எதிர்ப்பவர்கள்.
3. இயேசு தானே கிறிஸ்துவத்தை நிறுவி, அதன் கொள்கைகளை வகுத்து, செயல் பாடுகளை விளக்கி தனக்குப்பின் ஒரு தலைவரையும் நியமித்து அவருக்கு சாவியை வழங்கி அந்தப்பாறையின் மீது திருச்சபையை கட்டி வளர்ப்பவரும் அவரே.

விரிவான பதில் :

1. அவரது போதனைகள் / செயல் பாடுகள் யூத மதத்திற்கு முற்றிலும் எதிரானது :பன்னிரண்டு வயதிலேயே தாய் தந்தையை தவித்து தேட விட்டு விட்டு யூத மத அறிஞர்களோடு எதிர் வாதம் புரிந்தவர் இயேசு.

"கண்ணுக்குக்கண் பல்லுக்குப்பல்" - இது யூத மத நெறி. "எதிரிக்கும் அன்பு செய் - ஓர் கன்னத்தில் அடித்தால் மறு கன்னத்தைக் காட்டு" - இது இயேசுவின் நெறி.
ஒய்வு நாளில் எந்த வேலையும் செய்யக்கூடாது என்ற சட்டத்தை எதிர்த்தவர். "விபச்சாரம் செய்பவளை கல்லால் அடித்துக் கொல்ல வேண்டும்" - யூத சட்டம். "உங்களில் பாவம் இல்லாதவன் அவள் மீது முதல் கல் எறியட்டும்" என்று மன்னிப்பது இயேசு. மதலேன் மரியாளை மனமார மன்னித்த மனிதாபிமானி இயேசு.
"யூத இனம் தவிர மற்ற இனங்களெல்லாம் தாழ்த்தபபட்டவை; அவர்கள் தீண்டத்தகாதவர்கள்" - இது யூதம். ஆனால் சமாரியப் பெண்ணிடம் தண்ணீர் வாங்கி குடித்த சீர் திருத்தவாதி இயேசு.
ஒருவன் எத்தனை பெண்களை வேண்டுமானாலும் மணம் முடிக்கலாம். அதே போல் ஒரு பெண்ணும் குழந்தை இல்லாமல் ஒரு கணவன் இறந்தால் அவன் சகோதரர்களே அவளை மணக்கலாம். இது போன்றவற்றை எதிர்த்துக்குரல் எழுப்பியவர் இயேசு.
மீட்பர் ஒருவர் வருவார் விடிவு தருவார் என்று இன்னும் எதிர் பார்த்த்துக்கொண்டிருக்கிறது யூதம். தானே அந்த மீட்பர் மெசியா என்கிறார் இயேசு.
குருக்கள் மன்னர்களுக்கு சமமானவர்கள் - வரை முறை களுக்கு அப்பாற்ப்பட்டவர்கள் - எல்லோரையும் விட உயர்ந்தவர்கள் - இது யூதம். ஆனால் சீடர்களின் கால்களை கழுவி முத்தமிட்டு உங்களில் தலைவனாக விரும்புபவன் எல்லோருக்கும் வேலையாளாக இருக்கட்டும் என்றவர் இயேசு.

தொழு நோயாளிகளை ஊருக்குள்ளேயே அனுமதிக்காமல் நீக்கி வைத்தது யூதம் - அவர்களை தேடி சென்று பாவங்களை மன்னித்து ஊர்க்குளத்தில் குளிக்க்கச்சொல்லி குணமாக்கி சமுதாயத்தில் சேர்த்துக்கொண்டவர் இயேசு. ஒவ்வொருவன் அனுபவிக்கும் கஷ்டங்களுக்கும் நோய்களுக்கும் அவனது பாவமே காரணம். அதை மன்னிக்கும் உரிமை கடவுளுக்கு மட்டுமே உண்டு - இது யூதம். தானே பாவங்களை மன்னித்து குணமளித்து யுத்தத்தை குட்டியது இயேசு.

ரோமைப் பேரரசு யூதர்களின் எதிரி எனவே வரி கட்டக்கூடாது என்றனர் சில யூதர். ஆனால் "சீசருக்குரியதை சீசருக்கும் இறைவனுக்குரியத்தை இறைவனுக்கும் கொடு" என்றவர் இயேசு.
யூத மதத்தின் மையமும் மிகவும் புனிதமனதுமான எருசலேம் ஆலயத்தை இடித்து விடுங்கள் - அதை மூன்றே நாளில் மீண்டும் கட்டி எழுப்புவேன் - என்றவர் இயேசு.யூதர்களின் எருசலேம் ஆலயம் முழவதும் இடிந்து விடும் - ஒரு கல்லின் மேல் இன்னொரு கல் கூட நிற்காது என்று கணித்துச்சொன்னவர் இயேசு.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக