பக்கங்கள்

வானொலி நாடக அனுபவம்

வானொலி நாடகம் என்பது கலையின் தனி வடிவம். ஊடகத்தின் ஒரு உட்பிரிவு. அதற்கு கதை வசனம் எழுதுவது ஒரு விதமான சவால். ஏனெனில் எல்லா விஷயங்களையும் வசனமாகவே சொல்ல வேண்டும்.

ஒரு கிராமம் என்பதை …… திரைப்படமாக, காட்சியாக சொல்லும் போது, 20 வினாடிகளில் ஒரு குளம், ஒரு வயல், ஒரு வீடு என படம் பிடித்து…. மிகவும் எளிமையாக சொல்லி விடலாம்.

அதே கிராமத்தை…. கதையாக எழுதும் போது, இரு பத்திகளில் வரிந்து வரிந்து எழுதி விடலாம்… ஆனால் ஒரு கிராமம் என்பதை வானொலியில் வெறும் ஒலியாக சொல்லும் போது…………. ஹூம்…. கொஞ்சம் கடினம் தான்…. என்ன செய்யலாம்….. முன்னுரை ஒன்றை அமைக்கலாம்…. எப்படி… ’பச்சை புல் போர்த்திய வயல்களும் நீர் நிறைந்த குளங்களும் அடங்கிய ஒரு அழகிய கிராமமே நம் கதை நடக்கும் ஊர்………. ‘ என சொல்லலாம்…..


முன்னுரை என பிண்ணனிக்குரலாக ஒலிக்க செய்வது ஒரு மிக பழைய உத்தி, அதுவும் இல்லாமல் வீரியம் குறைந்த ஒரு அணுகுமுறை. வேறு வழியே இல்லாத போது முன்னுரை எனும் உத்தியை வைக்க வேண்டும், இல்லாமல் அதை தவிர்த்து, கேட்கும் நேயர்களின் மனதில் இந்த கிராமத்தை எப்படி காட்சியாக வரைவது என எப்போதும் சிந்திப்பேன்… முயலுவேன்….

காட்சிகள், பின்புலங்கள் மாத்திரம் அல்ல….. கதாபாத்திரங்களுக்கும் இதே சவால்தான்.

பேசுவர் யார், அவரின் குணாதிசயம் என்ன, அவர் யாருடன் உரையாடுகிறார், அவருக்கும் இவருக்குமான உறவு என்ன, எங்கே பேசுகிறார்கள் வீட்டிலா ரோட்டிலா, எப்போது பேசுகிறார்கள் பகலிலா அல்லது இரவிலா என எல்லா பரிமாணங்களையும் வசனங்களில் சொல்ல வேண்டும். உதாரணத்துக்கு கீழுள்ள உரையாடல்களை கவனியுங்களேன்.


( காலிங் பெல் ஒலி…………………………….. )
பெண் குரல்
வர்றேன்...வர்றேன்... ஆபிஸ் போயிட்டு வந்தா, இவ்வளவு என்ன அவசரம்... (கதவு திறக்கப்படும் ஓசை) .... அதான் வர்றேன்ல… அதுக்குள்ள என்னங்க….
ஆண் குரல்
எங்க இவ்வளவு நேரம்….
பெண் குரல்
பின்னால துணி காயப் போட்டுக்கிட்டு இருந்தேன்…
ஆண் குரல்
ஓ….. சரி…. புள்ளைங்க எங்க
பெண் குரல்
ரெண்டும் டியூஷன் போயாச்சு…
ஆண் குரல்
ஓஹோ… சின்னவளுக்கு இருமல் இருந்துச்சே… அப்படியுமா டியூஷன் அனுப்பிச்ச……

இந்த உரையாடல்களை கேட்டவுடன் 10 வினாடிகளுக்குள் எத்தனை தகவல்கள் வருகிறதென பார்ப்போம்


  • 1.   அலுவலகத்துக்கு செல்லும் புருஷன்…….. அவனுடைய வீட்டுக்கு வருகிறான்
  • 2.   மனைவி – ஹோம் மேக்கர். வீட்டு வேலை செய்து கொண்டு பிசியாக இருக்கிறாள்.
  • 3.   அவர்களுக்கு 2 பிள்ளைகள்
  • 4.   சின்ன பெண்ணுக்கு உடல் சரியில்லை
  • 5.   காட்சி நடப்பது வீட்டில்
  • 6.   காட்சி நடப்பது ஒரு மாலையில்

இப்படி ஒரு உரையாடலின் ஊடே தகவல்களை தர வேண்டும். இயல்பாகவும் இருக்க வேண்டும், சுவாரசியமும் செய்ய வேண்டும், அதே நேரம், கேட்கும் நேயர்களுக்கு எந்த குழப்பமும் இல்லாமல்………. கேள்வியே கேட்காத தெளிவில், விஷயங்களை சொல்ல வேண்டும்.

வசனங்கள் எழுதி முடித்து விட்டு, நாமே ஒரு நேயராக இருந்து கொண்டு, கண் கொத்தி பாம்பாக எல்லாம் புரிகிறதா, தகவல்கள் திணிக்கப்பட்டு செயற்கையாக இருக்கிறதா என கவனமாக பார்க்க வேண்டும். மிகவும் சுவாரசியமான பணி இது.

உதாரணத்துக்கு, ரகசியம் நாடகத்தில், ஒரு குடும்பத்தில் நடைபெறும் புருஷன் பெண்டாட்டியின் பிரச்சனையையே கையாள தீர்மானித்தேன். சரி  சொல்லும் குடும்பமும் சுவாரசியமாய் இருக்கட்டுமே என ஒரு அறிமுக காட்சி எழுதினேன்.

கதையில் சொல்லப்படும் குடும்பத்தை நேயர்களுக்கு பிடிக்க வேண்டும், இல்லையெனில் கதையில் பேசப்படும் பிரச்சனை உணர்வு பூர்வமாக உரைக்காது… அதனால் நேயர்கள் தன்னை தொடர்பு படுத்தி இந்த குடும்பத்துடன் இணைய வேண்டும் என சுவாரசியமாக அமைத்த அந்த காட்சி, இரு குழந்தைகள் டிவி ரிமோட்டுக்கு சண்டை செய்வது போல், தங்களுக்கு பிடித்த நிகழ்ச்சிகள் குறித்து பேசுவது போல், காட்சி அமைத்து எழுதி எடுத்து சென்றேன். கடைசியில் தூரப் போட வேண்டியதாயிற்று. 

ஆம், ஆல் இந்தியா ரேடியோ இயக்குனர் என்னிடம் ‘ சீன் நல்லா இருக்கு, ஆனா சார், குழந்தை நட்சத்திரங்கள் நம் நிலையத்தில் இப்போது இல்லை, எனவே அந்த கதா பாத்திரங்களை தவிர்க்க முடியுமா என்றார்….

‘அதற்கென்ன சார், செய்தால் போயிற்று என காட்சியை மாற்றியமைத்தேன். பிள்ளைகளை……. பாவம்….. டியூஷனுக்கு அனுப்பி விட்டு, கணவன் மனைவியை கல்யாண அனிவர்சரி கொண்டாடும் படி காட்சியை மாற்றி அமைத்து எழுதினேன்…. கணவன் மனைவியின் அன்னியோன்யத்தையும் அன்பையும் கொண்டு, கேட்கும் நேயர்களுக்கு…. பிடிக்கும் விதமாக மாற்றி அமைக்க வேண்டியதாயிற்று.

வானொலி நாடகங்கள் ஒரு வித்தியாசமான தளம். அதன் நிறை குறை அறிந்து உணர்ந்து ரசித்தால் அது தரும் இன்பம் அலாதியானது.

வானொலி நாடகங்கள் இன்று குறைந்து போயின. அதற்க்கான நேயர் வட்டமும் சுருங்கியதாகவே இருப்பது துரதிருஷ்டம்.

ஆடியோ பாட் காஸ்டிங் என மேலை நாட்டில் பிரபலமான இந்த வடிவம் இன்னும் தமிழ் கூறும் நல்லுலகில் மவுசு குறைந்தே உள்ளது. பட்டிமன்றங்கள் என ஒரு சில தோன்றி ஆரம்பத்தில் வெற்றி பெற்றாலும், பின்னர் தொலைக்காட்சியின் புண்ணியத்தில் அவைகளும் கூட இன்று ஒலி ஒளி வடிவத்திலேயே சுணங்கி விட்டது.

எது எப்படியோ…. என்னை வளர்த்த இந்த கலை வடிவம் எப்போதுமே எனக்கு பிடிக்கும். வரும் காலத்தில் ஒலி வடிவ இந்த கலை வடிவம் இன்னும் மேன்மை பெறட்டும் என ஆசிக்கிறேன்.

6 கருத்துகள்:

  1. Ji

    Fantastic.... I really enjoyed reading this post...

    Nicely written and well designed pictures added more beauty..

    My hearty congratulations for your AIR Drama...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. Thank you ji...

      while making that cartoon i only had you in my mind. i know it is a long time that i made some comic cartoons... thanks for the comment.

      நீக்கு
  2. Vow ! Superb.. Well done. Very deep analysis. You have delivered it in your own inimitable style. Keep up your good work with radio dramas. I strongly feel that with FM radio picking up great market share and with lot of people tuning into radio while driving / while at home / while walking and jogging etc., there could be a great future market coming up for Radio and Radio dramas. It is up to people like you to drag the radio dramas from drab family setting to interesting setting. I am sure you and your radio dramas would reach new heights !!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. thank you so much for your comment. i agree to your thoughts on FM radio. you have sharply pointed out on the quality of the present day's radio dramas, and the need to step up on the next level. yes that is right point.

      umm... let us see how best we can contribute in this area.

      நீக்கு
  3. ஒரு நல்ல வாசிப்பு அனுபவத்தை தந்து இருக்கிறது
    தங்களின் வானொலி நாடக அனுபவம்.
    கூடவே..
    இந்த கலைவடிவத்தை முயற்சி செய்துபார்க்கும் ஆர்வத்தையும்.

    நன்றி.

    அன்புடன்,
    இன்பா.

    பதிலளிநீக்கு
  4. தங்களது தளத்தை வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி இருக்கிறேன். முடிந்தால் சென்று பார்க்கவும். நன்றி

    http://blogintamil.blogspot.in/2013/08/blog-post_17.html

    பதிலளிநீக்கு