பக்கங்கள்

இந்த உலகத்திலயே இல்ல…

குமாரு பிறந்தவுடன் அம்மா சொன்னாள்…. 
ஏன் புள்ள எம்புட்டு அழகு. 
அவன மாதிரி அழகு……. இந்த உலகத்திலயே இல்ல… 





படிக்கப் போன போது… 
ஆசிரியை சொன்னார்….
ஏலே…. பாடத்த கேக்காம அங்க என்ன செய்யுற… நீ இந்த உலகத்திலயே இல்ல


சில வருடங்களுக்கு முன், குமாரை சந்தித்த போது அவனே சொன்னான்…
டே…ழேய்……….. மச்சான்…. செம போதை … நான் இந்த உலகத்திலயே இல்ல…






இன்று அஞ்சலி சுவரொட்டியில் வாசகம் சொல்கிறது……..
குமார்……. இந்த உலகத்திலயே இல்ல……





டாக்டரின் மருத்துவ அறிக்கை சொல்கிறது………….
குமார் அதி தீவிர போதை பழக்கம், இந்த உலகத்திலயே இல்ல………….

                                                                                                                     நன்றி………. டாஸ்மாக்….



2 கருத்துகள்: