பக்கங்கள்

ஆச்சி படுக்காளி அழிச்சாட்டியம் 15/03/09


காலையிலே காரசாரமாய் ஒரு விவாதம்.
வியாபாரம் போலே ஒரு பேரம்.
"என்னை நாளைக்கு கோவிலுக்கு கூட்டிட்டு போவியா மாட்டியா"
"நான் என்ன சாத்தானா, கோவிலுக்கு வேண்டாமுன்னு சொல்றதுக்கு"

விஷயம் வேற ஒண்ணும் இல்லை. படுகாளிக்கு பன்னிரெண்டு வயசு, சைக்கிள் ஓட்ட ஆரம்பிச்சுட்டான்,
ஆச்சி வைத்து சூப்பரா டபுள்ஸ் அடிக்கிறான்.

"ஆச்சி முதல்ல உக்காருங்க, காலை நீட்டுங்க, மடியை காட்டுங்க, நான் படுக்கட்டும், நம்ம பேசி ஒரு முடிவு பண்ணுவோம்”
வேறு வழி இல்லாது, சிரமப்பட்டு சிரிப்போடு உட்கார்ந்து "வாய வைச்சு பொழைச்சுக்குவேடா” என்று ஆசிர்வாதமாய் சொல்லி கொண்டே கால் நீட்ட, படுக்காளி நான் சந்தோசமாய் படுத்தேன்.


"எட்டணா குடுத்துருங்க வீட்டு வாசல்லே இருந்து கோவில் வாசல் வரைக்கும் அலுங்காம குலுங்காம கொண்டு விடுறேன்"
"பஸ்சிலே போனாலே நாலாணா தான, உனக்கு எதுக்கு எட்டணா குடுக்கணும்"

"பஸ்சுக்கு போனா காத்திருக்கணும், எப்போ வருமுன்னு தெரியாது, உக்கார இடம் கிடைக்குமா அதுவும் தெரியாது, வேர்த்து விரு விருத்து, ஓவ்வொறு ஸ்டாப்லயும் நின்னு நின்னு போகணும்”
"அட போடா பஸ்சிலே நல்ல மெத்து மெத்துன்னு உக்காரலாம், உன் வண்டியிலே கம்பி குத்தும்.சரி உனக்கும் வேண்டாம் எனக்கும் வேண்டாம் 10 பைசா தாரேன்”
"அதெல்லாம் முடியாது. சிலு சிலுன்னு காத்து வரும்முல அதை பாருங்க, உங்களுக்காக 30 பைசா குடுத்திருங்க, மேட்டர முடிச்சுருவோம்”

அரை மனசோட, பொக்கை வாய் சிரிப்போட "பெரியாளானா பெருசா வருவேடா" என்று ஆச்சி எழுந்திரிக்க - புளிப்பு முட்டாய் வாங்கி ஒண்ணு நான், இன்னொன்னு ஆச்சிக்கு குடுத்து ஜாலியா வண்டியிலே போகலாம் என்று தயார் படுத்திகொண்டு படுக்காளியும்.


இன்று விற்பனை பிரிவில் வாழ்கை எனும் வண்டி ஓட்ட என்னை தயார் படுத்திய நிகழ்வுகளை திரும்பி பார்கிறேன். Phasing, striking balance, firming your stand, understanding need, highlight service capability, demanding premium, create objections to objectives என்ற கோட்பாடுகளை எளிமையாக கற்று கொடுத்து இருக்கிறார் என் ஆச்சி. நன்றி

1 கருத்து:

  1. rendu pulippu muttaai வாங்க இந்த pudukkaali panniya azhichchaattiyam, besh besh, piramaadham என்று engalai சொல்ல vaiththathu (தல அந்த kaalaththulaye kalekshan king போல...pinna aachi kittaye vasool pannittaarey?).

    padukkaaliyin settaigal migavum suvaarasiyamaaga ulladhu. thodaravum.

    பதிலளிநீக்கு