பக்கங்கள்

காட்சிகள் கவிதையாய்





காட்சிகள் சிறையானால்
நினைவுகளுக்கு காப்பு
காலத்துக்கு ஆப்பு




புகைப்படம் பற்றிய புகைப்படம் பற்றிய என் பழைய கவிதை.











அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சாகும்

குடுக்க வேண்டியதை,
கூட கொடுத்தால்
அதையும் கூரைய பிச்சுக்கிட்டு கொடுத்தால்
இயற்கையும் கூட இடைஞ்சல்








சுடும் வரை சூரியன்,
சுற்றும் வரை பூமி,
போராடும் வரை மனிதன்.
(நன்றி வைரமுத்து)




வெற்றி வேண்டுமா!
போட்டுப் பாரடா எதிர் நீச்சல்,
சரிதான் போடா தலை விதி என்பது வெறும் கூச்சல்













காப்பாற்ற வேண்டிய இறைவன் கணுக்கால் தண்ணீரில்
பகுத்தறிவாளர் கெக்கலிப்பார்


இயல்பிலே
மனிதம் வேறு இறை வேறல்ல,
இயற்கைக்கு,
இயற்கையாய்


வழிபாடும் கோவிலும்
மனிதன் இறை அடையும்
இடமே

அண்மையில்
அடை மழையால்
அண்டை மாநிலத்தில் துயரம்
வேண்டுகிறேன் விரைவில்
நிலையில் சகஜம்

வெங்கிக்கு நோபல் பரிசு

ஏழாம் வகுப்பு படிக்கும் போது, படுக்காளி நண்பன் சொன்னான். ஒண்ணாப்பு ஆரம்பிச்சு, காலேஜ் வரைக்கும் எல்லா புஸ்தகமும் படிச்சு, ஒரே நேரத்தில பரிச்சை வைப்பாங்க, அதுலே பர்ஸ்ட் வந்தா நோபல் பிரைஸ் கிடைக்கும். இன்று சிரிப்போடு அதை நினைக்கிறேன்.

இந்த வருடத்தின் நோபல் பரிசு. வெங்கிட ராமன் ராதா கிருஷ்ணன் அவரது வேதியியல் ஆராய்ச்சிக்காக என ஊடகங்கள், அரசு பாராட்டும்போது தான் நமக்கு தெரிகிறது. சொல்லவே இல்ல, சொல்லாமலே இப்படி ஒரு தேர்வு, போட்டி முடிவு எல்லாமா. சத்தம் இல்லாம நடக்குதே. சரி தெரிஞ்சு கிட்ட்துக்கு அப்புரமாவது என்ன ஏதுன்னு கொஞ்சம் பார்ப்போமே, என யோசித்த்தே இந்த பதிவு.

1900 வருடம் தொடங்கிய சர்வதேச அளவில் இலக்கியம், அறிவியல், சமூகம் சார்ந்த மிக உயரிய பரிசு, அடையாளம். படத்தில் உள்ள ஆல்பிரட் நோபலுக்கு ஒரு சல்யூட், இப்படி ஒரு காரணத்திற்காக தன் சொத்தை எழுதி வைத்த்தற்கு.

இந்திய சரித்திரம் சிலிர்க்கும் நாள். ஈன்ற பொழுதினும் பிரிதுவக்கும் தன் மகனை சான்றோன் எனக் கேட்டாள் நம் இந்திய தாய். நம்ம வெங்கிட ராமன் ராதா கிருஷ்ணன் நோபல் பரிசு வாங்கிய ஒன்பதாவது இந்தியர்.

ரிப்போசோம் தான் உடலில் புரோட்டின் தயாரிக்குது. தாவர, விலங்கிய மனித உயிரையும் சேர்த்து தான்.எல்லோருக்கும் ரிப்போசோம் தான். அதனுடைய தன்மையை பரிமாணத்தை எக்ஸ் ரே மூலமாய் கலாய்ச்சு, படம் போட்ட்து தான் இவர் சாதனை. காய்ச்சல், ஜலதோஷம் எனும் உபாதைக்காக நாம் சாப்பிடும், ஆண்டி பயோட்டிக்க் எப்படி இதனுடம் ஒட்டிக் கொள்கிறது என்பதை விளக்கும் மூலக் கூறும் கண்டுபிடித்ததால் இந்த பரிசு.

இதில் ஆச்சர்யம் உலகில் மூவர் இந்த ஒரே ஆராய்ச்சியில் தனித்தனியாய் ஈடுபட்டு, ஒரே எக்ஸ் ரேயின் மூலமாய் தீர்வும் கண்டுள்ளனர். எனவே எல்லோருக்கும் பரிசு பணம் பங்கிட்டு கொடுக்கப் பட்டு உள்ளது. நம்மாளின் பங்கு 7.3 கோடி.

இது மனிதனை மனித உயிரை இன்னும் கொஞ்சம் நொண்டி அடிக்க
வைக்கும். ஊசலாடும் உயிரை இன்னும் கொஞ்சம் ஊதி விடும்.

சிதம்பரம் பெற்றுத் தந்த சீரிய சிந்தனையாளருக்கு வாழ்த்துக்கள்.இது டிரைலர் தான் இன்னும் என் ஆராய்ச்சி முடிவு பெறட்டும் மெயின் பிக்சர் இன்னும் இருக்கே என்ற அவரது தன்னம்பிக்கையும் தன்னடக்கத்தையும் வியந்து பாராட்டுகிறேன்.

இதை செய்தியாய் வெளியிடும் சர்வதேச பத்திரிக்கை இந்த பதிவை வேறு திசைக்கு கூட்டிச் செல்கிறது.

இந்தியனாய் பிறந்து இன்று அமெரிக்கன் ஆகி விட்டாரே நம்ம வெங்கி. சர்வதேச பத்திரிக்கை எல்லாம் அவரை அமெரிக்கன் என்று தானே கொண்டாடுகிறது.

சிதம்பரத்து மண்ணும் தில்லை அம்பலமும் அன்னியமாகி விட்டதே.
சட்டென இடைமறித்து ஒரு சிந்தனை. இல்லை இதில் இந்தியன் எனும் அடையாளம் தேடுவது தவறோ!!

1979ல் அன்னை திரேசா பரிசை, நமது என்று கொண்டாடிய மனது, அவர் வந்தடைந்த பூமிதானே நம் இந்தியா என பார்க்க மறந்த்தே.
அன்று பார்த்த்து மனித்த்தை தானே. மனித நேயம் தானே.

லோ கிளாஸ் எதிர் வினை

கேக்கதுக்கு ஆளு இல்லைன்னா எது வேணா எழுதுவியா என படுக்காளி சட்டை பிடித்தார் நண்பர் ஒருவர்.

சில தினங்களுக்கு முன் எழுதிய லோ கிளாஸ் பதிவை பார்த்து. ம்... நல்லா இருக்கு தொடர்ந்து எழுது எனும் சில நண்பர்களின் வாழ்த்தோடு வந்த இந்த சட்டை பிடி ரொம்ப பிடிச்சுது.
ரொம்ப ரொம்ப பிடிச்சது.

வெறும் பொருளாதாரத்தின் அடிப்படையில் விளைந்த விரிசல் தான் இந்த லோ கிளாஸ் ஹை கிளாஸ் எல்லாம். நீ சொல்ற மாதிரி ரசனையில் மாறுபாடு என்பது நீ பிடித்த ஜுகல்பந்தி.

காசு கம்மி ஜாஸ்தி அவ்வள்வுதான். ஒரே காசுன்னு சொல்லி பாரு எல்லா ஜனமும் இங்கே தான் இருக்கும்.

அப்புரம் என்ன சொன்ன, நீ லோ கிளாஸ்!! அங்கய இருக்க ஆசைப் படுறேன்னு, பான் பீடா மொழுகிய தரைய பார்த்து காலை தூக்கி மேல வைக்கல. வைச்சல்லே, அப்புறம் என்ன நான் லோ கிளாஸ்ன்னு ஒரு பீலா.

பக்கத்து சீட்டு கை தட்டல்ல புல்லரிச்சுது, அடுத்தவங்க உணர்ச்சி உண்ணோடயும் ஒட்டிக்கிச்சுன்னு ஒத்து உதியிருக்கியே. கேக்காத வசனமும், இளையோடும் இசையின் நைச்சியமும் உணர முடியாமல் நான் தவிச்சுப் போயி கிடக்கிறேன்.

யாரோ ஒருத்தன் ‘என்னைப் பாரு என் அழகைப் பாருன்னு அவன முன்னிறுத்தி கூவுரது உனக்கு குயில் பாட்டா. அடுத்தவங்களுக்கு தொந்தரவு தர்றது நல்லதா. நான் பார்க்க வந்த்து சினிமாவத்தான். உனக்கு வேணும்னா!! இவன் கூச்சல் கேக்கனும்னா அதுக்கு தனியா டிக்கட் வாங்கிக்கோ.

நண்பரின் வார்த்தைகள் அத்தனையும் உக்கிரமும். உண்மையும் நேர்மையும் உடையது.

படுக்காளிக்கு ஒரே குஷி. திட்டுரது தித்திக்குதா.

நான் எழுதுறதே படிக்கிறவுங்கள சிந்திக்க வைக்கவும், அந்த சிந்தையில் இருந்து நான் கத்துக்குறதுக்கும் தான்.

இலக்கு அடைந்த நிறைவில் என் எழுத்துக்கள் பூரிக்கின்றன. நன்றி.

செதுக்கும் சில சிந்தனைகள், வாழ்வை புரட்டிப் போடும் வல்லமையோடு – சிந்தனை 2

உங்களது அசெட் எது, லையபிளிட்டி எது. யோசிக்காம வாழ்க்கை போற ரூட்டில போறது அசெட், இந்த மாதிரி கேள்விகளும், சிந்தனைகளும் லையபிளிட்டி என குதர்க்கமாய் படுக்காளி யோசித்தாலும் நீங்கள் அப்படி இல்லை. நீங்க ரொம்ப நல்லவுங்க.

எத்தனையோ வல்லுனர்கள் பக்கம் பக்கமாய் இதை பற்றி எழுதியிருந்தாலும். மிக எளிமையாய் ராபர்ட் கியோசாக்கி சொல்கிறார். அவரது புத்தகம் ‘ரிச் டாட் பூவர் டாட்’

எது பணத்தை உன் பாக்கெட்டில் போடுகிறதோ அது அசெட். எது உன் பாக்கெட்டில் இருந்து பணத்தை எடுக்கிறதோ அது லையபிளிட்டி.

நம்மில் நிறைய பேர் நாம் குடியிருக்கும் நம் சொந்த வீட்டை அசெட் என்போம். வீட்டை அசெட் என்றால் நீ அசத்து. அவர் புத்தகம் கல கல வென சிரிக்கிறது நம்மை பார்த்து.

அவர் விளக்கத்தில் அது லையபிளிட்டி.

வருடா வருடம் சொத்து வரி, பெயிண்ட் அடிக்கணும், கரெண்ட் பில், இப்படி உங்கள் பாக்கெட்டில் இருந்து பணம் எடுக்குமே அல்லாது எப்போவாவது பணம் போட்டுருக்கா. அந்த வீட்டை விற்கும் வரை. பின்ன என்ன அது சொத்துதான் என நீங்கள் வரிஞ்சு கட்டி வாதாட வந்தால், கொஞ்சம் பொறுமை. அதன் அசல் பற்றி ஒன்றும் சொல்லவில்லை. அது தரும் ரிட்டேர்ன்ஸ் பற்றிதான் பேசுகிறோம்.

(அசலையும் வட்டியையும் குழப்பாதே – இதுவும் அவரது சூப்பர் பாயிண்டு. அதை பற்றியும் சொல்கிறேன். அது வரை பொறுமை வேண்டுகிறேன்).
அவர் சொல்லும் மிக அடிப்ப்டை விசயம் இதுதான். சொத்தை பெருக்கு. கடனை குறை. அவ்வளவுதான்.

ஒரு பேப்பர் பேனா எடுப்போம். நமது செலவு ஒரு பக்கம், வரவு ஒரு பக்கம் எழுதி எது கூடுதல் எது குறைவு என பார்த்தால் நம் உண்மை நிலை பளிச்சிடும் என்கிறார்.

இது என்னை ரொம்ப யோசிக்க வைத்து வாழ்வில் சில மாறுதலும் செய்த்து.
காலம் பூரா ஜல்லியடித்து நமக்கு நிரந்தர வருமானம் தரும் ஒன்றரை அணா பிசினஸ் இல்லையே எனும் போது நே! என்றிருக்கு.
உதாரணம், ஒரு லட்ச ரூபாயில் ஒரு சோடா கடையோ, பீடா கடையோ துரந்தா கூட மாதம் ஒரு காசு லம்பா வரும். ஆனா நம்ம நிலம கைய ஊணி கரணம் போட்டு மாசமானா சம்பளத்த எதிர்பாக்கிற ஒரு ஸ்திர தன்மை தான் இருக்கு,

ரொம்ப லேட் ஆச்சோ! என்ற புலம்பலை தள்ளி விட்டு, தீவிரமா இன்னைக்கு யோசிச்சா கூட இதுக்கு ஒரு தீர்வு நிச்சயம் நாளை இருக்கு..

அழகு.... பணம்.... கடவுள்....

அழகு என்பது என்ன? நிரந்தரமானதா?

ஆபத்தில்லாதது, சமூகம் அங்கீகரித்தது, சந்தோசம் தருவது அழகு. நிரந்தரமானதா என்பது கொண்டவரின் கோட்பாடு பொறுத்த்து.

செந்தில் (கவுண்டமணி) புகைப்படம் ஆப்பிரிக்காவில் பெண்தேட அனுப்பினால் நிச்சயம் ‘மாப்பிள்ள நச்சுன்னு இருக்கார்’ என சிலாகிக்கலாம். அதுவே வட நாட்டுக்கோ, அமெரிக்காவுக்கோ அனுப்பினால் ‘ரிஜெக்டட் தான்’

அரிசி சாக்கு மூட்டய இரண்டு பிடி பிடித்து, மேல் பிடிக்கு மீசை, தலை முடி வைத்த மாதிரி உடல் கட்டு மோகன் லாலுக்கு. சேர நாட்டின் எல்லா பெண்களின் கனவிலும் ஆதர்சன நாயகனாய் ஐம்பது வயதிலும் வலம் வருவது எந்த கணக்கில் சேர்த்தி.

‘கல்யாணம் பண்ணுற முதல் அஞ்சு வருசத்துக்கு தான் இந்த அழகு வனப்பு எல்லாம். அப்புறம் எல்லாரும் ஒண்ணு போலத்தான் என்கிற விடல பையன் கமெண்டை எங்க போய் சொல்றது.

பணம் அவசியமா?

கடலை முட்டாய் வாங்க பணம் தேவை. கிரெடிட் கார்ட் அக்ஸெப்ட் செய்வது இல்லை.

கடல் காற்று வாங்கவும், அஸ்தமனம் பார்க்கவும் காசு இல்லை.

கடவுள் உண்டா?

ஆஹா! பயங்கரமான கேள்வியாச்சே.

இது ஒயாத சர்ச்சை, தீர்வு இல்லாத கேள்வி.

எத்தனை மகான்களும் தேவ குமாரனும் வந்தால் கூட, ஒ.கே. ஒத்துக்குறோம் என ஒதுங்க முடியாத ஒன்லைனர்.

எந்த சீலமான் டாப்பையா வந்தாலும் முடிவு சொல்ல முடியாத வெட்டி மன்றம். சரி படுக்காளியும் தன் பங்குக்கு சொல்கிறேன். (ஆனா! பாஸ் எஸ்ஸே டைப் கொஸ்டினுக்கு ஒன் வேர்ட் ஆன்ஸர் பதில் சொல்ல சொன்னா எப்படி...)

கடவுள் இருக்கு என்று சொல்பவன் முட்டாள் எனும் பகுத்தறிவாளர்கள், கடவுள் இல்லை என்பவன் மூர்க்கன் என்பதை ஒப்புக் கொள்வார்களா.

ஆராயாமல் அனுபவிக்காமல் அடுத்தவன் சொன்னதை கேட்டு ஆமாஞ்சாமி போடும் ஆன்மிக வாதியை புறந்தள்ளுங்கள் என்பவரே, புஸ்தகம் படிச்சுட்டு, எல்லாம் தெரிந்ததாய் தம்பட்டம் அடிக்கும் அரை வேக்காடை அடுப்பில் போடுவோம் என்றால் கோபப் படாமல் ஒத்துக் கொள்வீர்களா.

கண்டவர் விண்டிலர், விண்டவர் கண்டிலர் என்றவர் நாம் விண்டினானும் போதே நமக்கு இறை பற்றி ஒண்ணும் தெரியாது என்கிறார். இது எப்படி.
சிறு வயதில் பெற்றோர் எனும் பாதுகாப்பில் அரவணைப்பில் வளர்ந்து, அவர் ஆதரவை எதிர் பார்க்கும் குழந்தை மனம் வளர்ந்த பின்னும் அதையே தேடி அலைவது என்பார் உளவியல் விற்பன்னர்.

இறை பற்றி விளக்க முற்படும் போதே சிக்கல் சிஞ்சினக்கா ஆடுகிறது. ஆழ்ந்து அகன்ற நுண்ணியனே என்பது கவித்துவமாய் இருக்கலாம், பொருள் அளவில் வெந்தும் வேகாத ஆப்பாயில்.

குருடான நால்வர் யானை பார்த்து சொன்ன கதை தான், ஆன்மிகம் பற்றி விளக்க நாம் முற்படும் போது.

கடவுள் இருக்கு என ஒத்துக் கொண்ட இட்த்தில் கூட கோஷ்டி தகராறு. த்வைதம், அத்வைதம். ஆமா இருக்கு என்பதில் கூட, உனக்கு உள்ள இருக்கு எனும் விவேகானந்தர் கூருப், இல்லை வெளிய எனச் சொல்லும் ஆழ்வார் கூருப் இந்த பக்கம்.

இருக்கு இல்லை என்ற எந்த நம்பிக்கையோட நீ தேடினாலும் நீ மடையன் என சீறும் ஜே.கே. யும் உண்டு. மனம் போன போக்கில் தேடும் மகரிஷி மார்க்கம்.

எளிதாய், இது பற்றி விளக்க முயற்சித்தால்.

யோக நிலை என்பது மனதும், உடலும் ஒரு சேர தர்க்கம் இல்லாமல் நிற்கும் ஒரு நிலை. சொன்னதை கேட்காத மனமும் உடலும் வேலைக்கு ஆவாது. நட்பான உடலும் மனமும் ஆரம்பம். பின்னர் தியானம். தியானம் என்பது உடல், மனம், பகுத்தறியும் புத்தி எனும் மூன்றையும் அடக்கிய (மூன்றும் கண் மூடி, வாய் பொத்தி நிற்கும் பரிதாவமான) ஒரு நிலை. ஆன்மாவை தரிசிக்கும் ஒரு கட்டம்.

நான் என்பது உடல் இல்லை, மனம் இல்லை, புத்தி இல்லை. சரி பின்னே என்ன, காலம் கடந்த, பொறுப்புக்கள் கடந்த, உலகம் கடந்த ஒரு குட்டி ஒளி. ஆன்மா. நம் ஆன்மாவை கண்டபின் ஆன்மாவின் சூப்பர் ஸ்டார் சூப்பர் ஆன்மாவை காணுவது இறையியம். கண்டதை வெளியில் / மொழியில் சொல்வது பெரிய உட்டாலங்கடி வேலை.

டேன் பிரவுன் தனது கதை ஒன்றில் இதே கேள்விக்கு ஒரு கதாபாத்திரத்தின் சிந்தனையாய் இதை சொல்லுவார்.

‘இறைவன் இருக்கிறாரா இல்லையா என்பதை தெரிந்து கொண்டால் கூட அதை புரிந்து கொள்ள முடியாது என நினைக்கிறேன். மேலும் அதை என் வாழ் நாளில் தெரிந்து கொள்வது மிகவும் சிரமம் போல தோன்றுகிறது’

நானும் ததாஸ்து.

காதல்

காதல் மனிதனுக்கு அவசியமா?

இல்லையா பின்ன, அப்புறம் நான் எப்படி குப்புற படுத்து கவிதை எழுதுவது. விட்டத்த பார்த்து கனா காண்பது,லவுசு மூடுல உலகத்தயே மறந்து அலைந்து திரிவது.

ஒன் மினிட், கேள்விய சரியா வாசிக்கட்டும்.

ம்.... காதல் !!!! ????

காதல் பற்றிய விளக்கம் தான் எனை குழப்புகிறது. அதீதமான பிரியம் காதல் எனலாமா.

கல்மிஷம் இல்லாமல் யாருக்கு விட்டுக் கொடுக்க முடியுதோ அங்கு காதல் இருக்கிறது என்று எழுத்துச் சித்தர் பாலா சொல்லுவார். ரசாயண சேட்டை, எக்ஸ்ட்ரோஜன்களின் எழுச்சி என்பார் சுஜாதா.

காதல் மனிதருக்கு இடையில் உறவாடலில் உள்ளதா, அன்றின் மனித மனதில் உள்ளதா.

காதல் என்பது பெரும்பாலாக நம் வாழ்க்கை வழக்கில்/ விளக்கத்தில் திருமணத்துக்கு முன் ஆண் பெண்ணுக்கும் இடையில் பூப்பதையே குறிப்பிடுகிறோம்.

இல்லாமல் கல்யாணத்துக்கு பின் மனைவியோடு காதல், தொழில் காதல், இலக்கு/ இலட்சிய காதல் என சேர்த்துக் கொண்டால். அப்பு அது தப்பு என்றோ ஆஹா அது உப்பு அதை சப்பு என்றெல்லாம் எழுதி விடலாம்.

எக்கச்சக்க காதல் இருப்பதாலும், காதல் அவசியமா என்ற கேள்வியிலே, பதில்கள் இரண்டு சாய்ஸாய் இருப்பது தான் குழப்பத்தின் காரணகர்த்தா.

செதுக்கும் சில சிந்தனைகள், வாழ்வை புரட்டிப் போடும் வல்லமையோடு

எண்ணம் சொல்லாகும்
சொல் செயலாகும்
செயல் பழக்கமாகும்
பழக்கம் குணாதிசயமாகும்
குணாதிசயம் நீயாவாய்

- (ஜெய் குருதேவ் பூஜ்ய ஷ்ரீ ஷ்ரீ ரவி சங்கர்)

எண்ணங்கள் சில நம் வாழ்வின் பாதையையே மாற்றி அமைக்கும் வல்லமை உள்ளது.

அத்தகைய ஒரிறு சிந்தனைகள் என் வாழ்வையும் புரட்டிப் போட்டது.

மூலம் நம் தமிழுக்கு அன்னியமானாலும், விளைவு நம் மனித வாழ்வு என்பதால் தங்களோடு பகிர்ந்து கொள்கிறேன்.

சிந்தனை 1 :
ராஜா என்றோரு பெயரை வைத்துக் கொள்வோமே. பள்ளி/ கல்லூரி நாட்களில் அவன் உங்கள் பரம எதிரி. அவனுக்கும் தங்களுக்கும் ஏழாம் பொருத்தம். அவனை பார்த்தாலே எரிச்சல் வரும், அப்படி ஒரு பிரகஸ்பதியை பள்ளி/ கல்லூரி முடிந்த பிறகு நீங்கள் பார்க்கவே இல்லை. வருடம் ஒரு பத்தை உருட்டி விட்டது என்றும் வைத்துக் கொள்ளலாமே.

நல்ல வேலை, குடும்பம் என நீங்கள் செட்டிலாகி விட்டீர்கள். பழைய நினைவு என்பது இப்போதும் இனிமையாகவே உணர்கிறீர்கள்.

இன்று தற்செயலாய் ரோட்டில் அவனை நீங்கள் பார்க்கிறீர்கள்.

முதலில் ஒரு சந்தேகம். அவனா இது. அவன் தானே. அதே ஒடிசல் தேகம், இன்னும் கருத்து இருக்கிறான். அவன் தான். சந்தேகம் இல்லை. இப்போ என்ன செய்ய. பகைமை அப்போது தானே, இன்னுமா. பேசலாமா, இல்லை வேண்டாமா என மனதில் ஒரு தர்க்கம். புன்னகைக்கலாமா, இல்லை அவன் என்ன செய்வான். சரி இருக்கட்டும் அவன் என்ன செய்கிறான் என பார்ப்போம். தீர்மானம் இல்லாமல் ஒவ்வொரு தப்படியாய் நடந்து செல்கீறிர்கள்.

நெருங்கி விட்டீர்கள்.

எதிர்பாராத்து நடக்கிறது. அவன் பாய்ந்து உங்கள் சட்டையை பிடித்து கன்னத்தில் சப்பென்று அடிக்கிறான்.

அவ்வளவு தான் உங்களுக்கும் கோபம் பொத்துக் கொண்டு வர, திருப்பி தாக்க கை முஷ்டி மடக்குகீறீர்கள். அப்போது அவன் கூட நடந்து வந்த சிலர் அவனை அமுக்கிப் பிடிக்க, ஒருவர் உங்கள் அருகில் வந்து உங்கள் கை பிடிக்க, சாலை விழி மேல் வைத்து பார்க்கிறது.

’சாரி சார், இவருக்கு மன நிலை சரி இல்லை. ஆஸ்பத்திரிக்கு தான் கூட்டிக்கிட்டு போறோம். தப்பு நடந்திருச்சு, மன்னிச்சுருங்க’

நண்பர்களே! நீங்கள் என்ன செய்வீர்கள்.

சட்டென்று கை உதறி, பரிதாவமாய் அவனை பார்ப்பீர்கள் அல்லவா. எதாவது உதவி செய்ய முடியுமா என அவசரமாய் சிந்திப்பீர்கள் அல்லவா,

ஒரு கேள்வி.

அது எப்படி. ஒரு தகவலில் உங்கள் சிந்தனை அதன் தொடர்புடைய செய்கை மாறி விட்ட்து.

கோபம், ரவுத்திரம் என பொங்கியது ஒரு பத்து வார்த்தைகளில் இரக்கம், பச்சாதாபம் ஆக மாறி விட்டது.

இப்போதும் அவன் உங்களை அடிக்க திமிறிக் கொண்டு இருந்தாலும், உங்கள் பார்வை கனிவாகத்தானே உள்ளது.

இது என்ன விந்தை.

ஸ்டிபன் ஆர். காவி தனது புத்தகத்தில் இதையே ’பாரடைம்’ / ‘பாரடைம் ஷிப்ட்’ எனக் குறிப்பிடுகிறார்.

நமது பார்வையில் அல்ல உணர்வில் தான் எதுவுமே விளக்கப் படுகிறது. எந்த செய்கையும் அதை குறித்த நமது விளக்கமே நிர்மாணிக்கிறது.

சரி, ஒத்துக் கொள்கிறேன். இது என் வாழ்வை மாற்றி அமைக்குமா. கும்...

1. இனி சாலையில் அவசரமாய் செல்லும் போது நம்மை இடிப்பது போல சென்ற அந்த நபரை பார்த்து தூசன (கெட்ட) வார்த்தையால் வைய வேண்டாம். ஒரு நிமிடம் ஏன் இப்படி செல்கிறான். என்ன பிரச்சனை. சரி, எதோ பிரச்சை. இந்த சிந்தனை போதுமானது. நிச்சயமாய் அடுத்த்தாய் இப்படித்தான் நினைப்போம். என்ன அவசரமோ போகட்டும் என விட்டு விடலாம்.

அட போடா. தோத்து கொடுக்க சொல்றீயா! உப்பு சப்பு இல்லாம வாழ சொல்றீயா, என்ற நினைப்புக்கு இல்லை இந்த கோபமும் கெட்ட வார்த்தையும் நமது உடலையும் மனதையும் தானே சீரழிக்கும்.
ஒரு தகவல் நம் சிந்தனையை மாற்றும் வல்லமை பெற்றது என புரிந்தாலே மிகப் பெரிய மாறுதல் நமக்குள் நிகழும்.

வெறும் பதிவாய் இல்லாமல், அவசர அவசரமாய் வாசித்து முடித்து விட்டு விடாமல், ஒரு நிமிடம் இதை பற்றி யோசித்தால் இன்னும் பிரமாண்டமான விடயம் தங்களுக்கு தோன்றும். சிரம்ம் இல்லை என்றால் அதையும் பின்னூட்டமிடுங்கள்.

அடுத்த இது போன்ற ஒரு தகவலுடன் நான் விரைவில் வருகிறேன்.