பக்கங்கள்

கொக்கு பர பர - முடிவுகள்

சூப்பர். இரண்டு முடிவுகள் வந்து விட்டது.

இந்த பதிவை வாசிக்கும் முன் :
ஒரு கதை எழுதி படுக்காளி நான் பாதியில் விட்டு விட்டேன் (கொக்கு பர பர .... ) முடிவு பகுதி எழுதுங்களேன் என்றபோது கிடைத்து இது.

ஒன்று

சட்டம்பியின் பதிலை கேட்டு துரைகு கோவம் மூக்கின் மேல் ஒற்றை காலில் நின்றது. துப்பாகியை எடுத்து சட்டம்பியை குறிவைத்தார். எதாவது சொல்லி தப்பித்தால் போதும் என்று சட்டம்பி பயந்துகொண்டே சொன்னான் "துரை நீங்க பறக்கிற கொக்க சுட்டுருந்தா ரெண்டு கால் இருந்துருக்கும். நின்ன கொக்க சுட்டதனால ஒரு கால் தான் இருக்கு. அதுக்கு நான் என்ன செய்வேன்?"சட்டம்பியின் குறும்பான பதிலை ரசித்த துரை சிரித்துக்கொண்டே பறந்துகொண்டிருக்கும் கொக்கின் பக்கம் தன் துப்பாகியை திருப்பினார்...

இரண்டு :

பீட்டர் எனும் வெள்ளைக்கார துரை துப்பாக்கி எடுத்து கொண்டு கொக்கு சுட போனார். நம் காலத்தில் இந்த கதை நடந்து இருந்தால் விலங்கை தூக்கி கொண்டு காவலரும் சென்றிருப்பார். சுட்டார் கொக்கை துரை. இன்று நல்ல வேட்டை. அவசரமாய் வீடு திரும்பி சமையல் காரன் சட்டம்பியை தேடினார். சட்டம்பி சரக்கில் மிதந்து கொண்டிருந்தார். துறையை பார்த்ததும் சரக்கு குப்பி, மிளகு டப்பியின் பின் ஒளிந்தது. "நல்ல மிளகு போட்டு வறுத்து வை” , வாசனை மூக்க தொளைக்கணும் என்று சொல்லி விட்டு ஆத்துக்கு குளிக்க போனார். சமையல் தொடங்கினான் நம்ம சட்டம்பி. சுவையின் நறுமணம் கிறுகிறுக்க விட்டது. ஆவல் அடங்காது ஒரு காலை தின்று விட்டான். ஆஹா, ஒரு கால் போச்சே....... குளித்து முடித்து வந்த பீட்டர் பரிமாற சொன்னார். தட்டில் உள்ள ஒரே ஒரு காலை பார்த்து திகைத்து போனார். எங்கேப்பா இன்னொரு கால். சட்டம்பி சொன்னான் “அதாண்ணே இது" .
கதையை நாம் இப்படி முடித்தால் கவுண்டமணி சண்டைக்கு வருவார். இது கதையில் ஒரு வசனம் அவ்வளவுதான்.
சரி, மேலே கதை கேப்போம். சட்டம்பி சொன்னான் "கொக்குக்கு ஒரு கால் தானே" துரை வினோதமாய் பார்த்தார். இருவரும் சேர்ந்து ஆற்றங்கரைக்கு மறுபடி வந்தார்கள். ஒற்றை காலோடு நின்று கொண்டு இருந்த கொக்கை காட்டினான் சட்டம்பி. துரை ஞே! என்று பார்த்தார். இரு கையும் இணைந்து தட்டி ஒ என்று சத்தம் போட்டார். கொக்கெல்லாம் பறந்தது. இரண்டு காலும் தெரிந்தது. துரை சொன்னார் "இப்போ என்ன செய்விங்க", "சட்டம்பி இப்போ என்ன சொல்றீங்க" .
சட்டம்பி பதில் சொன்னான் "சாப்பிடும்போது இதே மாதிரி ஒ-ன்னு சொல்லி கை தட்டுனா ஒரு வேளை கொக்குக்கு இரண்டு கால் வந்தாலும் வரும்” பறக்கும் போது கொக்குக்கு இரண்டு கால், அதுவே படுத்துடுச்சுன்னா ஒரே கால். இதோட கதை முடிச்சா இரண்டம் கிளாஸ் கதை ஓகே, நமக்கு. சரி கதை தொடர்ந்து படிப்போம்.
கோபம் கொண்ட பீட்டர், சட்டம்பியை ஓங்கி ஒரு உதை விட்டார். அவன் கலங்கி போய், பின்பக்கம் வழியே ஓடி, குளக்கரையில் நின்று கொண்டான்.
பின்னாலேயே பீட்டரும், தன் துப்பாக்கியை எடுத்துக்கொண்டு, சட்டம்பியை துரத்தி வந்தார். அங்கே ..................
சட்டம்பி, ஒரு கத்தியை எடுத்து, கல்லில் வைத்து கூர் தீட்டி கொண்டிருந்தான். அதை பார்த்த பீட்டருக்கு வெலவெலத்து விட்டது.
சட்டம்பி, கொக்கு பறந்து போனா என்ன, ஒரு காலோடயோ, இல்ல ரெண்டு காலோடயோ இருந்தா என்ன ...... இருக்கறத சாப்பிட வேண்டியதுதான்.
நீ வந்து இருக்கறத போடு, நான் சாப்பிடுறேன்.
சட்டம்பி சொன்னான், துரை, நான் அங்க வந்தா, நீ என்ன போட்டாலும் போட்டுடுவ. அதனால, நான் உனக்கு இங்கேயே போடறேன்னு சொல்லி, ஒரு கைல அந்த கத்திய எடுத்துக்கொண்டு துரையை துரத்த, துரை திரும்பி வந்து தன் பங்களாவுக்குள் ஒளிந்து கொண்டான்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக