பக்கங்கள்

ராவணன் – திரை விமர்சனம்

‘கோபம் கூட அன்பின் அம்சம்’
மிகவும் பிடித்த இயக்குனர் என்றதால் இப்படி பொத்துகிட்டு வந்திருச்சு. என்ன செய்ய பூசி மெழுகி உணர்ச்சிய மறைக்க முடியல.... சாரி, மணி சார்.


தமிழ் சினிமாவை மாற்றி அமைத்த இயக்குனர்களில் மணி ரத்னம் ஒருவர். அவரது பகல் நிலவு படத்தில் பளீர் என காமெரா, கவிதை போல் மிளிர்ந்தது, இயல்பான நடிப்பு, இசை துல்லியம் போல் காட்சியின் எடிட்டிங் என புது அனுபவம் தந்தது. அக்னி நட்சத்திரம் படம் A சென்டர் B C சென்டர் என்ற பாகுபாடுகளை உடைத்து எல்லோரையும் ரசிக்க வைத்தது.

நாயகன், அஞ்சலி, தளபதி, ரோஜா பம்பாய் என அடுத்தது அதிரடியாய் முன்னேற்ற்றம் தர நாமும் ரசித்து மகிழ்ந்தோம்.

நீண்ட நாட்கள் உழைத்து அவர் எடுத்த ராவணன் ரீலீஸ் என்றதும் எக்ச்பெக்டேஷுன் எகிறித்தான் போச்சு . ஆனால் எதிர்பார்ப்பை ஈடு கட்டாமல் பலவீனமா பரிதாவமா பல் இளிக்குது ராவணன்.

இது இராமாயண கதை என எல்லோரும் சொல்ல, மணிரத்னம் மட்டும் பிடிவாதமா இல்லவே இல்லை, ஒரு சில அம்சங்கள் மட்டும் இருக்கலாம் என சப்பை கட்டு அறிக்கை எல்லாம் விட்டு கேலி கூத்தாய் இருக்குது. இதில போதாகுறைக்கு 'படம் தொடங்கும் போது இக்கதையில் வரும் பெயர்கள் யாவரையும் குறிபிடுவன அல்ல என காமெடி கிச்சு முச்சு வேறு உபரியாய்.
ஸ்டெப் பிரதர்ஸ்குள்ள சண்டை எனும் ஒற்றை வரி கதை தானே அக்னி நட்சத்திரம். இதயத்தை திருடாதே என்ன, சாவு நிச்சயம் ஆன இருவருக்கு காதல் அவ்வளவு தானே.

மிஸ்டர் டைரக்டர் நேரடியாய் கேட்கிறேன், இது போல் வேறு ஒன் லைனெர் இல்லாமலா போனது. அடிச்சு புடிச்சு காப்பி தான் அடிக்கணுமுன்னு என்ன இருக்கு. இப்ப வேற ராமாயணம் மகாபாரதம் முடிஞ்சு போச்சு. இனி சீவக சிந்தாமணிய சீண்டாம சிம்ப்ளா யோசிங்க சார்.
ஏன் இந்த இரவல் எண்ணைகள்.

உங்கள் தனித்துவம் என்ன. ஒற்றை சொல் வசனங்கள். தங்கள் முந்தைய திரை படத்தில், காதல் வெளிபடுத்தும் நாயகன் நாயகியின் வசனம் பாருங்கள் கீழே

அவன் : நெஞ்செல்லாம் அடிச்சிக்குது !!!
அவள் : ஏன் .....

அவன் : தெரியல .....

அவள் : எனக்கும்

அவன் : நிசமா ???

வசனம் எல்லாம் இல்லாம கவிதை போல் எனக்கு மனித உணர்வுகளை படம் பிடிக்க தெரியும் அது தானே உங்கள் பலம்.

மௌன ராகத்தில் நாலு பேர பின்னால நடக்க விட்டு டக் டக்குனு கார்த்திக் நடந்து அறிமுகம் ஆவர். அப்படி ஒரு அப்பில் இருந்துச்சு. ஆஹா இது தான் ஹீரோ என தோணுச்சு. அதுக்கபுறம் கமல் நாயகன்ல நடந்தார், அப்புறம் ரஜினி இப்ப நம்ம குருவி. இப்படி இருவது வருசத்துக்கு முந்தி, காலம் கடந்த தங்கள் ஐடியாஸ் எங்கே.

இதயத்தை திருடாதே வில் ஓடிபோலாமா என நக்கல் நையாண்டி செய்யும் துரு துருப்பு இளமை துள்ளல் எல்லாம் எங்கே. பெண் பார்க்க வந்தவனை வழி மறித்து உடம்புக்கு உண்ணும் குறை இல்லையே என கிழவிகள் கேட்க, அவரை அலேகாய் தூக்கும் இனிமை எங்கே, ராஜா ராஜாதி ராஜன் இந்த ராஜ என கனவுலக்கு சென்ற காமெரா எங்கே.

இதயத்தை திருடாதே படத்தில் ஒரு சவாலான காட்சி. குளிரும் ஊட்டி, பூட்டிய ஒரு நீண்ட அறையில் ஒரு ஓரத்தில் நாயகன் திரும்பி நின்று கொண்டு இருக்கிறான், மறு முனையில் வந்தவர் கதவு திறந்து ஏதும் பேசாமல் நிற்க, திறந்த கதவு வழியே நுழைந்த குளிர் காற்று பட்டு, கூப்பிடாமலே நாயகன் திரும்பி பார்கிறான். வசனங்கள் இல்லாமல் காட்சியாய் இதை புரிய வைப்பது எப்படி. செய்திருப்பார் நம்ம மணி. அது தான் மணி.
ராவணனிலும் அது போல் ஒரு காட்சி.
லோ ஆங்கிளில் காமெரா ஜூம் ஆக தொடங்குகிறது. பிரேமில் மிதவை தெப்பத்தின் முன் விக்ரம் உட்கார்ந்திருக்கிறார். ஜூம் துவங்கிய ஓரிரு நொடியில் மிதவை தெப்பம் அவுட் ஆகி மறைகிறது. இப்பவும் ஜெர்க் எதுவும் இல்லாமல் காமெரா ஜூம். சட்டென விக்ரமும் பேடே அவுட். சட சடவென மழை.... அதிரடி படை வீரர்கள் ஓடி வருகிறார்கள். மொத்தம் 6- 8 செகண்ட் வரும் காட்சி இது.

அதாவது, சே... இவ்வளவு நேரம் இங்க தான் இருந்தான், இப்ப,,, இப்ப.... தான் போனான். அதிரடி படை வருவதற்கு சற்று முன் தான் விக்ரம் மிதவை தெப்பத்தில் தப்பித்து விட்டான் என்பதை வசனம் இல்லாமல் கவிதை போல் சொல்லுகிறது.

காமிரா சூப்பரு, லோககேஷுன் சூப்பரு... பிரமாதமுன்னு சொல்ல நாங்க என்ன குழந்தைகளா . இதை விட அடர்ந்த காடும் மிருகங்களும் காட்ட டிஸ்கவேரி சேனல் அனிமல் பிளனேடும் வீட்டுலேயே இருக்கு.

காட்டுக்குள் கடத்தி சென்றவனிடம் நாயகிக்கு தோன்றும் உணர்ச்சி என்ன ???? அன்பா, அக்கறையா, பாசமா, நெசமா, நிச்சயமாய் எல்லோரும் தப்பாக நினைக்கும் காதல் இல்லை என நம்புகிறேன். நம்பிகிட்டே இருந்தேன் ஆனாலும் என் நம்பிக்கையில் மண் விழ, ஒரு சண்டை கம் ஸ்பரிச உணர்ச்சியில் ஒரு பாட்டு ஒண்ணும எடுத்து ஏமாத்தி விட்டீர்களே ஐயா.

குடுத்தனம் பண்ற மனைவி, புருஷன் காரன் சொன்ன ஒரு சொல்லுக்காக (லை டிடக்டர் டெஸ்ட் செஞ்சுக்கணுமுன்னு) ரயில நிறுத்தி எவன் கூடயாவது போற மாதிரியா நம்ம கலாச்சாரம் இருக்குது. சே... சே... சேம் ஆன் யு சர்.

எங்க நம்ம ஆஸ்கர் தம்பி, வேலை செய்யாம ஒப்பி அடிச்ச சேட்டைக்காரன். பாட்டும் சரி பின்னணி இசையும் சரி எங்கையோ பக்கத்து தியட்டர் மிசிக் மாதிரியே இருக்குது.

விக்ரம், ஐஸ்வர்யா, கார்த்திக், பிரபு என ஒரு பட்டாளத்தையே வீணாக்கி விட்டிர்கள். பெட்டர் லக் நெக்ஸ்ட் டைம்.

2 கருத்துகள்:

  1. ஆஹா...

    இத கண்டி மணி படிச்சார்னா... அப்படியே ஆத்திரத்தோட ஒங்கள தேடி வந்து (நீங்க துபாய், ஷார்ஜா எங்கன இருந்தாலும்) நாலு சாத்து சாத்தறது கேரண்டிங்கறா மாதிரியே விமர்சனம் எழுதி இருக்கீயளே...

    படத்தோட மொத சீன்ல விக்ரம் அம்புட்டு ஒசரத்துல இருந்து தண்ணிக்குள்ள குதிக்கறாரு... மேல வந்துடறாரு... ஆனா, அப்போ உள்ளார போன படம் மட்டும் கடைசி வரைக்கும் மேலயே வரலீங்கோங்கோ... அது மட்டும் தான் மிஷ்டேக்கு படத்துல... வேற எல்லாம் ஓகேங்கோ...

    படத்துல எனக்கு புடிச்சது அனுமார் வேசத்துல கார்த்திக் ஜூப்பரா நடிப்பு காட்டியிருக்காரே, அதாங்கோ..

    அனுமார் வேசம் போட்டதால மொத சீன்ல போர்ட் மேல, அங்கன இருந்து மரத்து மேலன்னு தாவுனாரு பாருங்க... நெசமாவே மரத்துக்கு மரம் தாவற குரங்கு கூட இந்த மனுசன் தாவறத பார்த்து பொறாமைப்படற மாதிரி அப்படி ஒரு தாவு.. என்ன, நமக்கு தான் அதை படம் முச்சூடும் பாத்து, தாவு தீந்து போச்சு...

    ஒரு சீன்ல பல்லு தேய்க்கறாரு... பாறை மேல குத்தி உக்காந்து, அப்படியே போஸ் குடுக்கறாரு...

    சரியா காணிச்சு இருந்தா, வாலு இருந்ததான்னு பார்த்து இருக்கலாம்... ம்ம்ம்ம்....

    இன்னொரு சீன்ல பிரபு, கார்த்திக் ரெண்டு பேரும் வராங்க... அப்ப ஏனோ, அக்னி நட்சத்திரம் படம் ஞாபகம் வந்துச்சி... மனசு என்னவோ போல ஆயிடிச்சு...

    ஆனா ஒண்ணுங்க... மணி போல டைரடக்கரு படங்களே இப்படி பாக்க முடியாத அளவுக்கு இருந்தா, இனிமே நாம பாக்கணும்னு நெனச்சா வரப்போற படங்க எல்லாம் பேரரசு, சுந்தர் சி, மாஞ்சா வேலு, குருவி நடிச்சதுங்க...

    எப்படி..... இதை நெனச்சாலே ஒதறுதுல்ல....

    பதிலளிநீக்கு
  2. //// ஆஹா...இத கண்டி மணி படிச்சார்னா... (நீங்க துபாய், ஷார்ஜா எங்கன இருந்தாலும்) நாலு சாத்து சாத்தறது கேரண்டிங்கறா மாதிரி எழுதி இருக்கீயளே... ///

    அந்த பயத்திலே தான் 'அன்பின் அம்சம் கோவமுன்னு' உலை வைச்சேன். வேகலையோ ???? , அட்ரஸ் கொடுத்துராதிங்க ஜி!!! உடம்பு தாங்காது.

    /// படத்தோட மொத சீன்ல விக்ரம் குதிக்கறாரு... மேல வந்துடறாரு... ஆனா, படம் மட்டும் கடைசி வரைக்கும் மேலயே வரலீங்கோங்கோ... அது மட்டும் தான் மிஷ்டேக்கு படத்துல... வேற எல்லாம் ஓகேங்கோ... ////
    அப்பவேவா... முதல் சீன்லயே முடிஞ்சு போச்சா ....

    //// படத்துல புடிச்சது அனுமார் வேசத்துல கார்த்திக் ஜூப்பரா மரத்து மேலன்னு தாவுனாரு பாருங்க... பாத்து, தாவு தீந்து போச்சு... பாறை மேல குத்தி உக்காந்து பல்லு தேய்க்கறாரு, வாலு இருந்ததான்னு பார்த்து இருக்கலாம்... ம்ம்ம்ம்..../////

    என்ன கொடுமை ஜி!!!

    //// பிரபு, கார்த்திக் ரெண்டு பேரும் வராங்க... அப்ப ஏனோ, அக்னி நட்சத்திரம் படம் ஞாபகம் வந்துச்சி... மனசு என்னவோ போல ஆயிடிச்சு...////

    //// மணி போல டைரடக்கரு படங்களே இப்படி இருந்தா, இனிமே நாம பாக்கணும்னு நெனச்சா பேரரசு, சுந்தர் சி, மாஞ்சா வேலு, குருவி நடிச்சதுங்க...எப்படி..... இதை நெனச்சாலே ஒதறுதுல்ல.... ///

    யம்மாடி.... ஆத்தாடி ...

    வந்து பின்னூட்டம் இட்டதற்கு மிக்க நன்றி.

    பதிலளிநீக்கு