பக்கங்கள்

ரேடியோவில் எனது நாடகம்

தீபாவளி ஸ்பெஷல்… சென்னை ஆல் இந்தியா ரேடியோவில் எனது நாடகம் ஒலிபரப்பாகிறது.

நாடகம் எதைப் பற்றி…


இந்த நாடகம் எழுத என்னை தூண்டியது இந்த தகவல்தான்… ஆம், எம்.ஜி.யார். காலத்து தகவல்கள்….
  • 1.   தன் வீடு – இயற்கையாக இருக்க வேண்டும். சுற்றி தோட்டம் அமைத்து, மிகப்பெரியதாக இருக்க வேண்டும். நகரத்தின் வாசனை இல்லாமல், அழகிய சூழ் நிலையில் தூரமாய் இருந்தாலும் பரவாயில்லை…. ஊருக்கு வெளியே பெரியதாக இருக்க வேண்டும் என அவர் தேர்ந்தெடுத்த இடம் … ராமபுரம். அன்றைய சென்னையில் சைதாப்பேட்டை தான் சிட்டி…
  • 2.   சென்னை செண்ட்ரல் ரயில் நிலையத்துக்கும் – அழிந்து போன மூர் மார்கெட்டும் இடையில், சென்னை மிருகக் காட்சி சாலை இருந்தது. நகரின் மத்தியில் இருந்ததால், மாசு பட்ட சூழலில் மிருகங்கள் இறக்க நேரிட்டது. எனவே, எம்ஜியார் ஊருக்கு வெளியே வண்டலூரில் மிருகக் காட்சி சாலை அமைக்க திட்டமிட்டார்.

என்னது… மிருகக் காட்சி சாலையா…. ஊருக்கு வெளியேயா….????? அதுவும் 30 கி.மி. அந்தப்பக்கமா… ….????? காட்டுக்குள்ள வைச்சா பொது மக்கள் எப்படிப் போவாங்க என விமர்சனங்கள் எழுந்தன. அவர் தீர்மானமாய் வண்டலூரில் அந்த குன்றுகள் சூழ்ந்த காட்டையே தேர்ந்தெடுத்து மிருகக் காட்சி சாலை அமைத்தார்…

இன்று…

ஒரு ஐம்பது வருடத்தில்.. என்ன ஆச்சு.. ராமபுரம் சிட்டி செண்டர்.. வண்டலூரில் பேருந்து நிலையம் அமைக்க திட்டம். இப்படி, நகரம் விரிந்து பரந்து விட்டது. நம் தேவைகள் அப்படி.
அன்றைய வீடுகளைப் பாருங்களேன்.. குறைந்தது ஒரு ஒன்றரை கிரவுண்டு.. சுற்றி இடம். மரங்கள் செடிகள், கிணறுகள். ஆனால் இன்று..
அடுக்கு மாடிக் கட்டிடங்கள் அல்லது தனி மனையா.. அரை கிரவுண்டில் வீடு என சுருக்கிக் கொண்டாலும் கூட நம் தேவைகள் நிறைவு பெறவில்லை..

சரி, இன்னும் ஒரு ஐம்பது வருடத்தில் என்னவாகும்… ????

100 வருடத்தில்… ????

நம் தேவைகளும் பெருகுமல்லவா .மேலும் இது வெறும் நிலம் குறித்தது மட்டுமல்ல. இன்னும் நம் மனிதர்களுக்கு அவசியமான நீர், காற்று, மண் வளங்கள், போக்குவரத்து.. இப்படி எத்தனை எத்தனையோ…

50 வருடத்துக்கு முன் அமைத்த நம் திட்டங்களும் தேவைகளும் இன்று புதிய பரிமாணத்தில் இருப்பது உண்மை.. நிதர்சனம். நாம் எதிர்பார்ப்பதை விட காலங்கள் வேகமாக சுழலுகின்றன..

இன்று பாருங்களேன்.. காற்றின் மாசு அளவை சொல்லி.. இதோ வெடி வெடிக்க நீதிமன்றம்  - நேரம் குறித்து நிர்பந்திக்கிறது…

இயற்கை சூழலின் இன்றைய நிலையை அடிப்படையாக்கி அறிவியல் புனைவு எனும் விதத்தில் - கற்பனைத் தேரில் ஏறி,  பொழுதுபோக்கு அதிரடி நாடகம் எழுதியிருக்கிறேன். 

அந்த ஒலிச்சந்தி கையில் கிடைத்ததும், பதிவேற்றுகிறேன்.


சென்னையில் வாய்ப்பு இருப்பவர்கள்- நேரலையில் கேட்டு மகிழலாம்.. நன்றி வணக்கம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக