பக்கங்கள்

செய்தித்தாள் சொல்லாத கதை

சுவாரசியம் இல்லாம, மேம்போக்காய் தினசரியில் நாம் வாசிக்கும் செய்தியின் உள் சென்று பார்த்தால் இப்படி இருக்குமோ எனும் கற்பனையே இந்த கதை.
உண்மைச் சம்பவம் என சொல்ல எல்லா வசதிகள் இருந்தாலும், கற்பனை கதை என குறிப்பிடுவது குற்றமில்லை.

செய்தித்தாள் சொல்லாத கதை

கதை : ஜனனி
குளிர் காற்று மென்மையாய் அந்த இடத்தில் படர்ந்தது.
இரண்டு நாட்களாய் பெய்த மழையில் முற்றம் நனைந்து ஈரமாய் இருந்தது. நண்பகல் நேர சூரியன், தன் முழு வெப்பம் காட்டாது சீதோசனத்தோடு தோற்றுப் போயிருந்தான்.
தென்னை மர நிழல் தாண்டி, தாழ்வாரத்தில் கட்டில். பெரிசுகள் சிலர் நெருக்கி அமர்ந்திருக்க, மாதவன் வீட்டின் முன் மனிதர்கள் கூட்டம் சிறு சிறு குழுக்களாய். மாமா வந்தாச்சு, பெரியப்பா இன்னும் வரல. என்பதாய் சில குரல்கள். தெளிவில்லாத பேச்சுக் குரல்களின் நடுவே கனத்த அமைதி இருந்தது.

தரையில் சிந்திக் கிடந்த ரோஜா இதழ்களை புறம் தள்ளி சன்னல் ஊடே பார்த்தாள் கமலம். உறங்காத கண்கள் பார்வையை சற்று மங்கல் ஆக்கியது. பார்வை பட்ட இடம் ஒட்டாமல் மனசு, சுழன்று சுழன்று ஒரே சிந்தனையை சங்கிலியாய் சிந்தித்த்து. சட்டென வாழ்வு திசை திரும்பி விட்டதே. ஏதேதோ கனவுகள், என்னென்னவோ திட்டங்கள். எல்லாம் ஒரு நொடியில் மாறி விட்டதே. ஏன் இப்படி. எனக்கு மட்டும் ஏன் இப்படி. செத்து தொலைக்கலாம், அது பரவாயில்லை.
தொண்டை வரண்டு, வாய் புளித்த்து. சே...என்ன நினைப்பு இது. கேசவன் எனும் அந்த பிஞ்சு மகன் என்னை விட்டால் என்ன செய்வான். அவன் எப்படி தாங்குவான்.

எப்படியும் எதிர்கொண்டுதான் ஆக வேண்டும்.

விளக்கு கம்பத்தை பிடித்து கொண்டு சிறுவர்கள் சுற்றி வந்து விளையாடுவ‌து தெரிந்தது. யாரோ தன் தோள் தொட்டதை உணர்ந்து நிமிர்ந்து பார்த்தாள் கமலம். உறவினர் பெண். ஆதரவாய் தோள் தொட்டவள், குடி என்பதாய் சைகை காட்டி விலகினாள். கடுங்காப்பி, கருப்பட்டி இனிப்பில். எடுத்து கவிழ்த்து கொண்டாள். காய்ந்து இருந்த தொண்டையில் உஷ்ணமாய் பரவியது. நல்ல இதம். கொஞ்சம் ஆறுதல்.

புடவைத் தலைப்பால் வாய் துடைத்தாள். பழைய புடவை, லேசான அழுக்கு நாத்தம். கண்ணையும் வாயையும் அழுத்தி துடைத்தாள். விளக்காத பல்லை, அதே புடவைத் தலைப்பால் துடைத்தாள். மீண்டும் திரும்பி சன்னல் பார்க்க, தூரத்தில் ரங்கண்ணா. மூன்று மாதம் முன்பு அவர் வீட்டுக்கு சென்றது நினைவுக்கு வந்த்து.

‘தொழில்ல தீடீர்னு கெடுபிடி, என்ன செய்யுறதுன்னே தெரியல. இரண்டு நாள்ல மூணு லட்சம் கட்டலேன்னா, குடும்பத்தோட சாவ வேண்டியதுதான்’ அழுகையும் புலம்பலுமாய் மாதவன் வெடித்த போது. ‘வெள்ளிக்கிழமையும் அதுவுமா, என்னலே வெறுவாய்க்கலம் கெட்ட வார்த்த சொல்ற. வாய கழுவுலே. வாழ்க்கைன்னா அப்படித்தான்.
பணம் தானேலே, மூணு லட்சந்தானே. நாளைக்கு வீட்டுக்கு வா, அத்தாச்சிக்கிட்ட கொடுத்துட்டு போறேன்’ ஆதரவாய் சொன்ன வார்த்தையில் உருகினான் மாதவன்.

வார்த்தை வராமல் கண்ணில் நீர் மல்கி நிற்க, கமலம் அருகில் வந்து அவன் கை பிடித்து கண் அசைத்தாள். ரங்கண்ணா நல்லவன். சொன்ன மாதிரியே செய்தான். மூணு லட்சம். அய்யோ! இன்னைக்கு திருப்பி கேப்பானே. மாட்டான். ஆனா எப்போ கேப்பான். யேயப்பா... மூணு லட்சம் எப்படி செய்வேன்.

’மதினி மாதவன் பாஸ் புக் எங்க இருக்கு’ குரல் கேட்டு எழுந்தாள். இடுப்பு தடவி அல்மாரி சாவி எடுத்து திறந்தாள். கேசவன் சாப்பிட்டு இருப்பானா, தெரியலயே! உள் நோக்கி குரல் உய்ர்த்தி ‘யக்கா! கேசவனுக்கு ஏதாவது கொஞ்சம் ஊட்டி விடுங்க’ கம்மிய குரல் இருமல் வேறு தொல்லை செய்ய, பாதியில் இருமலாய் அந்த வாக்கியத்தை முடித்தாள்.

மனம் மட்டும் குமுறியது. ‘ராஸ்கல்!!! குடிச்சுட்டா லாரி ஓட்டுரது. ஒரு குடும்பத்தை சீரழிச்சுட்டானே. அவன் மட்டும் கையில் கிடைச்சான். அப்படியே!!!....’

சற்று முன் உட்கார்ந்து இருந்த அதே இட்த்தில் மறுபடி அமர்ந்தாள். என்ன செய்யுறது. தெரியல. வெறுமை. விரக்தி. இது கனவா. ஒரு வேளை கனவாய் இருக்க கூடாதா. எவ்வளவு நல்லா இருக்கும். சே! இரண்டு நாளா ஒண்ணும் ஓட மாட்டேங்குது, எப்போ கண்ணன் ஓடி வந்து சொன்னானோ, அப்ப ஆஸ்பத்திரிக்கு ஓடினது. அப்பல இருந்து.

‘அம்மா!’ கேசவன் கை சுரண்டி கூப்பிட்டான். தலை திருப்பி என்ன என்பதாய் மவுனமாய் கேட்டாள். அப்பா எப்ப எந்திரிப்பாரு. இரண்டு நாளா தூங்கிறாரே, எதுவுமே சாப்பிடலியேமா. அழுகை பொங்கியது. நெஞ்சு அடைத்த்து. யாரோ உறவின் முறை அவள் தோள் அணைத்து கதறினாள் ‘சாவுற‌ வயசா மாதவா. குத்துக் கல்லா நான் இருக்கேன், குத்து விளக்கு நீ போயிட்டியே. அப்பன் சாவு தெரியாத வயசுல பிள்ள’

கமலம் மாதவன் உடல் பார்த்தாள். ரோஜா மாலை பெட்டியை நிரப்பி இருந்த்து. மாலையில் இருந்து ஒரு எறும்பு அவன் உயிரற்ற உடலில் ஊர்ந்து கொண்டு இருந்தது. பின்னே அதனை தொடர்ந்து சில...வரிசையாய்...எந்த அசைவும் இல்லாது உடல். துக்கம் தொண்டையை அடைக்க, சட்டென கை நீட்டி அதை தட்டி விட்டாள்..

மாதவன் உடலில் விழுந்தாள். சில்லிட்ட உடல். சற்றே சுருங்கிய தோல். இல்லை. இது மாதவன் இல்லை. முந்தா நாள் பார்த்த என் மாதவன் இல்லை இது. அவனை இனி பார்க்க மாட்டேன். மூன்று வருடங்களில் எத்தனை நிகழ்வுகள். சந்தோசம், உரிமை. நிறைவான குடித்தனம்.

பெத்த அப்பனிடம் கூட இருபது வயதில் தயங்கி கேட்ட காசை, அவன் பையில் கையை விட்டு கல்யாணமான மூன்றே நாளில் எடுத்தேனே. அவன் பிரச்சனைக்காக உருகினேனே. என் இத்தனை சீக்கிரம் போனாய் மாதவா. கோர்வை இல்லாத உணர்வுகள். யம்மா!! யம்மா!! என வெற்று வார்த்தையாய் புலம்பல். அழுது வீங்கிய கண்கள் என கமலம் கதறினாள்.

செய்தி: (நேற்றைய தேதி)

திருச்சி :
நேற்று நிகழ்ந்த இரு வேறு சாலை விபத்தில் இருவர் மரணம் அடைந்தனர். இறந்தவர்கள் விவரம் மாதவன் (வயசு 29) மீரான் சாகிப் (வயசு 53)


கதை முடியும் முன் இவரையும் சந்தித்து விடுங்களேன் :

கண் திறந்து அவன் பார்த்தான். தொடர்ந்து குடித்ததில் நாக்கு தடித்து சுவை விட்டு இருந்தது. மெதுவாய் எழுந்து உட்கார தலை சுற்றியது. ஓவ் என அடி வயிற்றில் இருந்து வெற்று காற்று வாந்தி போல் வந்த்து. மூச்சு இரைத்தது. கண்கள் மூடி தலை உலுப்பினான்.

பக்கவாட்டு சாலையில் இருந்து சட்டென அந்த டிவிஎஸ் வந்த்தும் டொம் எனும் ஓசையும் கேட்க, பிரேக்கை மிதித்து குதித்து இறங்கினான். நல்ல மழை. அலங்கோலமாய் கிடந்த அந்த டிவிஎஸ் குறிவைத்து ஓடினான். செத்துருப்பானோ. வேகம் அதிகமோ. இல்லயே ஒரு 50 – 60 தான இருக்கும். ஸ்கிட் ஆயிருக்கும். குடித்திருக்க கூடாது, உடல் வலின்னு சொல்லி.... தப்பு.

வண்டியை நெருங்கி பார்த்தான். மார்புப் பகுதியில் வண்டி ஏறிய தடம் தெரிய, அந்த பகுதி கூழாகி இருந்த்து. ஐயையோ!! மனம் பதறியது. இரண்டு கையும் அனிச்சையாய் தலை பின்னால் சென்றது. வாய் சே! என்றது. அசைவு இருக்குதா என பார்க்க, குனிந்த போது பெரிய மீசை தெரிந்த்து. இல்லை செத்து விட்டான்.

சுற்று முற்றும் பார்த்து, ஆளில்லா அந்த தெருவில் மீண்டும் லாரி வந்து ஏறி விரைவாய் செலுத்தினான். படபடப்பு அடங்கி முதலில் பார்த்த சாராயக் கடையில் குடிக்க ஆரம்பித்தவன். இரண்டு நாளாய் குடிக்கிறான்.

சே! அந்த மீசை, அந்த சத்தம் தாங்கவே முடியல. எவ்வளவு உதறினாலும் போறதில்ல. குடிச்சா தேவல. வாய் கொப்பளித்து விட்டு சாராயம் மீண்டும் குடித்தான். அமிலம் போல் இறங்கி குமட்டிக் கொண்டு வந்த்து. வயிற்று சாராயம் தன் முகம் காட்ட, சற்று நேரத்தில் உடல் தளர்ந்து அந்த சுவரில் சரிந்தான். மெல்லமாய் முகம் இருக்கம் தளர்த்தியது.

ஆச்சி படுக்காளி அஞ்சரைப்பெட்டி 28/10/09

வழக்கமாக செய்யும் அஞ்சாறு தானியங்களை எடுத்து தாளிக்காமல், வெறும் க்டுகை மட்டும் எடுத்து..... சாரி கம்யூனிஸம் மட்டும் எடுத்து தாளித்து உள்ளோம்.

படுக்காளி : எரிமலை எப்படி பொறுக்கும்
நம் நெருப்புக்கு இன்னுமா உறக்கம்
ரத்த சாட்டை எடுத்தால்
நம் உலகின் கதவு திறக்கும்
நாம் கண்ணீர் விற்கும் ஜாதி
இனி அழுதால் வராது நீதி

ஆச்சி : என்னடா பாட்டெல்லாம் பலமாயிருக்கு
படுக்காளி : ஆச்சி நான் கம்யூனிஸ்ட் ஆயிட்டேன்
ஆச்சி : 16 வயதினிலேல மயிலு ஆத்தா நான் பாஸ் ஆயிட்டேங்கிற மாதிரி இருக்குடா. ஏண்டா மீன் திங்க ஆசை வந்தா தூத்துக்குடி போ வேண்டியதுதான ஏன் வங்காளம் அல்ல கேரளா போன.
படுக்காளி : வங்காள நொங்கா ஒண்ணும் புரியல
ஆச்சி : பேன விட்டுபுட்டு ஈர பிடிக்குர பாரு. கம்யூனிச சிவப்புக் கொடி அங்க மட்டுந்தானடா படபடக்குது.
படுக்காளி : இல்ல ஆச்சி, நேத்து ஒரு சினிமா பாத்தேன், அதுல இருந்து தான் கம்யூனிஸ்ட் ஆயிட்டேன்.
ஆச்சி : உன்ன சொல்லி குத்தம் இல்ல. புஸ்தகம் படிச்சுட்டு தானே பூரா பயலும் கம்யூனிஸம் பேசுறான்.
ஆமா இது பழங் கஞ்சியாச்சேடா, இப்போ எதுக்கு அதே வேக வைக்கிற.
படுக்காளி : ஆச்சி! இந்த மேசையில, அந்த சாக்பீஸ்ல உழைப்பு இருக்கு. மேசையில் இருந்து உழைப்ப எடுத்துட்டா மரத் தூள், சாக் பீஸ்ல இருந்து உழைப்பு எடுத்துட்டா வெறும் தூள்.
ஆச்சி : தூள் டக்கர்டா..... கிளாப்ஸ் அள்ளியிருக்குமே....

வெட்கத்தில் படுக்காளி நெளிய, ஆச்சி இடைமறித்து

ஆச்சி : அட அரை வேக்காடு, ஒரு காலத்தில சமூகம் பணம், ஜாதி, மதம்னு சொல்லி அடக்கி வைச்சாங்க. இப்போ எங்கடா இருக்கு. முதல் தலை முறை தொழில் அதிபர் ஓராயிரம் பேர் இப்ப இருக்கானேடா. இன்போசீஸ் மூர்த்தி, மைக்ரோசாப்ட் கேட்ஸ்னு அப்பன் பணத்தில் இல்லாம் தன் உழைப்புல முதலாளி ஆனானேடா.
படுக்காளி : அப்போ கம்யூனிசம் இன்னைக்கு இல்லையா
ஆச்சி : வெறுமன கொட்டாவி விட்டுட்டு முதலாளி போற கார், அவன் பங்களா எல்லாம் பாக்காம, கிட்ட போயி அவன் பொறுப்புணர்ச்சி, தில், திட்டமிடல் உழைப்பு இதெல்லாம் பார்த்தா நீயும் தொழில் அதிபர் தான்.
படுக்காளி : அப்போ கம்யூனிசம் வேஸ்டா.
ஆச்சி : அத யாருடா சொன்னா, நல்ல விசயம், நம்ம யேசு கிறிஸ்து சொன்ன அடிப்படை.
படுக்காளி : யேசு கிறிஸ்துன்னா!!! இந்த கிறிஸ்துவ மதம் உண்டாக்கினாரே அவரா
ஆச்சி : ஆமடா,

படுக்காளி : ஆச்சி, அவர் கடவுள். கடவுள் எப்படி கம்யூனிஸ்ட் ஆவார்.
ஆச்சி : நல்லா கேட்டுக்க. ‘வானத்து பறவைகளை பாருங்கள். அது விதைப்பதும் இல்லை, அறுப்பதும் இல்லை. ஆயினும் உங்கள் வானகத் தந்தை அவற்றை போஷிப்பதில்லையா. எதை உண்போம், எதை குடிப்போம் எதை உடுத்துவோம் என அது குறித்து நீங்கள் கவலை பட வேண்டாம்.
படுக்காளி : ஆங்... ஆச்சி, இத நம்ம சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தும் சொல்லி இருக்காரு
ஆச்சி : என்ன்ன்னு
படுக்காளி : ‘மரத்த வைச்சவன் தண்ணி ஊத்துவான்’
ஆச்சி : அதே தாண்டா. சமமான சமுதாயம் ஆன்மீகமா கம்யூனிசான்னு நீயே டிசைட் பண்ணு
படுக்காளி : ஆச்சி கம்யூனிசம் காத்து மாதிரி
ஆச்சி : ஏண்டா காணாம போச்சுக்கிறியா
படுக்காளி : இல்ல ஆச்சி, எங்கும் நிறைந்து இருக்கு. பில் கேட்ஸ்லயும் இருக்கு, பைபிள்லயும் இருக்கு, சினிமாவிலயும் இருக்கு. கம்யூனிசம் பேசினா, எல்லாரும் என்ன பிஸ்துன்னுவாங்க. கை தட்டெல்லாம் சல்லிசா கிடைக்கும்.

அதனால..... ஆச்சி நான் கம்யூனிஸ்ட் ஆயிட்டேன்.

ஆச்சி : விடிய விடிய ராமாயணம் கேட்டுட்டு சீதை ராமனுக்கு சித்தப்பனான்னு ! கிளம்பிட்டியாடா....

சமர்ப்பணம்:

என் பதினைந்து வயதில் தொடங்கி மேடை நாடகம், ரேடியோ நாடகம் என என் கைபிடித்து இது தான் நடிப்பு, இது தான் கதை, வசனம் என பாடம் சொல்லிக் கொடுத்த என ஆசான் முல்லை எம். பெர்க்மான்ஸ் அவர்களை இந்த தருணத்தில் வணங்கி நன்றி தெரிவிக்கிறேன்.

‘வாடுவதற்கா இந்த மலர்கள்’ எனும் மேடை நாடகத்தில் நான் கிறிஸ்துவ பாதிரியார். குண்டடிபட்டு அடைக்கலமாய் வரும் நக்ஸலைட் திவிரவாதியுடன் நடக்கும் விவாதம் விதைத்த்தே இந்த பதிவின் வித்து அல்லது மூலம்.

போட்டி இன்னும் முடியல.... பரிசு எனக்கே!!!

சர்வேசன் கதைப் போட்டியின் முதல் பரிசு 90$.
ஆனால் இருவது டாலர் தான் நமக்கு கிடைக்கும். மீதி 70 நம் பெயரில் உதவும் கரங்களுக்கு கொடுக்கப் படும்.

பிரமாதம். எனக்கு இந்த அப்ரோச் ரொம்ப பிடிச்சுது.

உதவும் கரங்களையும் வித்யாவையும் அறிவேன். சிக்கனமாய் செலவழிக்கும் ஒவ்வொரு பைசாவுக்கும் அவரிட்த்தில் கரிசனம் தெரியும். என் சார்பாய் 90$ அவருக்கு தனியாய் அனுப்பி விடுவேன்.

அப்போ, பரிசு கிடைச்சா மாதிரிதானே.
நன்றி சர்வேசன். இனி கதை.


பறப்பது போல் மிதப்பது போல் – கதை.

பரபரப்பான, பளபளப்பான, பப்பரப்பான்னு துபாயின் முக்கிய வீதி. நண்பகல்.

டொமார்..... கீரிச்
சொத் என்று ரோட்டில் விழுந்தேன். சத்தம் கேட்டு சர சர வென மக்கள் கூட்டம். ஒரு நிமிடம் நினைவு போய் திரும்ப வந்த்து. மல்லாந்து கிடந்த வாக்கில் கண் திறந்து பார்த்தேன். குழுப்பமான காட்சி. எனக்கு மேல் வெள்ளை கலர் வண்டி. மேக் சரியாக தெரியவில்லை. லாரி போல சைசில் ஒரு எஸ்யூவி. தெளிவில்லாத பேச்சுக் குரல்.

எப்படி விழுந்தேன். எல்லாம் ஒரு நொடியின் கீழ். கை தாங்கலாக ரோட்டோர இரும்பு கம்பி பிடித்தேன். ஞாபகம் இருக்கிறது. அதுதான் உடைந்து இருக்க வேண்டும். கையோடு வந்து விட்டது. அதன் ஒலி தான் அந்த டொமார் ஓசையாய் இருக்க வேண்டும்.

துள்ளி எழுந்தேன் பந்து போல். நல்ல வேளை உயிர் இருக்கிறது. நான் சாகவில்லை. கை கால்களை சுற்றும் முற்றும் பார்த்து, அடி ஒன்றும் இல்லை.
அந்த வண்டியின் சக்கரம் ஏறியிருந்தால் அவ்வளவுதான். எவ்வளவு பெரிய டயர். கருப்பாய் கோர பற்களோடு. ஏன் இத்தனை பெரிய டயர் எல்லாம் வைத்து வண்டி செய்கிறார்கள். அங்குமிங்கும் சவுகரியமாய் போய் வர வேண்டும் அவ்வளவு தானே. இந்த வீண் ஆடம்பரங்கள் படோபகாரங்கள் தான் மனிதனை இத்தனை துன்பத்தில் தள்ளுகிறது. நடக்கத் துவங்கினேன்.
எல்லாம் வைத்து வண்டி செய்கிறார்கள். அங்குமிங்கும் சவுகரியமாய் போய் வர வேண்டும் அவ்வளவு தானே. இந்த
நடக்கும் போது பறப்பது போல் இருக்கிறது. கால் இருக்கிறதா, இல்லையா. குனிந்து கீழே பார்த்தேன். இருக்கு. ஆஹா உடல் காற்று போல் அல்லவா உள்ளது. என்ன சுகம் சூப்பர். பறப்பது போல், மிதப்பது போல்.

சே! அந்த அமெரிக்கன் கம்பெனி மெயில் அனுப்புவதாய் சொன்னேனே. முதலில் அதை முடிக்க வேண்டும். தொலை பேசியில் ராணியிடம் சொன்னால் கூட போதுமே. அலுவலக காரியதரிசி.

தெளிவில்லாத பார்வை படர்ந்த திசையில் அது யார். தூரத்தில் வருவது எனது பாஸ்தானே. ஆம். அவரேதான்.

முசுடன்!!! ஒரு நாள் இல்லை ஒரு நாள் நடு ஆபிஸில் வைத்து அவரது குரலுக்கு மேல் உரக்க சொல்ல வேண்டும். நீங்கள் டிலே செய்தால் யூ ஆர் வெரி பிஸி, அதுவே நான் செய்தால் சோம்பேறித்தனமா.

இன்றைக்கு வேணாம். இருக்கட்டும் உள்ளத்தை மூடு, உதட்டை திற, ஒரு புன்னகை மட்டும் போதும். தளர்ந்து இருந்த களுத்துப் பட்டையை சரி செய்து, இடுப்பு பெல்ட் நேராக்கி ஒரு கண்ணிய துரித நடையில் நெருங்கினேன்.

அவரை பார்த்தால் என்னை கவனித்த மாதிரியே தெரியவில்லை. தூரத்தில் பார்த்தாலே கை ஆட்டும் இவர் பத்தடி தூரம் வந்த பிறகும்.... ஏன்.... கவனிக்கவில்லையோ. நெருங்கி ஹலோ என்றேன். கவனிக்காத்து போல் விலகி சென்றார். கடந்து சென்றார். ஏன். ஏன்.... என்னாயிற்று...

சட்டென கடந்த அந்த பெண், அது ராணிதானே. ஆம் சேலை கட்டி இருக்கிறாள். ஒ ராணியும் அவரோடு இருந்தாளா. பாஸ் மட்டும் பார்த்த்தால் அவளை கவனிக்க வில்லை. அது சரி, அவள் ஏன் என்னை பார்க்கவில்லை. ஒரு புன்முறுவல் கூட இல்லையே. வலிய வந்து பேசும் அவளும் கண்டுக்கலையே. என்னாச்சு. ஒரு வேளை

அட போங்கடா. உங்கள் நினைப்பு எனக்கு நேரம் விரயம். எனக்கு நடக்க பிடிக்கிறது. சந்தோசமாய் நடப்போம். சற்று தொலைவில் கார், எனது கார் தனியே தேமேன்னு நின்று கொண்டு இருந்த்து.

உள் அமர்ந்தேன். இக்னிஷன் ஆன் செய்ய, முன் பேனல் பளிச்சிட்ட்து. நேரம் 14.00, 46 டிகிரி. முதலில் இந்த கிளாக்கின் ரயில் நேரத்த மாத்தணும், நமக்கு இந்த 12 கழிக்கிர வேலை எல்லாம் மெனக்கேடு. டைம் வேஸ்ட்.

ஏசி முழுமையாய் ஓட விட்டேன். ஹூம் சரியில்ல. சன்னல் தணித்து வெளிக் காத்து படர விட்டேன். இது பரவாயில்ல, சூடு தெரியவில்லை. மறுபடி பேனல் பார்த்தேன். 46 டிகிரி, தோலை பொசுக்குமே. சட்டை அயன் பண்ணினா வர்ற மாதிரி ஒரு வாடை வருமே. ஒண்ணையும் காணல. என்னாச்சு இன்னைக்கு. ஆனால் இது நல்லா இருக்கே.

அழுத்திய ஆக்ஸிலேட்டரில் கார் சீறிப் பாய்ந்த்து. ஒரு சில தப்படிகளில் சாலை ஓரத்தில் மோகனை பார்த்தேன். இவன் என்ன செய்கிறான் இங்கு. உற்சாகமாய் கை அசைக்க, பதில் கை அசைத்தான். நில் என்பதாய் கை அசைப்பது தெரிந்த்து. அப்பா இவனாவது என்னை தெரிந்தானே.

பிரேக் அழுத்தி அவனருகே நிறுத்தி வாவென கை அசைத்தேன். வண்டியில் ஏறாது சுற்றி என் திசையில் வந்தான். டிரைவர் பக்கம் நீ ஏண்டா வர்ரே. நான் தான் ஓட்டுரேன்ல நீ அந்த பக்கம் வா. எனது குரலையோ செய்தியையோ கண்டு கொள்ளாமல் டபக் என கதவு திறந்தான். கொத்தாக என் சட்டை பிடித்தான். காரில் இருந்து என்னை வெளியில் இழுத்தான்.

விடு விடு, டேய் என்ன செய்ற, விடு என்னை.. சத்தம் ஜாஸ்தியாச்சோ. வலதும் இட்தும் திரும்பி பார்த்தேன். யாரும் கவனிக்க வில்லை.

வெளியில் இழுத்த என்னை பின் கதவு திறந்து உள் திணித்தான். இருடா, பொறுமை. மொதுவாடா நானே போறேன். அவன் கேட்ட்தாய் தெரியவில்லை. அறைந்து சாத்திய கதவில் சத்த்த்தில் கோபம் தெரிந்த்து. டிரைவர் சீட்டில் அமர்ந்து சன்னல் எல்லாம் மூடி, சீரான வேகத்தில் வண்டி ஓடத் துவங்கியது. கால் நீட்டி என்னை வசதி செய்து கொண்டேன்.

மோகன் வெடித்தான். ‘அறிவு இருக்கா. உன் நல்ல நேரம் நான் தற்செயலா வந்தேன். வண்டியா ஓட்டுர நீ. புழைப்புக்காக இந்த ஊர் வந்திருக்கோம். இதென்ன இந்தியாவா. துபாய்!!!

இந்த ஊருக்கு இவ்வளவு போதை ஆகாதுரா...

தண்ணியடிச்சுட்டு வண்டி ஓட்டினா அவ்வளவுதான். ஜெயில்ல வச்சு நாடு கட்த்திருவாங்க. ஏண்டா இப்படி அளவு தெரியாம குடிக்கிற, அப்படியே குடிச்சாலும் வீட்டுல படுத்துற வேண்டியது தானே,

அத்தனை போதையிலும் அவன் சொல்வது சரி எனப் பட்ட்து.

மரணத்துக்கும் போதைக்கும் தூரம் அதிகமில்லை எனத் தெரிந்த்து. கொஞ்சம் விட்டிருந்தால் என்னைக் கொன்று இருக்கும். குடித்தவனை உளறிடுவான் என்று ஊர் விலக்குவது தெரிந்த்து. குடித்த மனிதனிடம் குசலம் யாரும் விசாரிப்பதில்லை.

மனித இயல்பை தொலைய வைக்கும் வலு இந்த மதுவுக்கு உண்டோ. நினைவை, உறவை, நடையை எல்லாம் மாற்றி அமைக்கும் இந்த குடி இனிமே இல்லப்பா, என அப்போது தோணுச்சு.

முற்றும்


இந்த கதைக்கு நல்ல ஒரு தலைப்பு வைக்க சொல்லி சில பேரிடம் ஆலோசனை கேட்டேன்.

எடக்கு மடக்கு கார்ர் சொன்னது ‘டாஸ்மாக் டெரர்’ ‘கும்மியடிச்சு குட்டய குழப்பு’
சைலஜா ‘எண்ணிய குடிதல் வேண்டும், குடித்த பின் எண்ணவும் வேண்டும்’
அமரர் கல்கி ‘பொன்னியின் செல்வன் குடிக்காத சபதம்’
தெலுங்கு பட டப்பிங் பிரெண்ட் சொன்னார் ‘சட்டய பிடிச்சு மூஞ்சில குத்து’
சாரு சொன்னது ‘கழுகு ரத்தமும் கருவாட்டுக் குழம்பும் – ஒரு எதிர்வினை’
சுஜாதா ’46 டிகிரி குளுருது’
தண்டோரா ‘மானிட்டர் பக்கங்கள்’
பாலகுமாரன் ‘என்னை சுற்றி பல வாகனங்கள்’
வால் பையன் ‘குவார்ட்டரடி கும்மியடி’
பரிசல் காரன் ‘ ’ காரோட்டி காரன்
ஆசிப் மீரான் ‘மக்கா!!! மக்கர் பண்ணுது’
செல்லத்துரை ‘காதல் இல்லா வெறுமை’

சர்வேசன்500 - 'நச்'னு ஒரு கதை 2009 - போட்டி

கு.த.மு. ; கு.த.பி.

என்னடா படுக்காளி ஒண்ணும் புரியலயே.

குதமுகுதபி!!!! திட்டலயே.

கெட்ட வார்த்தைக்கு, அக்கா அல்லது தங்கச்சி மாதிரியும் இருக்கு, அசிங்கமான வார்த்தைக்கு அடுத்த வீடு மாதிரியும் இருக்கு என நினைப்பவருக்கு தன்னிலை விளக்கம்.

சப்ஜெக்ட் காலம் ரொம்ப சின்னதா இருக்கு.
குழந்தை தலை எடுக்கும் முன் ; குழந்தை தலை எடுத்த பின்’

என்று எழுத முடியல. ப்ளாக்கர் கிட்ட சொன்னா தேவல, இல்லன்னா மன்சூர் அலிகான் பிளாக் தொடங்கினா ‘ராஜாதி ராஜ, ராஜ மார்த்தாண்ட ........ ‘ எனும் கின்னஸ் சாதனையில் இடம் பிடித்த படத்த எப்படி எழுதுவாரு.

செய்யுள் பதிவுரைக்கு விளக்க உரை எழுதலாம், டைட்டிலுக்கே ஒரு கோனார் நோட்ஸ் போடுறதெல்லாம் ரொம்ப ஓவர். சரி பதிவுக்கு போவோம்.

சச்சின் டெண்டுல்கர்,
கிரிக்கெட் ரசிகர்கள் தாண்டி எல்லோராலும் விரும்பப்டும் ஒரு மனிதன். மட்டையை எடித்து களத்தில் நுழைந்தால், தானே செல்வது போல், ஒவ்வொருவரும் நினைப்பார். கொஞ்ச நேரம் அவரை விட்டு அப்பா டெண்டுல்கர் பற்றி யோசிப்போம். சராசரி அரசு ஊழியர், சிக்கன வாழ்க்கை, சின்ன சின்ன சாதனைகள்.

அவரது 40 – 45 வயதில் ஒரு பெரிய மாற்றம். 16 வயது மகன் பட்டையை கிளப்ப தொடங்கினான். சாதனைகள் அவன் பின் வந்தது. புகழ் பணம் எல்லாம் எதிர்பார்த்த்தற்கு மேல் வந்த்து. ச்ச்சினின் தகப்பன் என உலகம் அங்கிகரித்த்து. நல்ல பிள்ளையை பெத்துருக்கீயா என கொஞ்சியது. வாழ்க்கை தரம், சாதனை, அங்கீகாரம், பொருளாதாரம் எல்லாமே அவரது முனைப்பு இல்லாமல் கூரையை பிச்சிக் கொண்டு கொட்டியது.

நிற்க, இன்னொரு தகப்பனை பார்ப்போம். ஆட்டோ சங்கரின் அப்பா.

முகவரி இல்லாத, முகம் தொலைந்த அந்த மனிதனை நினைக்கிறேன். சராசரி வாழ்வாய் வாழ்ந்த அவரது வாழ்வின் மத்தியில் சூராவளி வீசியிருக்க வேண்டும். தவம் இருந்து பெத்த மகனை, ஒரு முழ கயிறில் அரசாங்கமே நீ வாழ தகுதி இல்லாதவன். நீ வேண்டாம், என பலவந்தமாய் உயிரை பறித்த போது பெத்த மனம் எப்படி இருந்திருக்கும். சமூகம், உறவுகள் அவரை எப்படி பார்த்திருக்கும். எஞ்சிய காலத்தை அவர் எவ்வளவு தர்மசங்கட்த்தில் வாழ வேண்டி இருந்திருக்கும்.

இந்த சிந்தனை எனை வேறு திசைக்கு இட்டு செல்கிறது.

மனித வாழ்வு இரு கூறாய் இருக்கிறது. நம் படிப்பு, உத்தியோகம் என தனது திறமையால் வரும் சமூக அங்கீகாரம் முதல் படி. இரண்டாம் படி நம் இளைய தலை முறை திறமையால் நமக்கு திணிக்க படும் அடுத்த வாழ்வு இரண்டாம் படி.

மத்திம வயதில் இது நடக்கும். 40 – 45 வயதுள்ளோர் அனைவரும் இதை உணர வேண்டும். உங்களை பரீசீலித்து ஒரு மார்க்கும் போட்டு உங்கள் தேர்வின் அரை இறுதி பரிட்சை ரிசல்ட் வந்து விட்ட்து.

இனி இருப்பது முழு பரிட்சை.

ஒரு கேள்வி நல்லது என தோணுது. முழு பரிட்சையின் முடிவுக்கு தங்களின் முயற்சி என்ன ????

வாழ்த்துக்கள்

எண்ணைக் குளியல்
சுடச் சுட வடை
அதிரும் வெடி
அலம்பலான திரைப்படம்
குடுப்பத்தோடு குதூகலம்

எத்தனை முடியுதோ அத்தனையும் வாய்க்க வாழ்த்துக்கள்.

படித்த்தில் பிடித்தது - சரித்திர சுவை

தூத்துக்குடி விட்டு ரயில் ஓடினால் அடுத்து நிற்பது மணியாச்சி.

அந்த காலத்தில் கரி வண்டியே இஞ்சின் என்பதால் வண்டி போகும் திசையோ, சன்னலோர இருக்கையோ சிலருக்கு பிடிக்காது. பறந்து வரும் கரித் துகளில் கண்ணும் எரியும், சட்டையும் நிறம் மாறும். எனவே அதை தவிர்ப்பவர் அதிகம். துவைப்பது நான் இல்லை என்பதால் எனக்கு ஒன்றும் கவலை இல்லை.

மணியாச்சியில் வண்டி மாறும், அதற்கு பிறகு டீசல் எஞ்சின். செங்கல்பட்டு வரை. அப்புறம் எலெக்டிரிக். 1970 ம் ஆண்டின் நிலவரம், தெரிந்தவருக்கு இது நினைவை உரசும், புதியவருக்கு நினைவு விதைக்கும் என நம்பி தொடருகிறேன்.

நடுவில் தட்டபாறை எனும் சிற்றூர். சிறுவர் சீர்திருத்த பள்ளி இங்கு உண்டு. எங்கள் ஊரில் மிகுந்த சேட்டை செய்யும் சிறுவரை பயமுறுத்த ‘ஒழுங்கா இரு, இல்ல தட்டாப்பாறை செயில்ல தள்ளிருவேன்’ என்று திட்டுவார். என் சோட்டு பையன்கள் எல்லோருக்கும் இந்த தட்டாப்பாறை என்றால் பயம் உண்டு.
சிகு புகு என வேகமாய் செல்லும் ரயிலின் கம்பி சன்னல்களூடே ஒரு வித பயம் கலந்து பார்ப்பது வழக்கம். ஒரே ஒரு முறை ரயிலில் எங்களோடு சீர்திருத்தப் பள்ளிக்கு கொண்டு செல்லும் இளைஞன் ஒருவன். கருத்த கைகளில் பள பள விலங்கு. சவரம் செய்யாத, காற்றின் தயவில் கலைந்த அழுக்கு தலை, காவியேறிய பற்கள், மெலிந்த தேகம். இவன் என்ன செய்திருப்பான் என அறியத் துடிக்கும் மனது பக்கத்தில் உள்ள விறைப்பான காக்கி உடை பார்த்ததும் சுருங்கிக் கொண்டது.
மணியாச்சி வந்த்தும் எங்கள் பெட்டியை விட்டுவிட்டு, ரயில் சென்று விடும். இனி நெல்லையில் இருந்து வரும் நெல்லை எக்ஸ்பிரஸ் வரும் வரை காத்திருப்போம்.

மணியாச்சி போளி, வடை, முருக்கு, வெள்ளரி பிஞ்சு ரொம்ப பிரபலம்.


காத்திருக்கும் அதே நேரத்தில் ஒரு கதை சொல்லுவார்.

சுதந்திர போராட்ட்த்தில் உயிர் பலி வாங்கிய கதை அது. தீவிரவாதம் தொடங்கிய அத்தியாயம். பலியானது ஆஷ் எனும் வெள்ளையர். கொன்று பின் கழிவரையில் தன்னையும் சுட்டு தற்கொலை செய்தவர் வாஞ்சி ஐயர்.


காலச்சுவடு தந்த அரிய தகவல்கள். ரொம்ப பிரமாதம்.




வாஞ்சியின் இறந்த உடலில் – எடுக்கப்பட்ட கடிதம்


ஆங்கில சத்துருக்கள் நமது தேசத்தைப் பிடுங்கிக்கொண்டு, அழியாத ஸனாதன தர்மத்தைக் காலால் மிதித்துத் துவம்சம் செய்துவருகிறார்கள். ஒவ்வொரு இந்தியனும் தற்காலத்தில் தேசச் சத்துருவாகிய ஆங்கிலேயனைத் துரத்தி, தர்மத்தையும் சுதந்திரத்தையும் நிலைநாட்ட முயற்சி செய்துவருகிறான். எங்கள் ராமன், சிவாஜி, கிருஷ்ணன், குரு கோவிந்தர், அர்ஜுனன் முதலியவர் இருந்து தர்மம் செழிக்க அரசாட்சி செய்துவந்த தேசத்தில், கேவலம் கோமாமிசம் தின்னக்கூடிய ஒரு மிலேச்சனாகிய ஜார்ஜ் பஞ்சமனை (George V) முடிசூட்ட உத்தேசம் செய்துகொண்டு, பெருமுயற்சி நடந்துவருகிறது. அவன் (George) எங்கள் தேசத்தில் காலை வைத்த உடனேயே அவனைக் கொல்லும்பொருட்டு 3000 மதராசிகள் பிரதிக்கினை செய்துகொண்டிருக்கிறோம். அதைத் தெரிவிக்கும்பொருட்டு அவர்களில் கடையேனாகிய நான் இன்று இச்செய்கை செய்தேன். இதுதான் இந்துஸ்தானத்தில் ஒவ்வொருவனும் செய்யவேண்டிய கடமை.
இப்படிக்கு,
R. வாஞ்சி அய்யர்
R. Vanchi Aiyar of Shencotta


தூத்துக்குடி சுதந்திரப் போராட்டமும்.


1906 இன் தொடக்கத்தில் தூத்துக்குடியில் சுதேசியம் முகிழ்த்தது. இந்தியாவின் பிற பகுதிகளில் சுதேசியம் என்றால் மெழுகுவத்தி செய்தல், வளையல் அறுத்தல் என்றிருக்க, தூத்துக்குடியிலோ சுதேசிக் கப்பல் கம்பெனி என்ற பிரம்மாண்ட முயற்சி மேற்கொள்ளப்பட்டது.
12 மார்ச் 1908இல் வ.உ.சி., சுப்பிரமணிய சிவா, பத்மநாப அய்யங்கார் ஆகியோர் கைதுசெய்யப்பட்டனர்.
இதற்கு எதிர்ப்புத் தெரிவிக்குமுகமாக அடுத்த நாள் திருநெல்வேலி நகர், தூத்துக்குடி, தச்சநல்லூர் ஆகிய ஊர்களில் பெரும் மக்கள் எழுச்சி ஏற்பட்டது. ‘திருநெல்வேலி கலகம்’ என்று அரசு ஆவணங்களில் அறியப்படும்
தூத்துக்குடியிலும் அனைத்துக் கடைகளும் அடைக்கப்பட்டன. கோரல் ஆலைத் தொழிலாளர் மட்டுமல்லாமல், பெஸ்ட் அன் கோ பணியாளர், நகர்மன்றத் துப்புரவு ஊழியர், கசாப்புக் கடைக்காரர், ஜட்கா ஓட்டுநர், சவரத் தொழிலாளர் என அனைவரும் வேலைநிறுத்தம் செய்தனர். 144 செயலில் இருந்த பொழுதும் அன்று பிற்பகல் வண்டிப்பேட்டையில் ஒரு மாபெரும் கண்டனப் பொதுக்கூட்டம் நிகழ்ந்தது.

சினிமா மாறுமா

திரைச் சலனப் படம் தொடங்கிய காலத்தில் கருப்பு வெள்ளை காமிராக்களே. மிக சக்தி வாய்ந்த விளக்குகளும், தூக்கிச் செல்ல வாகு இல்லாத காமிராக்களும் என ஸ்டுடியோக்குள்ளேயே திரைப்படம் எடுப்பது முடங்கிக் கிடந்த்து.

தொழில் நுட்பம் வளர வளர, ஒரளவுக்கு சிரமத்தில் சுமாரான ஒளியில் சினிமா செய்யலாம் என்றதும் ஹப்பா!!! என கடற்கரையையும் பூங்காவையுமாய் பார்த்து நகர்ந்த்து படக் குழு.

கள்ளிக்காட்டுக்கும், கிராமத்துக்கும் கூட்டி வந்தார் பாரதிராஜா.

இது திரைப்படம் உருவான சைடு. நம் பார்வையாளர் பக்கம் எப்படி.

காசு கொடுத்து, கால் கடுக்க கூயுவில் நின்று டிக்கட் வாங்கி பார்த்த சினிமா, கட்டை விரல் அழுத்த்த்தில் எம்.ஜி.ஆரையும் சிவாஜியையும் நடு வீட்டுக்கு கொண்டு வந்திருக்கிறது
(நன்றி: கலை ஞானி கமல் - தனது மய்யம் எனும் இதழ் வெளியீட்டு விழாவில் சொன்னது) நன்றி டி.வி, வி.சீ.ஆர்.


மழை விழும் மங்கல் பிரிண்டுகளும்,அறுந்து ஓடும் காட்சிகளும், சைடுல கடிச்சுருச்சு இனி ஒண்ணும் பண்ண முடியாது எனும் டேப் ஃபார்மேட்டுகளை ஓரம் போ என சொன்னது சி.டி.

வீசிடி யை விட நான் துல்லியமான படமும் ஸ்டுடியோ குவாலிட்டி சவுண்ட்டும் தருகிறேன் என்றது டீவீடி.
அதோடு நிற்காமல் பூளு ரே, எச்.டி.எம்.ஐ. என நாளோரு மேனியும் பொளுதொரு வண்ணமுமாய் வளருது.

சரி தொடங்கின இட்த்துக்கு வந்தால்.

மும்பை எக்ஸ்பிரஸில் தோல்வியான டிஜிட்டல் முயற்சி, ரெட் ஒன் புண்ணியத்தில் உன்னைப் போல் ஒருவனில் சக்சஸ்.

ரெட் டிஜிட்டல் எனும் கம்பேனி பிரத்யேகமாக இந்த காமிராக்கள் தயாரிக்கிறார்கள்.

சரி அடுத்து என்ன.

எல்லோரும் டிஜிட்டல் வழி வர சாத்தியம் உண்டு. இன்று எல்லோரும் நம்பியிருக்கும் பிலிம் விலை காரணமாய் மலை ஏறிவிடும்.

அப்படியா!!!! வரட்டும்.. வந்தால் என்ன நடக்கும்.

இன்றைய விலைப்படி இந்த ரெட் ஒன் காமிராவின் விலை சுமார் ரூபாய் 10 லட்சம். வாங்குவதோ அல்லது வாடகைக்கு எடுப்பதோ கூட சாத்தியமாகலாம். போஸ்ட் புரோடக்‌ஷன் வேலை சுலபமாயும் சுருக்கமாகவும் ஹை ஸ்பீடு பிசிய்லே முடிந்து விடும்.

எனும் போது திரையில் காட்டத் தகுந்த வடிவத்தில் ஒரு சினிமா எடுக்க நம்மால் முடியும்.

வலையுலகம் எனும் தொழில் நுட்பத்தால் இன்று நடக்கும் அக்கப் போரை பாருங்கள். படுக்காளியான நான் கவிதை கதை எழுதினால் முப்பது வருட்த்துக்கு முன் என்னவாகி இருக்கும். யாரோ ஒரு பதிப்பகத்தின் பின்னால் ஓட வேண்டி இருந்திருக்க வேண்டும்.

இன்று என் சவுகரியம் எனக்கே ஆச்சர்யம்.

தோணுவதை எல்லாம் எழுதுகிறேன். ஒரு பைசா செலவில்லை. கலை தாகம், தமிழ் தாகம் தீருகிறது. எழுதுவதற்கு ஒன்றுமே இல்லையே என சில நாள் டிரையாகவும் உள்ளது. எழுதுனா கேப்பாரும் இல்ல, எழுதலன்னா அடிப்பாரும் யாரும் இல்ல.

வலையுலகம் இப்படி ஆச்சுன்னா, அப்போ சினிமா நாளை என்னவாகும்....

செதுக்கும் சில சிந்தனைகள், வாழ்வை புரட்டிப் போடும் வல்லமையோடு – சிந்தனை 3

உன் லட்சியம் எதுவாயினும் அதை அடையலாம்.

எதுவாயினும்..... ????

அது எப்படிங்க...என நாம் டவுட் கேக்கும்போது பிரையன் ட்ரேசி கையை சுழற்றி, சொல்கிறார் ‘நீ டிசைட் பண்ணு. டிசைட் பண்ணி கமிட் ஆயிட்டேன்னா உன் பேச்ச நீயே கேக்க மாட்ட’ என்கிறார் அவரது அக்சிலேரட்ட்ட் லேர்னிங் எனும் அவரது அற்புதமான புத்தகத்தில்.

இதை கொஞ்சம் ஆழமாய் சிந்தித்தால், லட்சியம் ஒவ்வொருத்த்ருக்கும் உண்டு. பக்கத்து வீட்டு பொண்ண கட்டுறதுல இருந்து, கொடி நாட்டி கோட்டைய பிடிக்கிற வரை பரந்து விரிந்து பாய் போட்டு படுத்து இருக்கிறது.

காசு பணம் சம்பாதிப்பது, கடவுளை அடைவது ஏன் தொழிலதிபர் ஆகும் வரை என லிஸ்ட் நீளூது.

லட்சியத்த லட்சியம் செய்யாம அதை அடையும் வழி மட்டும் யோசிப்போம்.

என் லட்சியத்தை நிறைவேற்றும் சக்தி எனக்குள் இருக்கு அல்லது வெளியில் இருக்கு என்ற இரண்டே பிரிவுதான். இதெல்லாம் நடக்காதுங்க என்று பெறுமூச்சாய் சொல்பவரை ‘நெக்ஸ்ட் மீட் பண்ணுறேன்’ சிரித்த முகத்தோடு வழியனுப்பி விடுவோம்.

நமது இந்திய சிந்தனையில் இறை, விதி, ஜாதகம், என பல விசயங்கள் நம் தன்னம்பிக்கையே பதம் பார்க்கின்றன. வெள்ளைக்காரன் பரவாயில்ல இந்த சமாச்சாரங்கள் அவனுக்கு கொஞ்சம் குறைவு.

‘பையன் பிசினஸ் தொடங்கலாம்னு நினைக்கிறான். அவன் கட்டத்த பார்த்து கட் அண்ட் ரைட்டா சொல்லுங்க’ எனும் தகப்பனுக்கு ஜோசியன் என்ன சொல்லுவான்.

இந்த மேட்டர விலாவாரியா பார்த்து சொல்லும் வலு நம்ம ஜோதிட சாஸ்திரத்துக்கு இருக்கு என்றே நம்புவோம். இந்த அறிவியல பயன் படுத்திர வியாபாரி கையில் இருக்கு இப்போ.
பையன் பிசினஸ் சூப்பர் என்றால் பிரச்சனையே இல்ல. பிசினஸ் ஊத்திக்கும் என்றால் உடைச்சு சொல்லாம, பூசி மெழுகினான் என்றால் கேட்ட தகப்பன் என்ன செய்வான்.

எனக்கு லக்கினத்தில் வாத்து, நாலாம் கட்ட்த்தில நாய் இருக்கு, இரண்டு வருசத்துக்கு நேரமே சரி இல்ல, என்று குட்டிச் சுவரில் குத்த வைத்து இருக்கும் குமாரை பார்க்கும் போது உங்களுக்கு எப்படி தோன்றுகிறது.

சிவப்புக் கலர்ல மூணு மோதிரம் ஒரே விரல்ல போட்டா, அதிர்ஷ்ட லச்சுமி அள்ளிக் கொடுப்பா என்கிற மோச லால் சேட் எப்படி தோன்றுகிறார்.

உழைப்பும் தன்னம்பிக்கையும் இல்லாது நேரம் சரியாயிருந்தால் போதும் என்ற நினைப்பு எப்படி.

சரி பிரையன் டிரேசி சொல்வது என்ன

1. உன் லட்சியம் என்ன என்பதை ஒரு காகித்த்தில் எழுது
2. நேரம், அளவு, செயல் திட்டம் என முடிந்த வரை காகிதத்தை நிரப்பு

3. உன் லட்சியத்தை ஏற்கனவே அடைந்தவர் பட்டியலிடு முடிந்தவரை
4. அவர்கள் என்ன செய்ததால் இப்படி ஆனார்கள் என கண்டுபிடி
5. நீயும் அதையே செய்.... அவ்வளவுதான்....


சரி எனக்கு டெண்டுல்கர் போல் கிரிக்கெட்டில் ஜொலிக்க ஆசை. அவர் ஜொலிப்பதின் ஒரு பகுதி அவரது கடின பயிற்சி, ஒருங்கிய லட்சியம் என ஒத்துக் கொள்கிறேன். அதை என்னாலும் செய்ய முடியும் என்றும் நம்புகிறேன்.

ஆனால் அவரது இத்தகைய உயர்வுக்கு காரணம் அவரது கூரிய கண் பார்வை தானே. எத்தனை வேகத்தில் பந்து வந்தாலும் பார்க்க முடியும் அவரது இயல்பு தானே. இது போல் கூரிய கண் பார்வை உடைய கவாஸ்கரும் பெரிய பிஸ்து.
அது போல் மூளை இல்லாது, அனிச்சை எனும் தண்டு வடத்தின் செயல்பாடும் இவரது இன்னொரு கொடை. இந்த ரிப்லெக்ஸ் தானே அவரது பலம். அந்த தண்டு வட தடாலடி தானே பந்து வீசுபவருக்கு வயிற்றில் புளி கரைக்கிறது.

எனும் போது வரமாய் வாங்கி வரும் கொடைகளும் நமது முயற்ச்சியும் இணைந்தாலே தானே முடியும் என்ற எண்ணத்தில் தவறு இல்லை.

என்னால் முடியும் என்ற நம்பிக்கையோடு, முனைப்பும் சேர்ந்து, கடினம் எனச் சொல்லாது எனக்கு இந்த முயற்சியும் பயிற்ச்சியும் பிடிக்கிறது என்று நாம் சொல்ல தொடங்கினால் வானம் நம் கைக்கு எட்டும் தூரம் தான்.

தெய்வத்தால் ஆகாதெனினும் முயற்சி தன்
மெய்வருத்த கூலி தரும்

எனும் வள்ளுவ சிந்தனையும் இதுதானோ

காட்சிகள் கவிதையாய்





காட்சிகள் சிறையானால்
நினைவுகளுக்கு காப்பு
காலத்துக்கு ஆப்பு




புகைப்படம் பற்றிய புகைப்படம் பற்றிய என் பழைய கவிதை.











அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சாகும்

குடுக்க வேண்டியதை,
கூட கொடுத்தால்
அதையும் கூரைய பிச்சுக்கிட்டு கொடுத்தால்
இயற்கையும் கூட இடைஞ்சல்








சுடும் வரை சூரியன்,
சுற்றும் வரை பூமி,
போராடும் வரை மனிதன்.
(நன்றி வைரமுத்து)




வெற்றி வேண்டுமா!
போட்டுப் பாரடா எதிர் நீச்சல்,
சரிதான் போடா தலை விதி என்பது வெறும் கூச்சல்













காப்பாற்ற வேண்டிய இறைவன் கணுக்கால் தண்ணீரில்
பகுத்தறிவாளர் கெக்கலிப்பார்


இயல்பிலே
மனிதம் வேறு இறை வேறல்ல,
இயற்கைக்கு,
இயற்கையாய்


வழிபாடும் கோவிலும்
மனிதன் இறை அடையும்
இடமே

அண்மையில்
அடை மழையால்
அண்டை மாநிலத்தில் துயரம்
வேண்டுகிறேன் விரைவில்
நிலையில் சகஜம்

வெங்கிக்கு நோபல் பரிசு

ஏழாம் வகுப்பு படிக்கும் போது, படுக்காளி நண்பன் சொன்னான். ஒண்ணாப்பு ஆரம்பிச்சு, காலேஜ் வரைக்கும் எல்லா புஸ்தகமும் படிச்சு, ஒரே நேரத்தில பரிச்சை வைப்பாங்க, அதுலே பர்ஸ்ட் வந்தா நோபல் பிரைஸ் கிடைக்கும். இன்று சிரிப்போடு அதை நினைக்கிறேன்.

இந்த வருடத்தின் நோபல் பரிசு. வெங்கிட ராமன் ராதா கிருஷ்ணன் அவரது வேதியியல் ஆராய்ச்சிக்காக என ஊடகங்கள், அரசு பாராட்டும்போது தான் நமக்கு தெரிகிறது. சொல்லவே இல்ல, சொல்லாமலே இப்படி ஒரு தேர்வு, போட்டி முடிவு எல்லாமா. சத்தம் இல்லாம நடக்குதே. சரி தெரிஞ்சு கிட்ட்துக்கு அப்புரமாவது என்ன ஏதுன்னு கொஞ்சம் பார்ப்போமே, என யோசித்த்தே இந்த பதிவு.

1900 வருடம் தொடங்கிய சர்வதேச அளவில் இலக்கியம், அறிவியல், சமூகம் சார்ந்த மிக உயரிய பரிசு, அடையாளம். படத்தில் உள்ள ஆல்பிரட் நோபலுக்கு ஒரு சல்யூட், இப்படி ஒரு காரணத்திற்காக தன் சொத்தை எழுதி வைத்த்தற்கு.

இந்திய சரித்திரம் சிலிர்க்கும் நாள். ஈன்ற பொழுதினும் பிரிதுவக்கும் தன் மகனை சான்றோன் எனக் கேட்டாள் நம் இந்திய தாய். நம்ம வெங்கிட ராமன் ராதா கிருஷ்ணன் நோபல் பரிசு வாங்கிய ஒன்பதாவது இந்தியர்.

ரிப்போசோம் தான் உடலில் புரோட்டின் தயாரிக்குது. தாவர, விலங்கிய மனித உயிரையும் சேர்த்து தான்.எல்லோருக்கும் ரிப்போசோம் தான். அதனுடைய தன்மையை பரிமாணத்தை எக்ஸ் ரே மூலமாய் கலாய்ச்சு, படம் போட்ட்து தான் இவர் சாதனை. காய்ச்சல், ஜலதோஷம் எனும் உபாதைக்காக நாம் சாப்பிடும், ஆண்டி பயோட்டிக்க் எப்படி இதனுடம் ஒட்டிக் கொள்கிறது என்பதை விளக்கும் மூலக் கூறும் கண்டுபிடித்ததால் இந்த பரிசு.

இதில் ஆச்சர்யம் உலகில் மூவர் இந்த ஒரே ஆராய்ச்சியில் தனித்தனியாய் ஈடுபட்டு, ஒரே எக்ஸ் ரேயின் மூலமாய் தீர்வும் கண்டுள்ளனர். எனவே எல்லோருக்கும் பரிசு பணம் பங்கிட்டு கொடுக்கப் பட்டு உள்ளது. நம்மாளின் பங்கு 7.3 கோடி.

இது மனிதனை மனித உயிரை இன்னும் கொஞ்சம் நொண்டி அடிக்க
வைக்கும். ஊசலாடும் உயிரை இன்னும் கொஞ்சம் ஊதி விடும்.

சிதம்பரம் பெற்றுத் தந்த சீரிய சிந்தனையாளருக்கு வாழ்த்துக்கள்.இது டிரைலர் தான் இன்னும் என் ஆராய்ச்சி முடிவு பெறட்டும் மெயின் பிக்சர் இன்னும் இருக்கே என்ற அவரது தன்னம்பிக்கையும் தன்னடக்கத்தையும் வியந்து பாராட்டுகிறேன்.

இதை செய்தியாய் வெளியிடும் சர்வதேச பத்திரிக்கை இந்த பதிவை வேறு திசைக்கு கூட்டிச் செல்கிறது.

இந்தியனாய் பிறந்து இன்று அமெரிக்கன் ஆகி விட்டாரே நம்ம வெங்கி. சர்வதேச பத்திரிக்கை எல்லாம் அவரை அமெரிக்கன் என்று தானே கொண்டாடுகிறது.

சிதம்பரத்து மண்ணும் தில்லை அம்பலமும் அன்னியமாகி விட்டதே.
சட்டென இடைமறித்து ஒரு சிந்தனை. இல்லை இதில் இந்தியன் எனும் அடையாளம் தேடுவது தவறோ!!

1979ல் அன்னை திரேசா பரிசை, நமது என்று கொண்டாடிய மனது, அவர் வந்தடைந்த பூமிதானே நம் இந்தியா என பார்க்க மறந்த்தே.
அன்று பார்த்த்து மனித்த்தை தானே. மனித நேயம் தானே.

லோ கிளாஸ் எதிர் வினை

கேக்கதுக்கு ஆளு இல்லைன்னா எது வேணா எழுதுவியா என படுக்காளி சட்டை பிடித்தார் நண்பர் ஒருவர்.

சில தினங்களுக்கு முன் எழுதிய லோ கிளாஸ் பதிவை பார்த்து. ம்... நல்லா இருக்கு தொடர்ந்து எழுது எனும் சில நண்பர்களின் வாழ்த்தோடு வந்த இந்த சட்டை பிடி ரொம்ப பிடிச்சுது.
ரொம்ப ரொம்ப பிடிச்சது.

வெறும் பொருளாதாரத்தின் அடிப்படையில் விளைந்த விரிசல் தான் இந்த லோ கிளாஸ் ஹை கிளாஸ் எல்லாம். நீ சொல்ற மாதிரி ரசனையில் மாறுபாடு என்பது நீ பிடித்த ஜுகல்பந்தி.

காசு கம்மி ஜாஸ்தி அவ்வள்வுதான். ஒரே காசுன்னு சொல்லி பாரு எல்லா ஜனமும் இங்கே தான் இருக்கும்.

அப்புரம் என்ன சொன்ன, நீ லோ கிளாஸ்!! அங்கய இருக்க ஆசைப் படுறேன்னு, பான் பீடா மொழுகிய தரைய பார்த்து காலை தூக்கி மேல வைக்கல. வைச்சல்லே, அப்புறம் என்ன நான் லோ கிளாஸ்ன்னு ஒரு பீலா.

பக்கத்து சீட்டு கை தட்டல்ல புல்லரிச்சுது, அடுத்தவங்க உணர்ச்சி உண்ணோடயும் ஒட்டிக்கிச்சுன்னு ஒத்து உதியிருக்கியே. கேக்காத வசனமும், இளையோடும் இசையின் நைச்சியமும் உணர முடியாமல் நான் தவிச்சுப் போயி கிடக்கிறேன்.

யாரோ ஒருத்தன் ‘என்னைப் பாரு என் அழகைப் பாருன்னு அவன முன்னிறுத்தி கூவுரது உனக்கு குயில் பாட்டா. அடுத்தவங்களுக்கு தொந்தரவு தர்றது நல்லதா. நான் பார்க்க வந்த்து சினிமாவத்தான். உனக்கு வேணும்னா!! இவன் கூச்சல் கேக்கனும்னா அதுக்கு தனியா டிக்கட் வாங்கிக்கோ.

நண்பரின் வார்த்தைகள் அத்தனையும் உக்கிரமும். உண்மையும் நேர்மையும் உடையது.

படுக்காளிக்கு ஒரே குஷி. திட்டுரது தித்திக்குதா.

நான் எழுதுறதே படிக்கிறவுங்கள சிந்திக்க வைக்கவும், அந்த சிந்தையில் இருந்து நான் கத்துக்குறதுக்கும் தான்.

இலக்கு அடைந்த நிறைவில் என் எழுத்துக்கள் பூரிக்கின்றன. நன்றி.

செதுக்கும் சில சிந்தனைகள், வாழ்வை புரட்டிப் போடும் வல்லமையோடு – சிந்தனை 2

உங்களது அசெட் எது, லையபிளிட்டி எது. யோசிக்காம வாழ்க்கை போற ரூட்டில போறது அசெட், இந்த மாதிரி கேள்விகளும், சிந்தனைகளும் லையபிளிட்டி என குதர்க்கமாய் படுக்காளி யோசித்தாலும் நீங்கள் அப்படி இல்லை. நீங்க ரொம்ப நல்லவுங்க.

எத்தனையோ வல்லுனர்கள் பக்கம் பக்கமாய் இதை பற்றி எழுதியிருந்தாலும். மிக எளிமையாய் ராபர்ட் கியோசாக்கி சொல்கிறார். அவரது புத்தகம் ‘ரிச் டாட் பூவர் டாட்’

எது பணத்தை உன் பாக்கெட்டில் போடுகிறதோ அது அசெட். எது உன் பாக்கெட்டில் இருந்து பணத்தை எடுக்கிறதோ அது லையபிளிட்டி.

நம்மில் நிறைய பேர் நாம் குடியிருக்கும் நம் சொந்த வீட்டை அசெட் என்போம். வீட்டை அசெட் என்றால் நீ அசத்து. அவர் புத்தகம் கல கல வென சிரிக்கிறது நம்மை பார்த்து.

அவர் விளக்கத்தில் அது லையபிளிட்டி.

வருடா வருடம் சொத்து வரி, பெயிண்ட் அடிக்கணும், கரெண்ட் பில், இப்படி உங்கள் பாக்கெட்டில் இருந்து பணம் எடுக்குமே அல்லாது எப்போவாவது பணம் போட்டுருக்கா. அந்த வீட்டை விற்கும் வரை. பின்ன என்ன அது சொத்துதான் என நீங்கள் வரிஞ்சு கட்டி வாதாட வந்தால், கொஞ்சம் பொறுமை. அதன் அசல் பற்றி ஒன்றும் சொல்லவில்லை. அது தரும் ரிட்டேர்ன்ஸ் பற்றிதான் பேசுகிறோம்.

(அசலையும் வட்டியையும் குழப்பாதே – இதுவும் அவரது சூப்பர் பாயிண்டு. அதை பற்றியும் சொல்கிறேன். அது வரை பொறுமை வேண்டுகிறேன்).
அவர் சொல்லும் மிக அடிப்ப்டை விசயம் இதுதான். சொத்தை பெருக்கு. கடனை குறை. அவ்வளவுதான்.

ஒரு பேப்பர் பேனா எடுப்போம். நமது செலவு ஒரு பக்கம், வரவு ஒரு பக்கம் எழுதி எது கூடுதல் எது குறைவு என பார்த்தால் நம் உண்மை நிலை பளிச்சிடும் என்கிறார்.

இது என்னை ரொம்ப யோசிக்க வைத்து வாழ்வில் சில மாறுதலும் செய்த்து.
காலம் பூரா ஜல்லியடித்து நமக்கு நிரந்தர வருமானம் தரும் ஒன்றரை அணா பிசினஸ் இல்லையே எனும் போது நே! என்றிருக்கு.
உதாரணம், ஒரு லட்ச ரூபாயில் ஒரு சோடா கடையோ, பீடா கடையோ துரந்தா கூட மாதம் ஒரு காசு லம்பா வரும். ஆனா நம்ம நிலம கைய ஊணி கரணம் போட்டு மாசமானா சம்பளத்த எதிர்பாக்கிற ஒரு ஸ்திர தன்மை தான் இருக்கு,

ரொம்ப லேட் ஆச்சோ! என்ற புலம்பலை தள்ளி விட்டு, தீவிரமா இன்னைக்கு யோசிச்சா கூட இதுக்கு ஒரு தீர்வு நிச்சயம் நாளை இருக்கு..

அழகு.... பணம்.... கடவுள்....

அழகு என்பது என்ன? நிரந்தரமானதா?

ஆபத்தில்லாதது, சமூகம் அங்கீகரித்தது, சந்தோசம் தருவது அழகு. நிரந்தரமானதா என்பது கொண்டவரின் கோட்பாடு பொறுத்த்து.

செந்தில் (கவுண்டமணி) புகைப்படம் ஆப்பிரிக்காவில் பெண்தேட அனுப்பினால் நிச்சயம் ‘மாப்பிள்ள நச்சுன்னு இருக்கார்’ என சிலாகிக்கலாம். அதுவே வட நாட்டுக்கோ, அமெரிக்காவுக்கோ அனுப்பினால் ‘ரிஜெக்டட் தான்’

அரிசி சாக்கு மூட்டய இரண்டு பிடி பிடித்து, மேல் பிடிக்கு மீசை, தலை முடி வைத்த மாதிரி உடல் கட்டு மோகன் லாலுக்கு. சேர நாட்டின் எல்லா பெண்களின் கனவிலும் ஆதர்சன நாயகனாய் ஐம்பது வயதிலும் வலம் வருவது எந்த கணக்கில் சேர்த்தி.

‘கல்யாணம் பண்ணுற முதல் அஞ்சு வருசத்துக்கு தான் இந்த அழகு வனப்பு எல்லாம். அப்புறம் எல்லாரும் ஒண்ணு போலத்தான் என்கிற விடல பையன் கமெண்டை எங்க போய் சொல்றது.

பணம் அவசியமா?

கடலை முட்டாய் வாங்க பணம் தேவை. கிரெடிட் கார்ட் அக்ஸெப்ட் செய்வது இல்லை.

கடல் காற்று வாங்கவும், அஸ்தமனம் பார்க்கவும் காசு இல்லை.

கடவுள் உண்டா?

ஆஹா! பயங்கரமான கேள்வியாச்சே.

இது ஒயாத சர்ச்சை, தீர்வு இல்லாத கேள்வி.

எத்தனை மகான்களும் தேவ குமாரனும் வந்தால் கூட, ஒ.கே. ஒத்துக்குறோம் என ஒதுங்க முடியாத ஒன்லைனர்.

எந்த சீலமான் டாப்பையா வந்தாலும் முடிவு சொல்ல முடியாத வெட்டி மன்றம். சரி படுக்காளியும் தன் பங்குக்கு சொல்கிறேன். (ஆனா! பாஸ் எஸ்ஸே டைப் கொஸ்டினுக்கு ஒன் வேர்ட் ஆன்ஸர் பதில் சொல்ல சொன்னா எப்படி...)

கடவுள் இருக்கு என்று சொல்பவன் முட்டாள் எனும் பகுத்தறிவாளர்கள், கடவுள் இல்லை என்பவன் மூர்க்கன் என்பதை ஒப்புக் கொள்வார்களா.

ஆராயாமல் அனுபவிக்காமல் அடுத்தவன் சொன்னதை கேட்டு ஆமாஞ்சாமி போடும் ஆன்மிக வாதியை புறந்தள்ளுங்கள் என்பவரே, புஸ்தகம் படிச்சுட்டு, எல்லாம் தெரிந்ததாய் தம்பட்டம் அடிக்கும் அரை வேக்காடை அடுப்பில் போடுவோம் என்றால் கோபப் படாமல் ஒத்துக் கொள்வீர்களா.

கண்டவர் விண்டிலர், விண்டவர் கண்டிலர் என்றவர் நாம் விண்டினானும் போதே நமக்கு இறை பற்றி ஒண்ணும் தெரியாது என்கிறார். இது எப்படி.
சிறு வயதில் பெற்றோர் எனும் பாதுகாப்பில் அரவணைப்பில் வளர்ந்து, அவர் ஆதரவை எதிர் பார்க்கும் குழந்தை மனம் வளர்ந்த பின்னும் அதையே தேடி அலைவது என்பார் உளவியல் விற்பன்னர்.

இறை பற்றி விளக்க முற்படும் போதே சிக்கல் சிஞ்சினக்கா ஆடுகிறது. ஆழ்ந்து அகன்ற நுண்ணியனே என்பது கவித்துவமாய் இருக்கலாம், பொருள் அளவில் வெந்தும் வேகாத ஆப்பாயில்.

குருடான நால்வர் யானை பார்த்து சொன்ன கதை தான், ஆன்மிகம் பற்றி விளக்க நாம் முற்படும் போது.

கடவுள் இருக்கு என ஒத்துக் கொண்ட இட்த்தில் கூட கோஷ்டி தகராறு. த்வைதம், அத்வைதம். ஆமா இருக்கு என்பதில் கூட, உனக்கு உள்ள இருக்கு எனும் விவேகானந்தர் கூருப், இல்லை வெளிய எனச் சொல்லும் ஆழ்வார் கூருப் இந்த பக்கம்.

இருக்கு இல்லை என்ற எந்த நம்பிக்கையோட நீ தேடினாலும் நீ மடையன் என சீறும் ஜே.கே. யும் உண்டு. மனம் போன போக்கில் தேடும் மகரிஷி மார்க்கம்.

எளிதாய், இது பற்றி விளக்க முயற்சித்தால்.

யோக நிலை என்பது மனதும், உடலும் ஒரு சேர தர்க்கம் இல்லாமல் நிற்கும் ஒரு நிலை. சொன்னதை கேட்காத மனமும் உடலும் வேலைக்கு ஆவாது. நட்பான உடலும் மனமும் ஆரம்பம். பின்னர் தியானம். தியானம் என்பது உடல், மனம், பகுத்தறியும் புத்தி எனும் மூன்றையும் அடக்கிய (மூன்றும் கண் மூடி, வாய் பொத்தி நிற்கும் பரிதாவமான) ஒரு நிலை. ஆன்மாவை தரிசிக்கும் ஒரு கட்டம்.

நான் என்பது உடல் இல்லை, மனம் இல்லை, புத்தி இல்லை. சரி பின்னே என்ன, காலம் கடந்த, பொறுப்புக்கள் கடந்த, உலகம் கடந்த ஒரு குட்டி ஒளி. ஆன்மா. நம் ஆன்மாவை கண்டபின் ஆன்மாவின் சூப்பர் ஸ்டார் சூப்பர் ஆன்மாவை காணுவது இறையியம். கண்டதை வெளியில் / மொழியில் சொல்வது பெரிய உட்டாலங்கடி வேலை.

டேன் பிரவுன் தனது கதை ஒன்றில் இதே கேள்விக்கு ஒரு கதாபாத்திரத்தின் சிந்தனையாய் இதை சொல்லுவார்.

‘இறைவன் இருக்கிறாரா இல்லையா என்பதை தெரிந்து கொண்டால் கூட அதை புரிந்து கொள்ள முடியாது என நினைக்கிறேன். மேலும் அதை என் வாழ் நாளில் தெரிந்து கொள்வது மிகவும் சிரமம் போல தோன்றுகிறது’

நானும் ததாஸ்து.

காதல்

காதல் மனிதனுக்கு அவசியமா?

இல்லையா பின்ன, அப்புறம் நான் எப்படி குப்புற படுத்து கவிதை எழுதுவது. விட்டத்த பார்த்து கனா காண்பது,லவுசு மூடுல உலகத்தயே மறந்து அலைந்து திரிவது.

ஒன் மினிட், கேள்விய சரியா வாசிக்கட்டும்.

ம்.... காதல் !!!! ????

காதல் பற்றிய விளக்கம் தான் எனை குழப்புகிறது. அதீதமான பிரியம் காதல் எனலாமா.

கல்மிஷம் இல்லாமல் யாருக்கு விட்டுக் கொடுக்க முடியுதோ அங்கு காதல் இருக்கிறது என்று எழுத்துச் சித்தர் பாலா சொல்லுவார். ரசாயண சேட்டை, எக்ஸ்ட்ரோஜன்களின் எழுச்சி என்பார் சுஜாதா.

காதல் மனிதருக்கு இடையில் உறவாடலில் உள்ளதா, அன்றின் மனித மனதில் உள்ளதா.

காதல் என்பது பெரும்பாலாக நம் வாழ்க்கை வழக்கில்/ விளக்கத்தில் திருமணத்துக்கு முன் ஆண் பெண்ணுக்கும் இடையில் பூப்பதையே குறிப்பிடுகிறோம்.

இல்லாமல் கல்யாணத்துக்கு பின் மனைவியோடு காதல், தொழில் காதல், இலக்கு/ இலட்சிய காதல் என சேர்த்துக் கொண்டால். அப்பு அது தப்பு என்றோ ஆஹா அது உப்பு அதை சப்பு என்றெல்லாம் எழுதி விடலாம்.

எக்கச்சக்க காதல் இருப்பதாலும், காதல் அவசியமா என்ற கேள்வியிலே, பதில்கள் இரண்டு சாய்ஸாய் இருப்பது தான் குழப்பத்தின் காரணகர்த்தா.

செதுக்கும் சில சிந்தனைகள், வாழ்வை புரட்டிப் போடும் வல்லமையோடு

எண்ணம் சொல்லாகும்
சொல் செயலாகும்
செயல் பழக்கமாகும்
பழக்கம் குணாதிசயமாகும்
குணாதிசயம் நீயாவாய்

- (ஜெய் குருதேவ் பூஜ்ய ஷ்ரீ ஷ்ரீ ரவி சங்கர்)

எண்ணங்கள் சில நம் வாழ்வின் பாதையையே மாற்றி அமைக்கும் வல்லமை உள்ளது.

அத்தகைய ஒரிறு சிந்தனைகள் என் வாழ்வையும் புரட்டிப் போட்டது.

மூலம் நம் தமிழுக்கு அன்னியமானாலும், விளைவு நம் மனித வாழ்வு என்பதால் தங்களோடு பகிர்ந்து கொள்கிறேன்.

சிந்தனை 1 :
ராஜா என்றோரு பெயரை வைத்துக் கொள்வோமே. பள்ளி/ கல்லூரி நாட்களில் அவன் உங்கள் பரம எதிரி. அவனுக்கும் தங்களுக்கும் ஏழாம் பொருத்தம். அவனை பார்த்தாலே எரிச்சல் வரும், அப்படி ஒரு பிரகஸ்பதியை பள்ளி/ கல்லூரி முடிந்த பிறகு நீங்கள் பார்க்கவே இல்லை. வருடம் ஒரு பத்தை உருட்டி விட்டது என்றும் வைத்துக் கொள்ளலாமே.

நல்ல வேலை, குடும்பம் என நீங்கள் செட்டிலாகி விட்டீர்கள். பழைய நினைவு என்பது இப்போதும் இனிமையாகவே உணர்கிறீர்கள்.

இன்று தற்செயலாய் ரோட்டில் அவனை நீங்கள் பார்க்கிறீர்கள்.

முதலில் ஒரு சந்தேகம். அவனா இது. அவன் தானே. அதே ஒடிசல் தேகம், இன்னும் கருத்து இருக்கிறான். அவன் தான். சந்தேகம் இல்லை. இப்போ என்ன செய்ய. பகைமை அப்போது தானே, இன்னுமா. பேசலாமா, இல்லை வேண்டாமா என மனதில் ஒரு தர்க்கம். புன்னகைக்கலாமா, இல்லை அவன் என்ன செய்வான். சரி இருக்கட்டும் அவன் என்ன செய்கிறான் என பார்ப்போம். தீர்மானம் இல்லாமல் ஒவ்வொரு தப்படியாய் நடந்து செல்கீறிர்கள்.

நெருங்கி விட்டீர்கள்.

எதிர்பாராத்து நடக்கிறது. அவன் பாய்ந்து உங்கள் சட்டையை பிடித்து கன்னத்தில் சப்பென்று அடிக்கிறான்.

அவ்வளவு தான் உங்களுக்கும் கோபம் பொத்துக் கொண்டு வர, திருப்பி தாக்க கை முஷ்டி மடக்குகீறீர்கள். அப்போது அவன் கூட நடந்து வந்த சிலர் அவனை அமுக்கிப் பிடிக்க, ஒருவர் உங்கள் அருகில் வந்து உங்கள் கை பிடிக்க, சாலை விழி மேல் வைத்து பார்க்கிறது.

’சாரி சார், இவருக்கு மன நிலை சரி இல்லை. ஆஸ்பத்திரிக்கு தான் கூட்டிக்கிட்டு போறோம். தப்பு நடந்திருச்சு, மன்னிச்சுருங்க’

நண்பர்களே! நீங்கள் என்ன செய்வீர்கள்.

சட்டென்று கை உதறி, பரிதாவமாய் அவனை பார்ப்பீர்கள் அல்லவா. எதாவது உதவி செய்ய முடியுமா என அவசரமாய் சிந்திப்பீர்கள் அல்லவா,

ஒரு கேள்வி.

அது எப்படி. ஒரு தகவலில் உங்கள் சிந்தனை அதன் தொடர்புடைய செய்கை மாறி விட்ட்து.

கோபம், ரவுத்திரம் என பொங்கியது ஒரு பத்து வார்த்தைகளில் இரக்கம், பச்சாதாபம் ஆக மாறி விட்டது.

இப்போதும் அவன் உங்களை அடிக்க திமிறிக் கொண்டு இருந்தாலும், உங்கள் பார்வை கனிவாகத்தானே உள்ளது.

இது என்ன விந்தை.

ஸ்டிபன் ஆர். காவி தனது புத்தகத்தில் இதையே ’பாரடைம்’ / ‘பாரடைம் ஷிப்ட்’ எனக் குறிப்பிடுகிறார்.

நமது பார்வையில் அல்ல உணர்வில் தான் எதுவுமே விளக்கப் படுகிறது. எந்த செய்கையும் அதை குறித்த நமது விளக்கமே நிர்மாணிக்கிறது.

சரி, ஒத்துக் கொள்கிறேன். இது என் வாழ்வை மாற்றி அமைக்குமா. கும்...

1. இனி சாலையில் அவசரமாய் செல்லும் போது நம்மை இடிப்பது போல சென்ற அந்த நபரை பார்த்து தூசன (கெட்ட) வார்த்தையால் வைய வேண்டாம். ஒரு நிமிடம் ஏன் இப்படி செல்கிறான். என்ன பிரச்சனை. சரி, எதோ பிரச்சை. இந்த சிந்தனை போதுமானது. நிச்சயமாய் அடுத்த்தாய் இப்படித்தான் நினைப்போம். என்ன அவசரமோ போகட்டும் என விட்டு விடலாம்.

அட போடா. தோத்து கொடுக்க சொல்றீயா! உப்பு சப்பு இல்லாம வாழ சொல்றீயா, என்ற நினைப்புக்கு இல்லை இந்த கோபமும் கெட்ட வார்த்தையும் நமது உடலையும் மனதையும் தானே சீரழிக்கும்.
ஒரு தகவல் நம் சிந்தனையை மாற்றும் வல்லமை பெற்றது என புரிந்தாலே மிகப் பெரிய மாறுதல் நமக்குள் நிகழும்.

வெறும் பதிவாய் இல்லாமல், அவசர அவசரமாய் வாசித்து முடித்து விட்டு விடாமல், ஒரு நிமிடம் இதை பற்றி யோசித்தால் இன்னும் பிரமாண்டமான விடயம் தங்களுக்கு தோன்றும். சிரம்ம் இல்லை என்றால் அதையும் பின்னூட்டமிடுங்கள்.

அடுத்த இது போன்ற ஒரு தகவலுடன் நான் விரைவில் வருகிறேன்.

தாத்தாவ மறந்திட்டியே கண்ணு....

1
கும்மிருட்டு. குடிகார குடிமகன்கள் கூடி கும்மியடிக்கும் குஜாலான பார். கூட்டம் அள்ளுது. அதோ அந்த டேபிள்ல, அதேதான் லாஸ்ட்ல இருந்து இரண்டாவது. அங்கதான் போதையில் தாறுமாறாய் நம் செல்லத்தம்பி.
சரி போதும். நிறுத்திர வேண்டியது தான் இதே லெவல்ல கிளம்பினாத்தான் வீடு சேர முடியும் இல்லை, பாதி வழியில எங்காவது ரோட்டில தான் படுக்க வேண்டி இருக்கும் என தோணியதால் இடுப்பு பேண்ட் இழுத்து விட்டு கிளப்பத் தயாரான போது, அடுத்த டேபிள் ஆளு, சொன்னதால் அவசர அவசரமாய் போய் அடுத்து ஒரு பாட்டில் வாங்கிக் கொண்டார்.
ஏன்.....

2
எவ்வளவு தரம் கழுவினாலும் இந்த சிங்க்ல போடுற பாத்திரம் ஒழியுரதில்ல. நைட்டுல வேலையெல்லாம் முடிஞ்சு அக்கடான்னு படுக்கலாம் என்கிற போது தான் ஒரு வண்டி பாத்திரம் இருப்பது தெரிகிறது. இப்பவாவது பரவாயில்ல காலையில பாத்துக்கலாம்னு விட்டா அவ்வளவுதான் காலை பரபரப்பில் இது ரொம்ப ரொம்ப கஷ்டம்.

கை என்னவோ எச்சில் பாத்திரத்தோடுதான் என்றாலும் எண்ணம் மட்டும் நாளை திட்டமிடலில். (உபயம்: வைரமுத்துவின் வீரிய வைர கவிதைகள்) பிள்ளைகளுக்கும் அவருக்கும் லீவு, மட்டன் எடுத்து லீவர் பிரை பண்ணிர வேண்டியது தான். நினைத்த்தை சொல்ல்லாம் என உரக்க கணவனை அழைத்து விட்டு சட்டென உரைக்க நாக்கு கடித்துக் கொண்டு, தலை ஆட்டி சிரித்தாள்.

ஏன்.....

இன்று காந்தி ஜெயந்தி

அவரோடு வாழ்ந்த காலத்தில் இறு வேறு ஆட்கள்.
புத்தன் யேசு காந்தி என நம் மூத்தவர் சிலர் சிலாகித்து சொன்னார்கள். லிஸ்டில் இருந்து காந்திய எடு! அவர் என்ன தேவ குமாரனா என்றும் இரு வேறு கூறுகளாய் தர்க்கம் செய்தனர். அது அன்று.

இன்று,
அடைத்த கடைகளில் மாத்திரம்!!!
அன்றைக்கு மட்டும் திருட்டுத்தனமாய் நாம் செய்யும் சேட்டையிலுமே!!!
அஹிம்சை பல் இளிக்கிறது. திவிரவாதம் திமிறிக்கொண்டி இருக்கும் இந்த வேளையில் காந்தி இருந்தால் என்ன செய்வார் என்று திரைப்படம் எடுத்து நம் கல்லாவை நிரப்பிக் கொள்கிறோம். அம்புட்டுதேன்.

மறக்காமல் இன்றும் அரசு அலுவலகங்களில், அவர் போட்டாவாய் தொங்குகிறார். காந்திய பாரு, அவர் சொன்னத கேளுன்னு பதிவர் நாமெல்லாம் கூட சொல்வதே அன்றி செயல் படுத்தினோமா எனும் கேள்வி மண்டய பிராண்டுது.

அவரது அரசியல் அல்லது சுதந்திர போராட்டம் அன்றைய காலக் கட்டாயம். அதை உங்கள் அனுமதியோடு தள்ளி வைப்போம். கதராடை, அஹிம்சை, ஒத்துழையாமை இதெல்லாம் அது கூடவே சென்று விடும்.
மிஞ்சி நிற்பது அடிப்படை காந்தீயம்.
அச்சம் இன்மை,
அடி வாங்கும் வலு இருந்தால் திருப்பி தாக்கும் திறன் தேவை இல்லை
ஒளிவு மறைவின்றி உள்ளத சொல்லு
உனக்கு சரி யெனப் பட்டால், சட்டய தூக்கி வீசு, அடுத்தவனுக்காக பீட்டர் இங்கிலாண்டு போடாத
கடல தூண்ணு, ஆட்டுப் பால் குடி, உடம்ப உரமாக்கு
மனிசனுக்குள்ள ஏற்ற தாழ்வு இல்ல,
கடவுள் கால புடி, கட்டிக்கா புடி, விட்டுரவே விட்டுராத
நல்லா படி, அறிவுதான் மெயின் மற்றதெல்லாம் கொய்ங்