பக்கங்கள்

சட்டசபை தேர்தல் – 2011

 - தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட போது, சுடச்சுட நடந்த மாஜி மந்திரி கைது, திமுகவுக்கு மிகப் பெரிய சவால். காலம் காலமாக, பூசப்பட்ட ஊழல் சாயம் இன்னும் வண்ணப்பட்டது.

- தேமுதிக வையும் இணைத்து இருமுனை போட்டி, ஆளும் கட்சியின் பலவீனம் என களம் அமைத்ததில் அம்மாவுக்கு சாதகம்.

- என்றாலும் தேர்தலின் வெற்றி வாய்ப்புக்களின் சாதக பாதகம் மாறி மாறி வருவது நமக்கே திணறுகிறது.

- கூட்டணிகள் அமைப்பதிலே இரு கழகங்களும் மூச்சு வாங்கி, திணறியதை பார்க்கும் போது, ஒன்று நிச்சயம் ஆனது. ஒரு தலைமையின் கீழ் தமிழகத்தை கொண்டு வரும் ஆளுமை (எம்.ஜி.ஆர் – மேஜிக்) ஆப்செண்ட் என்பது. அல்லது தனி பலம் நீர்த்து போனது.

- கூட்டணி அமைத்ததில், திமுக வுக்கு ஒரு பரவலான பரிதாப பலம் கிடைத்தது…. ஐய்யோ பாவம் இந்த வயசுல என்ன பாடு படுத்துறாங்க. 63 என ஒரேயடியா கேக்குதே காங்கிரஸ், வேற வழியில்லாம கொடுத்துட்டாங்க திமுக, என அனுதாபம் கிடைத்தது.

- கிடைத்த தொகுதியில் வேட்பாளர் அமைக்காம, கொடும்பாவி எரிக்கிறதுலயே முனைப்பா இருக்கிற காமராஜ் ஆட்சி அமைப்பவர்கள் அடப்பாவமே ரேஞ்சு.

- அதே வேளையில் அம்மா அணியில் அது ஒரு சருக்கு. யாரையும் கலந்தாலோசிக்காமல், அதிரடி 160 வேட்பாளர்களை அறிவித்து, மூன்றாம் அணி என ஊடகத்துக்கு தீனியும் தந்து, திமுகவுக்கு, காப்பிக்கு சீனியும் தந்தார் ஜெ. இன்னும் இந்தம்மா மாறலப்பா என பொது ஜனத்துக்கு அவலும் தந்தார்.

- மூம்முனை போட்டி… ஒரு வேளை ஏற்பட்டு இருந்தால், பேசாமல் எலெக்ஷன் வைக்காமல், ஜம்ன்னு ஸ்கூட் அடித்து, நாமளே ரிசல்ட் டிக்ளேர் செய்திருக்கலாம். அது அவர்களுக்கும் புரிந்ததால், அவசர அவசரமாக சமரசம் செய்து, ஒரணியில் லாவணி பாடினார்கள்.

- சொன்னத கேட்டுட்டு பொட்டி பாம்பா இருந்தாரே நம்ம வைகோ, அவர கழட்டி விட்டுட்டாங்களே என, பொது ஜனம் பீல் பண்ண வைத்து, தன்னை பலவீனமாக்கினார் அம்மா. இந்த 6-7% ஓட்டு எங்க போகுங்கிறது மிகப் பெரிய மில்லியன் டாலர் கொஸ்டின்… மதிமுக வாக்கு யாருக்கு என்பது நமக்கு தெரியாதது பெரிசுல்ல, சம்பந்த பட்டவங்களுக்காவது தெரியுமா…

- கூட்டணி பேரம், தொகுதி அறிவிப்பு எனும் கும்மாளத்திலேயே நேரம் விரயமானதால், மனுத் தாக்குதலில், பிரச்சாரத்துக்கு போவதில் சுணக்கம் ஏற்பட்டுள்ளது. இதன் முக்கிய காரண கர்த்தா தேர்தல் கமிஷன். அப்படின்னாலும், அப்பாடி வாக்காளர் தப்பித்தார்.

- டிவி, இண்டெர் நெட், மொபைல் என தொழில் நுட்பங்கள் மாறியதால் பிரச்சாரம் இவ்வளவு பண்ணினா போதும் என ஆகி விட்டதோ.? பாஸ்ட் புட் பிரச்சாரம்.

- தேர்தல் அறிக்கையில் கிரைண்டர் இலவசம், உங்க வீட்டுல கிரைண்டர் இருக்குதோ, அப்ப என்ன செய்யுறது… ம்….. கிரைண்டர் இல்லேண்ணா மிக்ஸி, என்பது போன்ற ஆப்ஷன் அதகளம் அறிவிப்பு செய்திருக்கிறார்கள்.

- ஆடு கொடுப்போம், அதற்கு அகத்திக் கீரை கொடுப்போம் எனும் பாணியில்…. வைச்சுக்கோ ஃபேனு… இருக்கிறேன் உனக்கு நானு…. என அன் அபிசியலா மைனாரிட்டி ஐய்யாவோட தேர்தல் அறிக்கைய எடிட் செய்து, எடக்கு மடக்கு செய்தும்… நகைப்புக்குறிய இலவசம் அறிவித்தும்…. தேர்தல் அறிக்கை எனும் உன்னத விசயத்தை தரந்தாழ்த்தினார் ஜெ.

- டிவி கொடுத்தாச்சு, மிக்சி கிரைண்டரும் காத்தாடியும் கொடுத்தாச்சு… அடுத்த தேர்தல்ல என்ன அறிவிப்பு வரும்ன்னு எதை நினைச்சாலும் காமெடியாத்தான் இருக்கு. நாட்டோட நிலை, வீட்டுக்கு போடுற பட்ஜெட் மாதிரியில்ல இருக்கு.

- கலகலப்புக்கும், காமெடிக்கும்ன்னே சில ஆளுங்க அரசியல் பண்ணுவாங்க இல்லையா, அவங்களுக்கு இந்த தேர்தலோட அட்ரஸ் காணாம போயிடும் போல இருக்கு.

- யாரு எந்த அணியில இருக்காங்க, எவருக்கு ஓட்டு போடுறதுன்னு பொதுஜனத்துக்கு கன்புயூஷன் கண்டிஷனா இருக்கும்ன்னு தோணுது.

- ரெண்டும் சரியில்ல, ஆனா இருக்குறதுல எது ஓகே எனும் நிலைக்கு மிஸ்டர். பொது ஜனம் தள்ளப்பட்டிருக்கிறார்.

- அறுதிப் பெரும்பாண்மை கிடைக்காதுன்னு கழகங்களே முடிவு செஞ்சுட்ட மாதிரி தெரியுது. பொது ஜனத்துக்கென்ன…. கலக்குங்க.

- இருந்தாலும் முடிவுக்கு பின்னும், இன்னும் அஞ்சு வருசத்துக்கும் பரபரப்பா பேசுற லெவல்ல, முடிவு அமையும்ன்னு தான் தோணுது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக