பக்கங்கள்

ஆச்சி படுக்காளி அழிச்சாட்டியம் 02/03/09

ஜவுளி கடையில் பயங்கர கூட்டம். பண்டிகை நெரிசல்.
வேர்த்து விருவிருத்து எல்லோரும் புடைவையை பார்க்க முண்டி அடித்து கொண்டு இருந்தனர். படுக்காளியின் குடும்பமும் அங்கனமே.

“எள்ளு தான் எண்ணைக்கு காயுது, எலிபுழுக்கை நீ எண்டா காயிர, வெளியிலே பெஞ்ச்ல உக்காரு, போகும் போது ஒண்ணா போயிடலாம்” ஆச்சி ஆதங்கத்தோடு சொன்னார்
“இல்ல ஆச்சி நான் போயிட்ட நீங்க தனியா இருப்பிங்களே பயந்து போயிருவீங்களே தான் நானும் நிக்கிறேன்.”
“அட போடா புடைவை கடையிலே வந்து என்னை யார் தூக்கிட்டு போறாங்க”
“சொல்ல முடியாது ஆச்சி புடைவையே தூக்கி பையில போட்டுட்டு போறவுங்க உங்களையும் தூக்கி பையிலே போட்டுட்டு போயிட்டா.

1 கருத்து:

  1. ஹா ஹா ஹா ஹா படுக்காளி சூப்பர்.

    பய அந்த வயசுலேயே பன்ச் டயலாக் பேச தொடங்கிட்டீயளோ??

    பதிலளிநீக்கு