பக்கங்கள்

கொக்கு பர பர

பீட்டர் எனும் வெள்ளைக்கார துரை துப்பாக்கி எடுத்து கொண்டு கொக்கு சுட போனார். நம் காலத்தில் இந்த கதை நடந்து இருந்தால் விலங்கை தூக்கி கொண்டு காவலரும் சென்றிருப்பார்.

சுட்டார் கொக்கை துரை. இன்று நல்ல வேட்டை. அவசரமாய் வீடு திரும்பி சமையல் காரன் சட்டம்பியை தேடினார். "நல்ல மிளகு போட்டு வருத்து வை” என்று சொல்லி ஆத்துக்கு குளிக்க போனார். சமையல் தொடங்கினான் நம்ம சட்டம்பி. சுவையின் நறுமணம் கிறுகிறுக்க விட்டது. ஆவல் அடங்காது ஒரு காலை தின்று விட்டான். ருசி பார்க்க என்று தொடக்கி நல்லா இருந்ததால் முழுதும் தின்று விட்டான்.

குளித்து முடித்து வந்த பீட்டர் பரிமாற சொன்னார். தட்டில் உள்ள ஒரே ஒரு காலை பார்த்து திகைத்து போனார். எங்கேப்பா இன்னொரு கால். சட்டம்பி சொன்னான் “அதாண்ணே இது"
கதையை நாம் இப்படி முடித்தால் கவுண்டமணி சண்டைக்கு வருவார். இது கதையில் ஒரு வசனம் அவ்வளவுதான். சரி மேலே கதை கேப்போம்.

கோபம் வந்தாலும் அடக்கி கொண்டு கேட்டார் துரை. இல்லப்பா கொக்குக்கு ஒரு கால் இங்கே இருக்கு இன்னொரு கால் எங்கே? சட்டம்பி சொன்னான் "கொக்குக்கு ஒரு கால் தானே" துரை வினோதமாய் பார்த்தார். இருவரும் சேர்ந்து ஆற்றகரைக்கு மறுபடி வந்தார்கள். ஒற்றை காலோடு நின்று கொண்டு இருந்த கொக்கை காட்டினான் சட்டம்பி.

துரை நே! என்று பார்த்தார். இரு கையும் இணைந்து தட்டி ஒ என்று சத்தம் போட்டார். கொக்கெல்லாம் பறந்தது. இரண்டு காலும் தெரிந்தது. துரை சொன்னார் "இப்போ என்ன செய்விங்க" சட்டம்பி பதில் சொன்னான் "சாப்பிடும்போது இதே மாதிரி ஒ சொல்லி கை தட்டுனா ஒரு வேளை இரண்டு கால் வரும்”

பறக்கும் போது கொக்குக்கு இரண்டு கால், அதுவே படுத்திருசின்னா ஒரே கால்

இதோட கதை முடிச்சா இரண்டாம் கிளாஸ் கதை. நம்மள மாதிரி ஆளுங்களுக்கு.

சரி கதை தொடர்ந்து படிப்போம். ........


கதையை நான் முடிக்காமல் விட்டு விட்டேன். முடிவு பகுதியை எழுதி அனுப்புங்களேன்.

1 கருத்து:

  1. //துரை நே! என்று பார்த்தார். இரு கையும் இணைந்து தட்டி ஒ என்று சத்தம் போட்டார். கொக்கெல்லாம் பறந்தது. இரண்டு காலும் தெரிந்தது. துரை சொன்னார் "இப்போ என்ன செய்விங்க" சட்டம்பி பதில் சொன்னான் "சாப்பிடும்போது இதே மாதிரி ஒ சொல்லி கை தட்டுனா ஒரு வேளை இரண்டு கால் வரும்”//

    சட்டம்பியின் பதிலை கேட்டு துரைகு கோவம் மூக்கின் மேல் ஒற்றை காலில் நின்றது. துப்பாகியை எடுத்து சட்டம்பியை குறிவைத்தார். எதாவது சொல்லி தப்பித்தால் போதும் என்று சட்டம்பி பயந்துகொண்டே சொன்னான் "துரை நீங்க பறக்கிற கொக்க சுட்டுருந்தா ரெண்டு கால் இருந்துருக்கும். நின்ன கொக்க சுட்டதனால ஒரு கால் தான் இருக்கு. அதுக்கு நான் என்ன செய்வேன்?"

    சட்டம்பியின் குறும்பான பதிலை ரசித்த துரை சிரித்துக்கொண்டே பறந்துகொண்டிருக்கும் கொக்கின் பக்கம் தன் துப்பாகியை திருப்பினார்...

    பதிலளிநீக்கு