பக்கங்கள்

விரைவில் எதிர் பாருங்கள் .....


விரைவில் எதிர் பாருங்கள்
உங்கள் அபிமான 'அப்ராணி அம்மாஞ்சி ' வெடிக்கும் ....
வெடித்து தெரிக்கும் !!!
( திரைப்படத்திற்கு இப்படி ஒரு ட்ரைலர் போடுவார்கள்.
இலக்கியம் என்ன இழைத்தா போயிற்று )


*********** அதல குஜல அப்ராணி அம்மாஞ்சி ****************

பொன் நிற சூரிய கிரகணம் ரத்தினகிரி சாலையை தொட்ட அந்த தருணம் நான் வெளி முற்றத்தில் சம்பாஷித்துக் கொண்டு இருந்தேன்.

என் பெயர் இன்ப சேனன்.

நான் கல்வியில் பூரண பாண்டித்துவம் பெற்ற போது என்னை பண்டிதர் கொண்டாடுவார் என்று எண்ணி ஏமாந்தேன்.

ஆனால் என் உபாத்தியார் தலையில் கூட்டினார்.

தலை தடவிக் கொண்டு கேட்ட போது, என் தொல்லை தாங்காது பள்ளியில் இருந்து துரத்த எண்ணியே எனக்கு பாண்டித்துவம் பரிசளித்ததாய் பகர்ந்தார்.

ரொம்ப வலி.

ஆனாலும் நான், யெவ்வன புருஷன். ......................



பிரபாகரன் - கண்ணீர் தேசம்

தமிழ் என்ற உணர்வு ரத்தத்தில் கொஞ்சம் அதிகப்படியாக இடம் பிடித்த கூட்டம் நாம். வேறு எந்த மொழி பேசுபவருக்கும் இல்லாத ஒரு பிரத்யேக மொழி வாஞ்சை, முரட்டு அன்பு நமக்கு உண்டு.

நம் அண்டை நாட்டில் நம் மொழி பேசும் கூட்டம், அதை நம் கூட்டம் என்று மனதில் கொண்டுள்ளோம்.

இன்று மிக துன்பத்தில் உள்ளது.

பிரபாகரன் நமக்கு நன்கு அறிமுகமாகி இன்று நம்மை விட்டு பிரிந்தும் இருக்கிறார். அவர் இறப்பை எப்படி பார்க்க என்று குழம்பி இருக்கிறோம் என்றால் அது மிகை ஆகாது.

இறந்து போன ஒரு மனிதரை பழித்து பேசுவது முறை அல்ல என்ற தார்மீக சிந்தனை அல்லாது, ஓவ்வொரு மனிதனின் செயலும் சூழ்நிலையின் வெளிபாடு என்று நம்புவதால் எழுந்த எண்ணம் இது.

வன்முறை ஆதரிக்கும் எண்ணம் எனக்கு இல்லை. என்றாலும் ஒரு கன்னத்தில் அறைந்தவனுக்கு மறு கன்னத்தை காட்டு என்ற புனித சிந்தனை சாமானியருக்கும் வருமா என்ற கேள்வியும் உண்டு.

ஒரு தனி மனிதனாய் தொடங்கிய பயணம் ஒரு நாட்டையே ஆட்டி படைத்தது என்றால் ஜீரணிக்க கஷ்டம் ஆனா ஒரு வாழ்கை அது. பெரிய ஆற்றல் உடைய மனிதர் தான் இதை செய்ய முடியும்.

ஆற்றலும் வீரமும் விவேகமும் உள்ள ஒரு கூட்டத்தை சமைத்து விடுதலை தேடிய அவர் வேட்கை புரிவது கொஞ்சம் கஷ்டம். சராசரி பாதுகாப்பான நம் வாழ்கை போல் அல்லாது ரத்தத்திலும் மரணத்திலும் துரோகத்திலும் வாழ வேண்டிய ஒரு துர்பாக்கியமான வாழ்வு பெற்ற அவருக்கு நம் இரங்கல்கள்.

அவரின் தாக்கும் அணுகுமுறை நமக்கு சற்றே அன்னியம். என்றாலும் அவர் அந்த ஆயுதத்தை கையில் எடுக்க வாய்த்த சூழ்நிலையும் நமக்கு அன்னியம்.

தாய் தந்தையை கண் முன்னால் சுட்டு கொன்று, ஆறு மிருகங்கள் ஒரே நேரத்தில் பாலியல் பலாத்காரம் செய்த பின் ஒரு பெண் / அல்லது பூவை குளித்து முடித்து அஹிம்சை போதிக்க வேண்டும் என்று நாம் சொல்லுவதோ எதிர்பார்ப்பதோ மடமை.

புலிகளின் வீழ்ச்சி ஒரு தீர்வாகுமா.

என் மொழி பேசுவதால் என் சகோதரன் சகோதரியாய் நான் பார்க்கும் இந்த மக்கள் கூட்டம் அமைதி பெறுமா.

மன்னித்து விடுங்கள்

ஒரு அத்தியாயம் எழுதி விட்டு பாதியில் விட்டு விட்டாயே ஏன். ...
இரண்டாம் பகுதி எப்போது ....

என்று அற்புத மணல் மாதா கோவில் பதிவு பற்றிய மின்னஞ்சல் சில கிடைக்க பெற்றேன்.

ஒரு தவறு செய்து விட்டு வெட்கப் பட்டு கூட்டுக்குள் பதுங்கி விட்ட நிலையே படுக்காளிக்கு.

அவசரம் அவசரமாய் எழுதியதால் தாறு மாறாய் தப்பு தப்பு தகவல்கள் அந்த முதல் அத்தியாயத்தில். கற்பனை செய்யும் சுதந்திரம் உண்டு என்றாலும் ஒரு வருடத்தில் நடந்ததை ஒரு நாள் என்று எழுதுவது அரை வேக்காட்டு தனம்.

மன்னித்து விடுங்கள்.

சிறிய ஆராய்ச்சிக்கு பின் அதை எழதுவது என்று முடிவு எடுத்து உள்ளேன்.

ஒரு வார அவகாசம் வேண்டுகிறேன்.

தேர்தல் முடிஞ்சுச்சு.!!!

நான் போட்ட தேர்தல் நிலவரம் பதிவு மறுபடி படிச்சு பார்த்தேன்.
கேரளா, மூன்றாம் அணி பத்தி சொன்னது சரி ஆச்சு.
ஆனா அம்மா பத்தி சொன்னது ரிவேர்ஸ் ஆச்சு.
குதிரை பேரம் நடக்கும் என்று நான் சொன்னது தப்பா ஆச்சு.

கூட்டணியிலே விட்ட கோட்டை பெரிய ஓட்டையா தான் இருக்கு என்று நான் சொல்ல - காலம் அதை திருத்தி இப்படி எழுதி விட்டது.
கூட்டணியில் விட்ட கோட்டை நல்ல வேட்டை.

இல்லேனா அனாவசியமா இடது, லாலு, மாம்பளம்னு தேவை இல்லாம வம்பை விலை கொடுத்து வாங்கி இருக்கனும். குடும்பத்துல உள்ள எல்லோருக்கும் பதவி கேட்பது ஒரு தொந்தரவுதான், ஆனா ஊடு செங்கல் உருவறது இல்லாததால தி மு கா பரவாயில்லை என்று காங்கிரஸ் நினைத்திருக்கும்.

காங்கிரஸ் காட்டிலே மழை.

அடிப்படையா பார்த்தா - மன் மோகன், அத்வானி, இவர்களில் முன்னவர் பெட்டர். வாக்காளர் இப்படி யோசிச்ச முடிவு மாதிரி தெரியுது. இப்ப ஓட்டை போடுங்க, நாங்க கூடி கும்மி அடிச்சு ஒரு தலைவன அல்லது தலைவிய தேர்ந்தெடுப்போம் என்ற வாதம் பிடிக்கவில்லை போல் தோன்றுகிறது

தோல்வியை ஒத்து கொண்டு - எதிர்பாராதது, காங்கிரசுக்கு வாழ்த்துகள் என்று தொலைபேசியில் பேசிய அத்வானியை பிடித்தது. ஆனா இதே ஆளு அந்த அப்புராணி மன் மோகன் சிங்கை சோம்பேறி என்று பிரச்சாரத்தில் பேசியது நினைவுக்கு வந்து மறந்தும் போனது.

ஜெயிச்சது சரி. அதுக்கு காரணம் ராகுல் அவர மந்திரி ஆக்குவேன், என்ற பேச்சு காங்கிரசுக்கு வேண்டுமா. செய்யனுமுனா செய்ங்க, செய்யுறதா சத்தம் இல்லாம செய்யுங்களேன்பா

டாக்டர் ஐயா சுறுசுறுப்பாய் அணியை மாத்தி அம்மாகிட்ட வந்ததும், கூட்டணி பலம் ஆனதும் வெற்றி நமக்கே என்ற தோரணையில் அம்மா நடந்ததும் கொஞ்சம் ஆட வெட்டுறதுக்கு முன்னாலே ______ சுட்ட கதையோ.

விஜய காந்த பலம் பரவாயில்லை. ஆனா நாயர் பிடிச்ச புலி வால் கதையா, அம்மாவையும் ஐயாவையும் சரி இல்லேனு சொல்லிட்டு கூட்டணியும் வைக்க முடியாம, ஜெயிக்கவும் முடியாம தவிக்கிராரோ.

வை கோ வின் இந்த தேர்தல் தோல்வி துக்கம் தான். ஆனால் எல்லார் கையிலேயும் நோட்ட திணிச்சு என்ன தோக்க அடிச்சிட்டாங்க என்று சொல்லுவது, தலைவனுக்கு அழகா. வெற்றியை சமாளிக்க எந்த முட்டாள்களாலும் முடியும், ஆனால் தோல்வியை சந்திக்க ஒரு வீரம் விவேகம் வேண்டும் என்ற பழமொழி நினைவில் கொண்டால் இந்த அடி ஒரு படி ஆகும்.

தேர்தலில் செயிப்பது எப்படி என்று அஞ்சா நெஞ்சன் கிளாஸ் எடுக்கலாம். சொல்லி சொல்லி நோட்டையும் ஆட்களையும் வெற்றியையும் அடிப்பது அவரின் தனித்துவம்.

காசு வாங்கிகிட்டு ஒட்டு போட்டாங்க என்ற குற்ற சாட்டு எப்போதும் உண்டு.

எனக்கு தெரியலே, அதால கேட்கிறேன். உயர் மட்டத்திற்கும், நடுத்தர வர்கத்திற்கும் இவங்க காசு கொடுக்கிரதில்லே. அப்போ ஏழை பாளை மட்டும் தான் இந்த காசு வாங்கிகிட்டு ஒட்டு போடுரன்களோ. சரி காச வாங்கிட்டு மாத்தி போடுங்கன்னு சொன்னாலும் கேட்காம சரியாதான் குத்துராங்க இப்ப அமுக்குராங்க.

சிங்கம், கரடி - கார்த்திக், விஜய ராஜேந்தர் அணில் முயல் எல்லாம் அடுத்த தேர்தல் வரை ரெஸ்ட் எடுத்துட்டு அடுத்த தேர்தல் வந்ததும் மறுபடி வந்து எங்களை கிச்சு கிச்சு முட்டனும்னு சங்கம் சார்பா கேட்டுகிறேன்.

வெற்றி பெற்ற இன்னொரு சிங்கத்துக்கு (ஜெ கே ரித்தீஷ் )சங்கம் சார்பா வாழ்துக்கள் .

அஞ்சு வருஷம் ஆண்ட அதே ராசா மறுபடி பதவிக்கு வந்து இருக்கிறார், சில மாற்றங்களோடு. ஆனா இவர் தான் ராசா இது இப்படி தான் அது அப்படிதான்னு சொல்லுரகுக்கு வேற எதாவது மார்க்கம் இருந்துச்சுனா நாம செலவழிச்ச தேர்தல் பணத்திலே நாட்ட தூக்கி நட்ட குத்தல் ஆக்கியிருக்கலாமே என்று ஒரு நப்பாசை.

வேற ஒண்ணும் இல்லை, இந்த தொல்லைகள் எல்லாம் இல்லாத மன்னர் ஆட்சியில வாழ்ந்து கொண்டு இருக்கிற பாதிப்பு படுக்காளிக்கு

மச்சான் தயவு இருந்தா மலை ஏரி புளைக்கலாம்.

'மச்சான் தயவு இருந்தா மலை ஏரி புளைக்கலாம்'

'முத்து குளிக்க வாரிகளா'


இரண்டில் ஒன்று தலைப்பாய் கொள்ளலாம் என்று எண்ணம்.

என்னடா படுக்காளி இது மொட்டை தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சு போடுற... என்று கேட்பது கேட்கிறது.


பாண்டி நாட்டு முத்து ரொம்ப பிரபலம்.பல பல நுற்றாண்டுகளாய்.
அந்த முத்து நகர் சார்ந்த ஒரு தகவல் இது.

முத்து எடுப்பது என்பது, சிப்பியை பிளந்து முத்தை புடுங்குவது.
சிப்பியை எடுப்பது முத்து குளிப்பது.

மேற்படி விவரங்கள்.

என்று முத்து குளிப்பது அரசு உடமையாய் ஆக்கப் பட்டு, முத்து ரத்தானதோ, அதற்கு முந்திய கால கட்டத்தில் உருவான ஒரு சமூக பழ‌க்கம் இது.

முத்து குளிக்க கடலின் உள் செல்லும் முன், அவன் இடுப்பில் கயிறு கட்டி அதன் மறு முனையை தோழ‌னுக்கு கொடுத்து விட்டு செல்வது வழக்கம். கடலின் ஆழத்தில் முச்ச‌டக்கி செல்லும் மீனவன், சில நேரம் மயங்கி விழும் அபாயம் உண்டு. இடுப்பில் கட்டிய கயிரு பதத்தில் அதன் அசைவு கொண்டு கடலுக்கு அடியில் உள்ள விவரம் தெரியும் புத்திசாலித்தனம் உண்டு சக தோழ‌னுக்கு.

அதே நேரத்தில் உன்னிப்பாய் இருந்து கயிறு தூக்கி விட வேண்டிய கட்டாயம் உண்டு. சுருக்கமாய் சொன்னால் சுருக்கில் உள்ளது உள்ளே சென்ற தோழனின் உயிர். உயிர் விலை தெரிந்து செய்ய வெண்டிய வேலை இது. யாரிடம் கொடுபது இந்த வேலையை. சரி மரபு படி இந்த வேலையை யார் செய்தார்கள். காலம் காலமாய் அவர்கள் கொடுத்தது இவரிடம். மச்சான். உறவு முறையில் மைத்துனன். அதாவது பெண்டாட்டியின் உடன் பிறந்தவன். கடலும் கடல் சார்ந்த இடத்தில் இப்படி ஒரு பழக்கம் என்றால், மலையும் மலை சார்ந்த இடங்களில் தேன் எடுக்க செல்லும் போதும், இந்த கயிறு கட்டி கொடுத்தது தாலி கயிறு தொடர்பிலே தான்.

ஒரு நிமிடம் சிந்தித்தால் இந்த ஆழமான உறவு,
உயிரையே நம்பி ஒப்படைக்கும் உறவு இன்று உண்டா....

அற்புத மணல் மாதா கோவில் - பகுதி 1




ரத்த சிவப்பிலே பாலைவன மண். எங்கு பார்த்தாலும் சிவப்பாய் ஒரு பூமி. சுட்டெரிக்கும் வெயில். உஷ்ணக் காற்று மணல் வாரி தட்டும். நடக்கும் பொது கால்கள் புதையும். சொக்கன் குடிஇருப்பு என்று பெயர் இந்த ஊருக்கு.

தூத்துக்குடி அருகிலே இந்த ஊர் சில ரகசியங்களையும் சரித்திரத்தையும் தன்னுள் ஒளித்து வைத்து இருக்கிறது. அந்த ரகசியங்களை பங்கு வைக்க படுக்காளி நான் விரும்புகிறேன். வாருங்கள் சில ஆண்டுகளுக்கு முன்னே நடந்த ஒரு உண்மை சம்பவம் சொல்லி நம் பதிவை தொடங்குவோம்.

கால்நடைகளை நம்பி இங்கே ஜீவனம்.

ஆடு மேய்க்க கிளம்பினான் நம் சிறுவன் ஒருவன். கருத்த மேனி, மெலிந்து இருந்தது அவன் உடுத்திய அரை குறை ஆடையில் தெரிந்தது. கோவணம் தானே இங்கு ஊர் முழுவதும் தேசிய ஆடை. பித்தளை தூக்கு சட்டியில் மதியம் உண்பதற்காய் பழைய சோறு.

கையில் ஒரு கழியோடு தோளில் போர்த்திய கந்தல் ஒன்றோடு அன்றாட பணிகளை தொடங்கினான் அவன். பச்சையாய் வளர்ந்து இருந்த குத்து செடிகள் சிலவற்றில் கால்நடைகளை மேய விட்டு விட்டு அங்கிருந்த மரத்து நிழலில் சாய்ந்தான். தருவை ஏரி குளிர்ந்த காற்றை வீசி அடித்தது. நடந்த களைப்பும், குளு குளு காற்றும் கண்ணை அசைக்க வாய் திறந்து ஒரு கொட்டாவி விட்டு சோம்பல் முறித்தான்.

"செத்த மூதி கண்ணை கட்டுதே, இப்ப தூங்கினா கருத்த ஆடு ஓடி போயிரும். அவன பிடிக்கிறது பெரிய துன்பம், என்ன செய்யலாம் கட்டி போட்டுட்டு கட்டையை போட வேண்டியது தான்" என மனசுகுள்ளே பேசி விட்டு ஆடு கட்ட எதாவது தோது படுமா என்று சுற்றி முற்றி பார்த்தான்.

சற்று தொலைவில் ஒரு கட்டை. சிவந்த மண்ணில் ஒரு கருப்பு கட்டை. கை தடிமனில் ஒரு அடி உயரத்தில். பட்டு போன மரமா, அல்லது யாரும் இறுக்கி அடித்த ஆப்பா. தெரியவில்லை.

அதன் பலம் பரிசோதிபோம் என்று ஆட்டி பார்த்தான். அசையவில்லை. கை தான் வலித்து. ஏறி நின்று பார்த்தான். ஒரு ஆட்டமும் இல்லை. அவனுக்கு வினோதமாய் இருந்தது. சின்ன கட்டை. பட்டு போன மரத்தின் கிளையும் இல்லை. ஆனால் பலமாக உள்ளது. சரி மண்ணை தோண்டி பார்ப்போமே, என்று கையில் உள்ள கம்பு கொண்டு மண்ணை விலக்க ஆரம்பித்தான். சில அடி தூரத்தில் படுத்த வாக்கில் அதே போல் இன்னொரு கட்டை. என்னடா இது.

தலை உயர்த்தி பார்த்து சக சிறுவர்களை உதவிக்கு அழைத்தான். அவர்களும் உதவிக்கு வந்து, சில மணி துளிகள் செலவழிக்க ஒரு கிறிஸ்துவர் சிலுவை அங்கே இருந்தது. 'டே வேத கோயில் சிலுவைடா' என்று குரல் கொடுத்தனர்.

சிலுவை விவரம் கிராமத்தில் தெரிய ஆரம்பித்தது. காட்டு தீ போலே அந்த ஊரை சுற்றி கொண்டது. ஊர் மொத்தமும் அந்த இடத்தில கூடியது. சிலுவை இருந்த இடத்தில இன்னும் தோண்டினர். ஒரு சிமெண்ட் தரை தென்பட்டது.

எல்லோருக்கும் ஆச்சரியம். சரி மேலே தோண்டுங்கள் என்று எல்லோரும் கை கொடுத்தனர். தோண்ட தோண்ட ஆச்சரியம் விரிந்தது. ஒரு பனை உயரம் தோண்டி பின் ஒரு கோவில் அங்கு இருப்பது தெரிந்தது. மண்ணை விலக்கி எல்லோரும் அந்த கோவிலினுள் வாசலை திறந்தனர். நீண்ட அந்த கோவில் உள் அறையை கண்டு பேச வார்த்தைகளின்றி நின்றனர். அங்கே அவர்களுக்கு ஒரு ஆச்சரியம். நட்ட நடு பூசை மேடையில் ஒற்றையாய் ஒரு மெழுகு திரி. சுடர் விட்டு பிரகாசமாய் எரிந்து கொண்டு இருந்தது.

தன்னிசையாய் எல்லோரும் முழந்தாள் இட்டு இறைவனை வணங்கினார்கள். அதிசயம் அற்புதம் என்று எல்லோரும் கூக்குரல் இட்டனர்.

ஊரே திகைப்பும் ஆச்சரியத்திலும் உள்ள போது அந்த திண்ணை கிழவியை யாரும் கண்டு கொள்ளவில்லை. அவள் பார்வை தொலை தூரத்தில் நிலை பெற்று இருந்தது. கண்ணில் சில நீர் துளிகள். வாய் மட்டும் முணு முணுத்து கொண்டு இருந்தது.
“புண்ணியவதி ..... அநியாயமாய் அவளை கொன்னுடிங்களே!!! தலையிலே ஆணி இறங்கினபோ அவ என்ன பாடு பட்டுருப்பா, அவ சாபம் நம்ம சும்மா விடுமா”
............. தொடரும்

கிரிட்டிகல் டெம்பெரேச்சர்

என்னோடு பள்ளியில் படித்த நண்பன் சகாயம்.

எங்கிருக்கிரானோ தெரியவில்லை. அவன் நினைவுகள் மட்டும் என்னோடு. நேற்று அவனை பற்றி என் மகனிடம் சொல்லிய போது விழுந்து விழுந்து சிரித்தான். நானும் கூடவே.

என்னடா படுக்காளி இது. அடுத்தவரை கேலி செய்து சிரிக்கலாமா தப்பு இல்லையா என்று கேட்பவருக்கு. சரி தான். தப்பு தான்.

சில சந்தர்பத்தில் நானும் சகாயம் போல் செய்திருக்கிறேன். இந்த சகாயம் நம் எல்லோரிடத்திலும் உண்டு என்று தோன்றுகிறது. நம்மை நாம் கேலி செய்து சிரிப்பது…. ஓகே.

சரி விஷயத்திற்கு போவோம். அப்படி என்ன அவனை பற்றி.

புஸ்தகத்தை காப்பாத்துவதில் அவன் கெட்டி. நல்ல பாட புத்தகம் அல்லவா, அதை பிரித்து படித்து அழுக்காக்குவதிலோ கிளிப்பதிலோ அவனுக்கு துளியும் இஷ்டம் இல்லை. பரிட்ஷையே வந்தால் கூட அவன் கொள்கையில் பிடிவாதமாய் இருப்பான்.

அவன் தெளிவாக தேர்வுக்கு செல்வான். மனம் போலவே அவன் விடை தாளும் இருக்கும். எல்லோரும் அடித்து பிடித்து விடை எழுதி கொண்டு இருக்கும் போதும், பேனாவால் தலையை குத்தி கொண்டும் இருக்கும்போதும் பூ போலே சிரித்து கையை முறுக்கி முறுக்கி எனக்கு ஒன்றும் தெரியாது என்பதாய் பாவனை செய்வான்.

பரிட்ஷை எழுதும் நேரத்தில் சும்மா இருந்தால் வாத்தியார் ஒரு மாதிரி மேலும் கீழும் பார் பார் என்ன செய்ய. எதையாவது எழுதி கொண்டு இருந்தால் பிரச்சினை இல்லை. இதற்காக தொடங்கிய விபரீத விளையாட்டு இது. இரண்டு வார்த்தைகளை கொண்டு சிலேடை ஆடும் சேட்டை இது.

அது என்ன.

வாட் இஸ் கிரிட்டிகல் டெம்பெரேச்சர் என்று கேள்வி இருந்தால் இவன் எழுதும் பதில் இது : " கிரிட்டிகல் டெம்பெரேச்சர் இஸ் எ வெரி கிரிட்டிகல் டெம்பெரேச்சர். கிரிட்டிகல் டெம்பெரேச்சர் இஸ் டிபைன்டு அஸ் தி டெம்பெரேச்சர் விச் இஸ் வெரி கிரிட்டிகல் அண்ட் தி கிரிட்டிகல் ஆப் தி டெம்பெரேச்சர் இஸ் கிரிட்டிகல் டெம்பெரேச்சர்”

கல்லூரியில் படிக்கும் போதும் கூட நான் கேள்வி பட்டேன். என் சீனியர் ஒருவர் இது போலே 'போலீஸ் பையரிங் இன் மண்டை காடு’ என்று பக்கம் பக்கமாய் பக்காவாய் எழுதுவார் என்று கிரிட்டிகல் டெம்பெரேச்சர் போலே

உப்புக்கும் சீனிக்கும் கல்யாணம்

இதென்ன கலாட்டா.

கரிகின்ற உப்புக்கும் இனிக்கின்ற சீனிக்கும் சம்பந்தமே இல்லயே. எப்படி சேரும் என்பவருக்கு, எதிர் துருவம் இணைவது தானே கல்யாணம். வாளை மீனுக்கும் விளாங்கு மீனுக்கும் கல்யாணம் நடக்கும் போது, இதெல்லாம் என்ன சாதாரணம்.

சரி மேலே சொல்லு என்று நீங்கள் சொன்னால்….

உப்புக்கும் சீனிக்கும் கல்யாணம்
ஏலக்காய்க்கு ஏக குஷி.
வாய் விட்டு பலமாய் சிரிக்குது.
சிரிச்ச சிரிப்பிலே பல்லெல்லாம் வெளியே தெரிச்சிருச்சு.

உப்புமா பயலுக சேமியா எல்லாம்
கூட்டம் கூட்டமா ஒருத்தன் தோளில் ஒருத்தன் கை போட்டு நிக்குரானுக.
வளைச்சு நெளிஞ்சு கோணி நாணி நிக்குரானுக.

வெக்கை ரொம்ப ஜாஸ்தி போலே. ஒரு வேர்வை காடா இருக்கு.

கல்யாண மண்டபம் - தள்ளி நின்னு பார்த்த வெள்ளை வெளருன்னு பளிச்சுன்னு இருக்கு.

கல்யாண மண்டபம் : அலுமினிய / எவர்சில்வர் பாத்திரம்


பாயசம் செய்வது எப்படி என்று உணவு குறிப்பு எழுத சொல்லி என் நண்பர் சொன்னார்.

படுக்காளி ஆயிட்றே பேர காப்பாத்த வேண்டாமா

அம்மா பசிக்குதே

தமிழக கரையோரமாய் ஒதுங்கிய ஒரு படகில் பத்து பேர் இறந்து கிடந்தாய் செய்திகளில் அறிந்தோம். மரணத்தின் காரணம் உணவின்றி நீரின்றி.

படுக்காளி வேறு ஒரு பிரச்சினையை பற்றி பேச போகிறானோ என்று எண்ண வேண்டாம். அரசியல் வாதி அல்ல நான். மனித நேயம் உள்ளவன். இலங்கைக்காக மட்டும் அல்ல சோமாலியா, பாகிஸ்தான், என்று கண்ணிர் வடிக்கும் ஜாதி நான்.

சில மணி நேர பசி நமக்கு தரும் வேதனை அறிந்தவர் நாம். இறக்கும் வரை செல்லும் துன்பம் கொடுமை என்று தோன்றுகிறது. மரத்தை வைச்சவன் ஏன் தண்ணி ஊத்தலே

அரசியல், மொழி, இனம், பொருளாதாரம் என்ற எந்த சால்ஜாப்பும் சரி இல்லை. வயிறுக்கு சோறிட வேண்டும் இங்கு வாழும் மனிதருக்கு எல்லாம். பூமியில் உள்ள வளங்கள் எல்லாருக்கும் பொது வானதே. நம்மை போலே சிலர் ஒதுக்கி வைத்து கொண்டு தானும் படுக்காமல் தள்ளியும் படுக்காமல் என்ன கொடுமை இது சரவணா

பங்கிட்டு வாழும் சமுதாயம் படைக்க முடியுமா.

தனி ஒரு மனிதனுக்கு உணவில்லையெனில் இந்த ஜகத்தினை அழித்திடுவோம் என்ற முண்டாசு கவிஞனின் ஆக்ரோஷம் தீர்வாகுமா. வழக்கம் போல் கேள்விகள் மட்டுமே தொக்கி நின்று தீர்வு இல்லாத முடிப்பது புலம்பலோ………….

தேர்தல் நிலவரம் – 2009

தேர்தல் நிலவரம் எப்படி இருக்கு. யார் செயிப்பாங்க யார் தோப்பாங்க என்ற கேள்வி எல்லார் மனதிலும் இருக்கும்.

ஊர் ஊரா சுத்துனதாலே நான் கேள்விப்பட்டத சொல்லுறேன்.

அறிவியல் பூர்வமாக ஆதார பூர்வமாக எல்லாம் கிடையாது.

என்ன ஒண்ணே ஒண்னு. எந்த கட்சி சார்பும் இல்லாம கேட்டத சொல்லுறேன் அவ்வளவுதான்.

1. நடக்கிறது மத்திய அரசுக்கான தேர்தல் என்றாலும் மாநில அரசியலும் அரசியல் வாதிகளுமே பிரதானமாக பார்க்க படுகிறார்கள்.
2. காங்கிரஸ் பத்தி பெரிய கெட்ட பேர் இல்ல. இருந்தாலும் கூட்டணில விட்ட கோட்டை பெரிய ஓட்டையா தான் இருக்கு.
3. பா ஜா கா பெரிய நம்பிக்கை தந்த மாதிரி தெரியல. இவங்க வந்தா இந்தியாவ தூக்கி நிறுத்துவாங்கன்னு யாரும் நம்பலே.
4. தலையே இல்லாத மூணாம் அணி ஒரு கேள்வி குறியும் கேலி குறியுமா இருக்கு.
இல்லேன்னா ஒரு மாநில கட்சியின் தலைவர் வெறும் 30/40 சீட் ஆட்டைய போட்டுட்டு ஒரு நாட்டை ஆள துடிப்பது தில்லா லங்கடி இல்லையா
5. கம்யூனிஸ்ட் எதிர்பார்க்கும் சேர நாட்டு வெற்றி ஊத்திக்கும் என்று தோன்றுகிறது.
மேற்கு வங்கத்தை மட்டும் நம்பி கொண்டு எத்தனை தூரம் பட்டம் விட முடியும்.
மூன்றாம் அணி கரை சேர நூரை தள்ளி விடும். கரை சேர முடியாது என்று சொல்ல முடியாது.
6. தமிழ் நாட்டில் ஜெயா ஜெயிப்பார் போலே தோன்றுகிறது. (ரொம்ப அம்மா கட்சி ஆட்கள் கிட்ட பேசிட்டேனோ ... ) ஆனால் இந்த மண் குதிரையை நம்பி எந்த ராஜா பட்டணம் போவார்.

எது எப்படியோ...

காங்கிரஸ் அறுதி பெரும்பான்மையை தவற விடும்.
பா ஜா கா வாய்ப்பு கம்மி.
மூன்றாம் அணி முக்கும்.

மாநில கட்சிகள் சில சீட் ஆட்டையை போட்டதால் பலமாகி விடும். அதிர்ச்சி வெற்றியும் தோல்வியும் எதிர்பார்க்கலாம். வானம் மப்பும் மந்தாரமுமாய் இருக்கும். இடியுடன் கூடிய மழை வரலாம்.

குதிரை பேரம் சுறுசுறுப்பாய் தேர்தல் முடிவுக்கு பின் நடக்கும்.

ஊடகத்திற்கு நல்ல வேட்டை.


கிழக்கு மேற்கு வடக்கு தெற்கு எல்லாம் சூலம்.
அதிர்ஷ்டமான நிறம் வெள்ளை
அதிர்ஷ்டமான பானம் டாஸ்மாக்
அதிர்ஷ்டமான கானம் ஏப்பம்

இடை வெளி

பத்து நாளா இந்த பய படுக்காளியும் காணோம் பதிவையும் காணோம் என்று தேடிய உங்களிடம் ஒரு சாரி.

ஒரு வாரம். இந்திய பயணம். விடுமுறை எனும் அற்புதம்

சந்தோசமாய் பெட்டி கட்டி கொண்டு குடும்பத்தோடு தாய் நாடு பயணம். தாய் மண்ணையும் தந்தையும் உடன் பிறந்தவனையும் உறவினரையும் தமிழையும் பார்த்து வருஷம் ஆச்சு. தலை நகரில் தொடக்கி கன்னியாகுமரி வரை சென்று வந்தேன். சென்னை வழியாக சேர நாடு வரை. இன்னும் கூட லேசான பயணக் களைப்பு.

படுக்காளி கேட்டது ஒரு மாத விடுப்பு. பொருளாதார நிலவரம் சொல்லி கலவரம் ஆன முதலாளி சொன்னார் நோ !!!. மண்டையை சொரிந்து பார்த்தேன். நடக்கவில்லை. கை காலை உதைத்து அழுதும் பார்த்தேன். இறுதியில் கிடைத்து ஒரு வாரம்.

சரி நினைத்து கிடைக்க வில்லை என்றால் என்ன கிடைத்ததை பிடித்து விடுவோமே என்று சென்று விட்டேன்.

திவ்யமான பயணம். ஒரு வார பரபரப்பு அடங்கி மறுபடியும் ஓட்ட பாதைக்கு வந்து விட்டேன். இனி என்ன. வழக்கமான வேலை தான்.