பக்கங்கள்

‘நான் கிருஷ்ணா தேவராயன்’ ஒலிப்புத்தகம் வெளியீடு....


அன்புடையீர்


நாளை ... (9th APRIL 2017)                   ‘நான் கிருஷ்ணா தேவராயன்’ ஒலிப்புத்தகம் வெளியீடு....


அவசியம்  வாருங்களேன்...  அழைப்பிதழ் கீழே உள்ளது...

நான் கிருஷ்ணா தேவராயன்’ ஒலிப்புத்தகம் ஒரு நல்ல உணர்வு பயணம்
காதல்...ஏக்கம்தனிமை... தவிப்பு... .. இயலாமை.என காதலில் அவரோடு நாமும் தவிப்போம் .....

சரித்திரம் குறித்தும்... அன்றைய....  சம்பிரதாயங்கள் குறித்தும்..  அறியும் போது... வியப்பாக   இருக்கும்...

இதை கேளுங்களேன் ....

அன்றைய துளுவ வம்சத்து சக்கரவர்த்திகள்... அரண் மனைக்குள் நடக்க மாட்டார்களாம்.. !!!!!

அப்புறம் எப்படி என்றால்....  அவருக்கு உலவ வேண்டும் என்றால். கையை தட்ட வேண்டுமாம்...அழகிய இளம்.. பெண் வந்து... திரும்பி நின்று... குந்தி அமருவாளாம்...  ராசா  ஏறி அமர்ந்ததும் உப்பு மூட்டை சுமந்த படி.. செல்ல வேண்டுமாம்...  ... எப்படி இருக்கிறது கதை..

சென்ற மாதத்தில், ஒரு நாள், நண்பர் பம்பாய் கண்ணன் தொலைபேசியில் அழைத்தார்.

லாரன்ஸ்... ஒரு சின்ன வேலை.. அந்த, ஆடியோ .. புக்  ‘நான் கிருஷ்ணா தேவராயன் ….. அதில ஒரு இடம்  உங்க . உச்சரிப்பு சரி. இல்ல... டைம் கிடைக்கும் போது போய் பண்ணிடுங்க  நாராயணனுக்கு தெரியும் என்றார்...

நான்  எதிராஜாவா  நடித்துள்ளேன்.... ஓக்கே டன் சார்... என்றேன்....

இரண்டொரு நாளில், ஸ்டுடியோ .. சென்று நாராயணனை பார்த்தேன்.. 

ஆசார அனுஷ்டானங்கள்... அதில் ஆசார என்பதை... ... ஷ்...  ஷ் ஷா ரா... என்பது போல் செய்திருந்தேன்.. அதன் சரியான உச்சரிப்பு  ஆசாரம் தான்..
இரண்டு வார்த்தைகள் தான், மிக எளிதான கரெக்க்க்ஷன்   ... தான்.. ஆனாலும் சட்டென எனக்கு பதறியது...

காரணம்...

இந்த ஒலிப்பதிவு  செய்தது சில மாதங்களுக்கு முன்னால் ... அப்போது எனக்கு நல்ல மூக்கடைப்பு. ... ஆனால் இன்றோ எல்லாம் திறந்து இருக்கிறது.... எப்படி சமாளிப்பது... ஜம்ப் தெரிந்து விடுமே...

நாராயணனிடம்.. தலைவா.. ஒருஹெல்ப்... கொஞ்ச்ம லாங் கியூ.... கொடுங்க.. என சொல்லி.. ஹெட் போனை மாட்டி... கண்ணை மூடி. கொண்டேன்..

ஓவொரு வார்த்தையிலும் அணுக்ககத்திலும் ஒலியிலும் கவனம் செலுத்தினேன்... அதே அணுக்கத்தோடு, இந்த இரு வார்த்தைகளையும் சட்டென சொல்லி முடித்தேன்.... ஹாப்பி..... அப்பாடா தப்பித்தேன்….

எத்தனையோ.... நேர மெனக்கெடல்களும்.. சிரமங்களும் சுமந்து வரும் இது போன்ற  கலை படைப்புக்கள்.. மனதுக்கு தரும் இதம் இருக்கிறதே...

நாளை.. பாருங்களேன் .. 

பேராசிரியர்... மற்றும் என் ரசிகர்.. திவாகர்... வந்து... என் .. கையை பிடித்து... பேசுவார்... 

ஹாங் லாரன்ஸ்...  இதையும் கேட்டுட்டு.... போன் பண்றேன்.. என்பார்.. 

நான்.. கண் கசிந்து.. அவரது.. பார்க்காத விழிகளை பார்த்து கொண்டே நிற்பேன்.. அவர் மட்டும் முகம் மலர்ந்து.. பற்கள்.. தெரிய பேசுவார்...  

என்ன செய்ய முடியும் அவரது அன்புக்கு முன்னால்….. 


https://www.facebook.com/photo.php?fbid=700671110058094&set=a.171304329661444.16351.100003456350992&type=3&theater