பக்கங்கள்

ஆச்சி படுக்காளி அஞ்சரைப்பெட்டி 17/11/09

கல கல வென சிரித்தபடி படுக்காளி உள்ளே வர, புகைப்பட்த்தில் இருந்து ஆச்சி எட்டிப் பார்த்தார்.

ஆச்சி : என்னடா, கடுகு வெடிச்ச மாதிரி ஒரு சிரிப்பு, சொல்லிட்டு சிரிச்சா, நாங்களும் சிரிப்போம்ல.

படுக்காளி : ரோட்டுல ஒரு சுவாரசியம், ரெண்டு லவ்வர்ஸ் வாயால பேசாம கண்ணால பேசிக்கிட்டு இருந்தாங்க,
ஆச்சி : எது, நம்ம கமல்ஹாசன் பேசும் படம் மாதிரி.... ரோட்டில பராக்கு பார்த்தியா, மேல சொல்லு
படுக்காளி : அந்த பஸ் ஸ்டாப்புல, நான், அந்த லவ்வர்ஸ் பஸ்ஸுக்காக காத்துக்கிட்டு இருக்கோம். எங்கள கடந்து போன ஒரு ஆசாமி சத்தம் போட்டு தனியா சிரிச்சுக்கிட்டே போனாரு.

ஆச்சி : ஐயோ... பாவம்,

படுக்காளி : நானும் அப்படித்தான் நினைச்சேன், ஆனா அந்த பொண்ணு கண்ண சுழற்றி, இட்து பக்கம் காட்டி அந்த லவ்வர பார்த்துச்சு. லவ்வர் பையன் திரும்பி பார்த்தான். நானும் அங்க என்ன இருக்குன்னு பார்த்தேன். அது ஒரு பேங்க் ஏடிஎம். ஒண்ணும் புரியல. திரும்பி அந்த பையன பார்த்தேன். அவன் வாய் விட்டு சிரிச்சான்.
ஆச்சி : என்னடா இது, எனக்கும் தட்டல, உனக்கும் முட்டல , லவ்ஸ் மூடுல இருந்தாத்தான் விளங்குமோ

படுக்காளி : மறுக்கா பார்த்தா புரிஞ்சுது, OUT OF ORDER என ஏடிஎம் ல ஒட்டி இருந்துச்சு. ஓஹோ... குறுக்கால நடந்து போனவன் புத்தி OUT OF ORDER ன்னு நினைச்சு சிரிச்சாங்களோ, இது தானான்னா நான் நினைக்க, இல்லயாம், தரி...கின... தோம்...இனிம தான் இருக்கு
ஆச்சி : ரைட்டு விடுறா வண்டிய
படுக்காளி : இப்ப அந்த பொண்ணு சிரிச்சா
ஆச்சி : பொம்பள சிரிச்சா போச்சு புகையில விரிச்சா போச்சு
படுக்காளி : எவ சிரிச்சா
ஆச்சி : ஏல, பழமொழி கேட்டா ரசிக்கணும், துளாவாத,
படுக்காளி : வாய் விட்டு சிரிச்சுக்கிட்டே அந்த பொண்ணு கண்ண தூழாவி, இன்னும் கீழ காட்டுச்சு, அங்கன ஒரு நோக்கியா ப்ளூ டூத் விளம்பரம்.
ஆச்சி : இப்ப புரியதுடா. போனவன் தானா சிரிக்கல, நீலப் பல் தான் பல் காட்டுச்சுங்கிறா.
படுக்காளி : காதல் ரொம்ப இனிமையானது ஆச்சி
ஆச்சி : இல்லயா பின்ன, பேசாத மொழிகளும், தூது இலக்கியமும் தனி ரகம்
படுக்காளி : என்னது ஆச்சி தூதுவளையா.... செடிதான
ஆச்சி : மரம், இடுப்பு வேட்டிய இட்லி தூணியாக்குவடா நீ. எம்.ஜீ.யார் பாடுவாரே

பறக்கும் பந்து பறக்கும் அது பறந்தோடி வரும் தூது

படுக்காளி : ஆ...அதுவா. நம்ம தெக்கச்சி தமிழச்சி பாடுவாளே.

மேகத்த தூது விட்டா, திசை மாறிப் போகும்னு,
தாகமுள்ள மச்சானே தண்ணிய நான் தூது விட்டேன்னு

ஆச்சி : அதேதாண்டா, தமிழ் இலக்கியத்துல தூதுக்குன்னு ஒரு பிரிவு வைச்சு ரசிச்ச காலம் உண்டு. இப்போ தூத தூக்கிட்டாங்களேடா....

படுக்காளி : வெக்கப்படுற ஆணும் பெண்ணும் நேரடியா பேசாம, ஏதாவது ஒண்ணுகிட்ட தொங்கிகிட்டு இருந்த காலம் அது. இப்போ எல்லாம் வெக்கம் விட்டுப் போச்சு

ஆச்சி : இருக்கலாம்டா, இன்னிக்கு உள்ள நவ நாகரிக யுவதிகிட்ட அச்சம், மடம், நாணம், பயிற்பு எல்லாம் சொல்லி எப்படி புரிய வைக்கிறது. அதுவும் இல்லாம, தொடர்பியல்ல எங்கேயோ போயிட்டோம். நிலவ தூது விடுற நேரத்தில எஸ். டி. டி. யோ ஐ.எஸ்.டி. யோ போட்டா போறாது.

வீட்டுக்குள்ளே பெண்ணை பூட்டி வைப்போம் என்ற விந்தை மனிதர் தலை குனிஞ்சாச்சோ.... நல்லது தானே, வெக்கம் இல்லாம, துணிச்சலா, பெண் இருந்து புட்டா, ஆரோக்கியந்தானடா......

படுக்காளி : ஆச்சி, நம்ம அஞ்சரைப்பெட்டி, ஏடிஎம் ல தொடங்கி, தூத தொட்டுட்டு பெண்ணடிமைல வந்து நிக்குது எக்ஸ்பிரஸ் மாதிரி. தூது இலக்கியத்த தூக்கிட்டாங்க, அதுக்கு காரணம் இரண்டு, ஒண்ணு வெக்கம் விட்டு போனது, இன்னொன்னு தொடர்பியல் வளர்ச்சி.

ஆச்சி : இருந்துட்டு போட்டுமே.... ஆடு மேச்சா மாதிரி அண்ணனுக்கு பொண்ணு பாத்த மாதிரி.... நகைச்சுவையோட சில நல்லதையும் யோசிச்சா நல்லதுதானேடா....

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக