எனக்கு கவிதைகள் மேல் ஒரு
சிறு கோபம் உண்டு்…..

கவிதை மேலுள்ள கோபத்தில் கவிதையை
திட்டி கவிதை எழுதினேன்….
கவிதை கண் ராவி
கவிதை கண்ணாடிகள் போல....... முன் வந்து நிற்கும் உருவம் காட்டும் முகமூடி.......
மொட்டை வார்த்தைகளை மொட்டாய் பூக்கும் பூச்செடி
நம்மில் இருந்து அர்த்தத்தை களவாடும், அற்புத விளக்கு பூதம்........
ஓஹோ… கவிதைகளில் இப்படி ஒரு அவஸ்தை இருக்கிறதோ….. ஒவ்வொரு வாசகருக்கும்... கவிதைகள் பிரதிபலிக்கும் அர்த்தம் வேறு வேறாய் இருக்கிறதோ… ஆங்… கட்டுரைகள் செல்லக் குட்டிகள்: என்ன ஆசிரியர் சொல்கிறாரோ, அதை அப்படியே பிரதிபலிக்கும் என நான் கருதியதுண்டு.
கதைகளை கட்டுரையின் குடும்பம் (சேம் ஃபேமிலி) என நினைத்திருந்தேன்… அவை வேற்று சாதி என்பது எனக்கு நேற்று புரிந்தது….!!!!
கதைகள் கூட பூனை போல், புனைவுகளை பிரசவிக்கும் என இப்போது தெரிந்து கொண்டேன்….
சமீபத்தில் எழுதிய தனிமை கதை
எதை பற்றி பேசுகிறது என இரு கருத்துக்கள் சொல்லப்பட்டன, ஆனால் அவைகள் நான் நினைத்தவை
அல்ல…. !!!! இந்த தனிமை கதையின் ஒற்றை வரி என்னவோ என கேட்ட போது, இரு கருத்துக்கள்
வந்தன…
1.
இக்கரைக்கு
அக்கரை பச்சை… இருப்பதை விட்டு விட்டு பறப்பதை பிடிப்பது என ஒற்றை வரி தாக்கமாக ஒருவர்
சொல்ல
2.
சம்சாரத்துக்கும்,
சாமியாருக்கும் நடக்கும் போராட்டத்தில், சம்சாரம் வெல்வதாக இன்னொரு தாக்கமும் சொல்லப்பட
…..
நான் கொஞ்சம் திகைத்தேன்… மேற்கூரிய இரண்டுமே மிக நல்ல கருத்துக்கள், ஆம், இக்கதையின் கொள்வுகளாக கொள்ளக்கூடியது என்றாலும் நான் சொல்ல வந்ததை, தெளிவாக சொல்லி விடலாமே என அமர்ந்தேன்…
நான் சொல்ல விளைந்தது……..
Breathing space பற்றி………….
இது ஒரு நுண்ணிய விஷயம். இதை
புரிந்து கொள்ளவும், தெளிந்து கொள்ளவும் மிகுந்த அவசியம் இருக்கிறது… அதிலும் குறிப்பாய்
உறவுகளிடத்தில் உரசல்கள் ஏற்பட முக்கிய காரணி இந்த Breathing space தான்.

அன்பு அமைதியானது,
ஆர்ப்பாட்டம் இல்லாதது, ஆக்கபூர்வமானது….. அது அடுத்தவரை உரிமைப் படுத்த நினைக்காது… ஒரு மௌனம்,
ஒரு பேசாத வார்த்தை இவைகள் தான் அன்பின் அடித்தளம்.
எனக்காக நீ
அழலாம், இயற்கையில் நடக்கும், ஆனால் எனக்காக உணவு உண்ண எப்படி நடக்கும் …………
உறவில் வெகு
ஜன பிரச்சனையே இதுதான்… ஏன் எங்கிட்ட சொல்லல, ஏன் எங்கிட்ட மறைச்ச என நம் எதிர்பார்ப்புக்கள்
அத்துமீறலையே பிரசவிக்கின்றன. அன்பை பிரதிபலிப்பதில்லை. சொன்னத கேட்டுட்டு, ஜடமாய்
இருப்பது அல்ல உறவு.
ஆனால் நம்மில்
பலர், காஸ்ட்ட்லி எல்.சி.டி. மாதிரி காட்டிக் கொள்ள ஒரு பொம்பள, எனும் ரீதியில் தான்
பெண்டாட்டியை நடத்துகிறது.
இக்கதையில் வரும் நாயகன் நாதன்,
மூச்சு விட….!!!! நேரமில்லாமல் உழைக்கிறான். தன்னுள் ஆழ சென்று, தன் சுய விருப்பு வெருப்புக்களை
அவதானிக்க முடியாமல் தவிக்கிறான். அதனாலேயே அதில் அன்னியத்தை உணர்கிறான். அந்த அழுத்தத்தில்
தன் அடிப்படையை உரசுகிறான்.

அப்படியென்றால் அவன் தேவை
என்ன… அவன் விரும்புவது எதை… தனிமையை… தன்னுள் சென்று தனக்கு இதமானது எது.. தான் விரும்புவது
எது என கேட்பதை… அபாயகரமாக, அவனுக்கு இந்த சமூகம் அதை தரவில்லை.. அதனாலேயே ஓடி ஓடி
எதையோ தேடுகிறான்… அவனுக்கு தேவையானது அவனது வீட்டிலேயே அலங்கரிக்கப்பட்டு இருக்கிறது…
என்ன ஒரு அசௌகரியம்… அது அவனுக்கு கைக்கு அருகில் இருந்தும், சுயம் விளக்கம் கிடைக்காததால், அர்த்தம் கிடைக்கவில்லை… என அலைகிறான்.
உறவுகள் தான் நம்மை உலவ வைப்பது, உழல வைப்பது. தன்னைப் போல, உறவில் தெளிவு கொண்டு, துணை தேடும் அந்த திரு நெல்வேலி அண்ணாச்சியில் தெளிவு பெறுகிறான் என கதை அமைத்தேன்...
மனித இயல்பு என்றும் மாறுவதில்லை…
ஹா…ஹா…. உண்மை இதுதான்…. கூடி
வாழும் இயல்பினனே மனிதன்……….. எக்காரணத்தை சொல்லியும், தனிமை தேடுபவன் மிருகமே……….. நிரந்தர தனிமை தேடுபவன் மிருகமே... அது என்லைட்மெண்டே ஆனாலும் கூட……………..!!!!! போ.. தனியாக போய், தனக்குள் இரு... பின்னர் வா என்பதே மனித வாழ்க்கை என்பது என் ஸ்கூல் ஆப் தாட்...
சுய தேடல் மறுதலிக்கப்படும்
போது, மதம் கொள்ளும் மடமை நம்முள் இருக்கிறது…. அது தவறான சில தாக்கிதுகளை சொல்கிறது.
சரி…… இப்போதாவாவது நான் சொல்ல
நினைத்ததை சொன்னேனா… அல்லது… குட்டையை இன்னும் குழப்பி விட்டேனா….
யப்பா….. முடியல… இப்பவே கண்ண
கட்டுதே………………………….. குட்டை குளப்பி குட்டையை குளப்பி........ மீன் கண்டு பிடித்து...... சரியாக மீன் பிடிக்கும் போது, அது கை நழுவி செல்வதை சொன்ன கதையே கீழ்க்காணும் சல்ஃபா கதை...
நம் ஆளுமையை தீர்மானிக்கும் கருத்துக்கள்..... நம்முள் கருதுகளாகத்தான் நுழைகின்றன.... இந்த கருதுகள் எந்த சூழலிலும், எந்த காலகட்டத்திலும் தலை குப்புற வீழும் சாத்தியங்கள் இருப்பதால்... நாம் மாறத்தயாராய் இருக்கிறோமா.... மாற்றத்தை உடுத்தி கொள்ள ரெடியா என்பதே சல்ஃபா...