பக்கங்கள்

“ஹாய்..! என்றாள் என் தாய்…!”

இன்று காலை…
விடிந்ததும் 
வெளியில் வந்து சாலையை பார்த்தேன். 
ரோடு புகை பிடித்துக் கொண்டிருந்தது. 

பக்கத்து வீட்டு ஐயப்பன், 
குப்பைகளை கூட்டி, தீ வைத்திருந்தார். 
காய்ந்த இலை சருகுகள், 
தீயின்றி, 
புகை மட்டும் பரப்பிக் கொண்டிருந்தது. 
காரணம் தென்றல்.

மனம் சட்டென பதறியது. 
டால்மேஷியன் எங்கே?.. 

எங்கள் வீட்டு தெரு நாய், 
ஒரு வாரம் ஆகிறது 
இரண்டு அழகிய குட்டிகள் பெற்று. 

ஒன்று பார்ப்பதற்கு 
டால்மேஷியன் ஸ்டைலில் இருப்பதால்.. 
நானே வைத்த பெயர் 
டால்மேஷியன். 

அதனிடம் இன்னும் சொல்லவில்லை,
இன்றும் சொல்லவில்லை…  
இன்றாவது அதை சொல்லிவிட வேண்டும்.
அதன் பெயர் டால்மேஷியன்.. என்று…!!!

டால்மேஷியன் எங்கே… 
பஞ்சு கால்களும்
பிஞ்சு பாதங்களும் 
நடை பழகாத இடுப்பும்,… மை காட், 
மனம் ஏனோ பதறியது.. 

கண்கள் அங்குமிங்கும் அலைய 
ஆட்டோவுக்கு கீழ், 
செடிகளின் உள்ளே என தேடினேன்… 
சில வினாடிகள் மட்டுமே. 

ஆம், 
சில வினாடிகள் மட்டுமே.

சட்டென மனம் சொன்னது 
“டேய்!.. தீய பாத்தா.. அதெல்லாம் ஓடிறும்..” 

”ஆமாயில்ல..!” 

என்று மனம் மனதிடம் பேசி சொன்னது.. 
நான் இலகுவானேன்.. 
அடுத்த வேலையைப் பார்க்க ஆயத்தமானேன்…

ஆனால்…

“ஹாய்..! என்றாள் என் தாய்…!” 
என் தமிழ்த்தாய், 
என் உணர்வுகளில் கலந்திட்ட என் தாய், 

அடுத்த வீட்டு ஐயப்பன்… 
எரியாத தீ… 
காணாத டால்மேஷியன்.. 

என அடுக்கடுக்காய் அடுக்கிய என் சிந்தனையும் 
அதனால் விழைந்த 
என் உணர்வுகளும் 
உணர்ச்சிகளும், 
என் தாயின் வரவால்.. 
வார்த்தை 
எனும் வடிவம் பெற்றது.

என் தாய்.. 
வலியே இன்றி….
ஒரு குழந்தையை ஈன்றாள்… 
உணர்வும் உணர்ச்சியும் - ஒரு வடிவம் பெற்றது.. 

அதை கவிதை 
எனச் சொல்லும் துணிவு இல்லை.. 
என்றாலும், 
பகிர வேண்டும் 
எனும் துணிவு மட்டும் இருக்கிறது.

இதோ..
அன்புடன் அதை, பகிர்ந்து கொள்கிறேன்…






கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக