பக்கங்கள்

தாயே - நீங்கள் வாழ்க…

மகளிர் தினம் -

புதுயுகம் தொலைக்காட்சியில் - சிறப்பு விருது நிகழ்ச்சி .

கொரானா பெருந்தொற்று… நம்மை முடக்கி போட்டது உடலாலும் – மனதாலும்...

நாம் பயம் கொண்டோம்…

இந்த சோதனையான காலத்தில்.. போற்றுதற்குரிய… இந்த மனித தெய்வங்கள் நமக்காக பணியாற்றியது.…..

துணிவை துணையாக்கி
கனிவை தனதாக்கி
மகிழ்வோடு - தன்னலமற்ற தொண்டாற்றிய இந்த அன்னைகளின்….

குணங்களை சொல்ல… இறைவன் எனக்கு கொடுத்த வாய்ப்புக்கு நான் நிறைவு கொள்கிறேன்…

தாயே.. நீங்கள் வாழ்க…
இந்த மங்கைகளின் விருது விழா எனக்கு மகிழ்வாய் இருந்தது…

தாயே… !!!
உங்கள் மனத் திடத்தின்.. ஒரு படி
உங்கள் கனிவின் ஒரு துகள்
உங்கள் தன்னலமற்ற சேவையின் ஒரு பிடி…
இந்தப் பிள்ளைக்கு தாருங்களேன்